அன்னையின் செய்தி 25.10.2025
அன்னையின் செய்தி 25.10.2025
“அன்பான பிள்ளைகளே! எல்லாம் வல்ல இறைவன் அவரது செல்வங்களை உங்களுக்குக் கொடுத்து, உங்களை சமாதானத்தின் வழியில் நடத்த என்னைப் பணித்துள்ளார். பலர் பதிலளித்து செபிக்கின்றனர், ஆனால் பல மானிடர்கள் சமாதானத்தை விரும்பாததுடன், இறைவனையும் அவர் அன்பையும் கண்டறியாதவர்களாக உள்ளனர். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபிப்பதுடன் அன்பு செய்யுங்கள், செபக் குழுக்களை ஏற்படுத்துங்கள், இதனால் நீங்கள் உங்களுக்கு நன்மையை தொடங்கிவைப்பீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் மனம்திரும்பலுக்காக செபிக்கிறேன். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி“