திருச்சபை ஏடுகள்
மனித குலத்தின் மீட்பர் கிறிஸ்து இயேசு விண்ணகத்திற்கு எழுந்தருளுமுன் தாம் தேர்ந்தெடுத்த திருத்தூதர்கள் உலக நாடுகள் அனைத்திற்கும் நற்செய்தியின் ஒளியைக் கொண்டுவர வேண்டும் எனக்கட்டளையிட்டார்...
தூய திருச்சபையில் உயிரோட்டத்தோடும் செயல் முறையிலும் தம்மையே கனிவுடன் வெளிப்படுத்த கிறிஸ்து ஒருபோதும் தவறியதில்லை...
இக்காலங்களில்தான் கிறிஸ்துவின் மணமகளாகிய திருச்சபை உண்மையின் ஆசிரியராகவும்...
இன்று திருச்சபை பெரும் மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற, குழப்பநிலையிலுள்ள ஒரு சமுதாயத்தைக் காண்கிறது. சமுதாயம் ஒரு புதிய அமைப்புப் பெற விரைந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் திருச்சபை மிகப் பெரிய பொறுப்புகளைத் தன்மேல் சுமக்க நேரிட்டுள்ளது. பெருங்கவலைகளால் அலைக்கழிக்கப்பட்ட வரலாற்றுக் காலங்களிலெல்லாம் திருச்சபை இவ்வாறு கனமான பொறுப்புகளை ஏற்றுவந்துள்ளது என்பது நாமறிந்ததே. நற்செய்தியின் ஆற்றல் என்றும் நிலைத்திருப்பது, உயிருள்ளது, தெய்வீகமானது. இவ்வாற்றலை இன்றைய உலகுக்கு ஊட்டுவதுதான் திருச்சபையின் கடமையாகும். இன்றைய உலகம் அறிவியல் துறையிலும், தொழில் நுட்ப துறையிலும் தான் அடைந்துள்ள வெற்றிகளிலேயே பெருமைப்பட்டு வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் சமூக வாழ்வைப் பாதிக்கும் பல தாக்கங்களுக்கும் ஆளாகியுள்ளது. சிலர் கடவுளுக்குப் புறம்பாக இச்சமூக வாழ்வை மாற்றியமைக்க வழி தேடுகிறார்கள். ஆக, இன்றைய மக்கள் இவ்வுலகப் பொருள்களைப் பொறுத்தமட்டில் முன்னேறியுள்ளதற்கேற்ப அருள்நெறி நலன்களைப் பொறுத்தமட்டில் முன்னேறவில்லை எனக் காண்கிறோம். இதிலிருந்து நாம் அறிவது: அழியாப் பொருள்களைத் தேடுவதில் மக்கள் அதிக ஆர்வமற்று இருக்கின்றனர்.
மாறாக தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக இன்று எளிதாகக் கிடைக்கின்ற வசதிகளை அனுபவிக்கவே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். மேலும், வன்மையாகக் கடவுளை மறுப்போரின் இயக்கம் உருவாகியுள்ளது. உலகமெங்கும் பரவி வருகிறது. இது முற்றிலும் புதிய, ஆனால் ஆபத்தான ஒன்று என்றே கருதப்பட வேண்டும்.
