அன்னையின் செய்தி 25.12.2025
அன்பான பிள்ளைகளே! இரக்கத்தின் நாளான இன்று, விசேடமாக நான் உங்களை இயேசுவிற்கு கையளிக்க அழைக்கிறேன். எனது அன்பான பிள்ளைகளே, உங்களது காயங்கள் மற்றும் வலிகள், உங்கள் கடந்த காலம் மற்றும் எதிர்காலம் மற்றும் உங்கள் வாழ்வு அனைத்தையும் இயேசுவிடம் விட்டுவிடுங்கள். எனது பிள்ளைகளே, உங்களை வாழ்வை முழுமையாக இயேசுவிடம் கையளித்தால் மட்டுமே நீங்கள் பெரிய வெகுமதிகளைப் பெற்றுக்கொள்வீர்கள். இயேசுவிற்கு நீங்கள் எவ்வளவு பெறுமதியானவர்கள் என்பதையும் அவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளவும் செபியுங்கள். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.