News Image

மாபெரும் நற்கருணை மாநாடு 2026, வரும் மார்ச் 14ஆம் திகதி

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

யேர்மன் பணியகத்தின் மாபெரும் நற்கருணை மாநாடு 2026, வரும் மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை, காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை,
Essen நகரில் உள்ள Gymnasium am Stoppenberg, im Mühlenbruch 51, 45141 Essen என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

இந்த நாள் நடைபெறும் நற்கருணை மாநாடு, காலை 10.00 மணிக்கு நற்கருணை வழிபாட்டுடன் தொடங்கும்.
அதன் பின்னர், நற்கருணையை மையமாகக் கொண்ட மூன்று முக்கிய கருத்தரங்குகள் நடைபெறும்:

• நற்கருணையின் வழிபாட்டியல் – அருட்தந்தை சுரேன்
• நற்கருணை ஆன்மீகம் – அருட்தந்தை நிதர்சன்
• நற்கருணையின் விவிலியப் பின்னணி – அருட்தந்தை ஜெகன்குமார்

ஒவ்வொரு அமர்விலும் கருத்துப்பகிர்வு மற்றும் கேள்வி–பதில் நேரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டின் நிறைவாக திருப்பலி நடைபெறும்.

மேலும் தகவல்களுக்கு: info@tamilcatholicdaily.com தொடர்பு கொள்ளலாம்.

முந்தைய அடுத்தது