இப்போது எடுத்துரைத்த துயரச் சூழ்நிலைகள், நாம் விழிப்பாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. பொறுப்புணர்வோடு செயல்பட நம்மைத் தூண்டுகின்றன. எதிர்காலத்தில் நம்பிக்கை இழந்துவிட்ட ஒருசிலர் இவ்வுலகம் முழுவதையுமே இருள் சூழ்ந்துவிட்டதாவே பார்க்கின்றனர். நானோ, மனித குலத்தின் இறை மீட்பர்மேல் உறுதியான நம்பிக்கையை அறிக்கையிட விரும்புகிறேன். இவர் தம்மால் மீட்கப்பட்ட உலகத்தை விட்டுவிட்டு மறைந்து போய்விடவில்லை. ''காலத்தின் அறிகுறிகளை'' (மத் 16:3) நாம் வேறுபடுத்தி அறிந்துகொள்ள வேண்டும் என அவர் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இவ்வறிவுரையை நாம் பின்பற்றுகிறோம். அப்போது இத்தகைய காரிருள் சூழ்ந்த நிலையிலும் திருச்சபைக்கும் மனித குலத்திற்கும் நற்காலம் தோன்றப் போகிறது எனக் காட்டி நிற்கும் அறிகுறிகளைக் காண்கிறோம்.
உண்மையிலேயே, இன்று அடுத்தடுத்து எழும் பயங்கரப் போர்களும், ஆங்காங்கே பற்பல கொள்கைகளால் விளையும் அருள்வாழ்வுக்கு எதிரான தீங்குகளும், நீண்ட காலமாக மக்கள் அனுபவித்துவரும் துன்ப துயரங்களும் நமக்குப் பல பாடங்களைக் கற்பிக்காமல் இல்லை. மேலும் தன்னையே அழிக்கவல்ல பயங்கரக் கருவிகளை உருவாக்கும் ஆற்றலை மனிதருக்கு அளித்துள்ள அறிவியல் முன்னேற்றம் பெருங்கவலை தரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது. தங்கள் ஆற்றல்கள் வரம்புக்குட்பட்டவை என்பதை அவர்கள் அதிகத் தெளிவாக அறிந்துகொள்ளச் செய்கிறது. அமைதியை விரும்பி நாட அவர்களைத் தூண்டுகிறது. அருள்நெறி நலன்களின் முக்கியத்துவத்தை மதிக்கவைக்கிறது.
மேலும், அறிவியல் முன்னேற்றமானது தனிமனிதர், இனங்கள், நாடுகள் ஆகியவற்றிற்கிடையே அதிக நெருக்கமான ஒத்துழைப்பையும் பிணைப்பையும் ஊக்குவித்துள்ளது. பற்பல இன்னல்களுக்கு நடுவிலேயும் மேற்கூறிய ஒத்துழைப்பையும் பிணைப்பையும் மனிதகுலம் முழுவதுமே நாடுகிறது எனலாம். திருச்சபை தன் திருத்தூதுப் பணியை அதிக எளிதாகவும், பயன்தருமுறையிலும் நிறைவேற்ற மேற்வுறியவை எல்லாம் துணை செய்கின்றன. ஏனெனில், திருச்சபையின் மேன்மையான இப்பணியை முன் அறியாதிருந்த பலரும், இன்று தங்களுடைய ஆழ்ந்த அனுபவத்தின் மூலம் திருச்சபையின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டுள்ளனர்.
திருச்சபையை நோக்கினோம் என்றால், அது மேற்கூறிய காரியங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்றுவிடவில்லை. மாறாக, அது மக்களின் வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், சமூகப் புரட்சிகள் ஆகியவற்றை வௌ;வேறு கட்டங்களில் கவனித்து வந்துள்ளது. பருப்பொருள் முதன்மைக் கொள்கை மற்றும் கத்தோலிக்க நம்பிக்கையை மறுக்கும் கொள்கை அமைப்புக்களை உறுதியாக எதிர்த்து வந்துள்ளது. கடைசியாக, திருத்தூதுப் பணிக்கும் இறைவேண்டலுக்கும் எல்லா மனித ஈடுபாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் மாபெரும் ஆற்றல் தன்னகத்திலிருந்தே வழிந்தோடச் செய்துள்ளது. தங்கள் பணியை இன்னும் தகுந்த முறையில் நிறைவேற்றத் தங்களையே அறிவாலும் நற்பண்புகளாலும் தயாரிக்கும் திருப்பணியாளர்களையும், திருச்சபை அமைப்புக்குள், குறிப்பாக திருச்சபை ஆட்சியாளரோடு சேர்ந்து தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி அதிகம் உணர்ந்துவரும் பொதுநிலையினரையும் இவன் கண்முன் கொண்டுள்ளோம். இன்று கிறிஸ்தவ சமூகங்கள் பலவற்றைப் பெருந்துன்பங்கள் மிகவும் வருத்துகின்றன. இச்சமூகங்கள் வியக்கப்பட வேண்டிய பற்பல ஆயர்கள், திருப்பணியாளர்கள், பொதுநிலையினர் ஆகியோரைத் தோற்றுவிக்கின்றன. நம்பிக்கையின்மேல் தாங்கள் கொண்ட உறுதிப்பாட்டின் காரணமாக இவர்கள் எல்லாவிதக் கொடுமைகளையும் ஏற்றுக்கொள்கின்றனர். திருச்சபையின் ஏட்டில் போன்ற எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவர்களோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு இவர்கள் கிறஸ்தவத் திட்டத்திற்குச் சான்று பகர்கிறார்கள். ஆகவே, உலகம் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது என்றால், கிறிஸ்தவ சமூகமும் பெருமளவில் மாற்றமடைந்து புத்துருப் பெற்றுள்ளது. அதாவது திருச்சபை தன் சமூக அமைப்பிலே அதிக ஒன்றிப்பைப் பெற்றுள்ளது. அறிவுப் பூர்வமாக ஊக்கம் பெற்றுள்ளது. உள்ளார்ந்த விதமாகத் தூய்மை அடைந்துள்ளது. இவ்வாறு எதையும் எதிர்த்து நிற்க வலிமை பெற்றுள்ளது.
ஒரு பக்கத்திலே அருள்நெறி நலன்களின் குறையால் வாடும் உலகத்தையும் மற்றொரு பக்கத்திலே உயிரோட்டம் நிரம்பிய கிறிஸ்துவின் திருச்சபையையும் நாம் பார்க்கின்றோம். தகுதியில்லாதவனாகிய நான் திருத்தந்தைப் பணியை ஏற்றுக்கொண்ட உடனேயே இறைப் பராமரிப்பின் தூண்டுதலால் உந்தப்பட்டேன். இப்படி ஒன்றுகூட்டி இன்றைய உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவவேண்டும் என்று கருதினேன். இக்காரணத்திற்காக இயல்புக்கு மேலானதும் மனத்தின் ஆழத்திலிருந்து எழுந்ததுமான ஒரு குரலுக்குக் கீழ்ப்படிந்து கத்தோலிக்கத் திருச்சபைக்கும் மனித சமுதாயம் அனைத்திற்குமே ஒரு புதிய பொதுச்சங்கத்தை அளிக்க ஏற்ற நேரம் வந்துவிட்டது என நினைத்தேன். இதற்கு முன் நடந்துள்ள இருபது பெரிய சங்கங்களைத் தொடர்ந்து இதுவும் நடைபெறும். மேற்கூறிய இருபது சங்கங்களும் பல்லாண்டுக் காலமாக அருள் பெருக்கத்திற்கும் கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்துவந்துள்ளன. சங்கம் கூடப்போகிறது எனும் இந்தச் செய்தி உலகம் அனைத்திலும் பரவியதும் திருச்சபை முழுவதுமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. இதற்காகக் கடவுளிடம் இடைவிடாது ஆர்வத்துடன் வேண்டிக்கொண்டிருக்கிறது. சங்கத்திற்கான தயாரிப்பு வேலை ஊக்கமூட்டுவதாய் உள்ளது.
பிற கிறிஸ்தவர்கள், ஏன் கிரிஸ்தவர் அல்லாதவர் கூட சங்கத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டுவதோடு ஆழ்ந்த கவனத்தோடு அதனை எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய ஒரு நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவராலும் உணரப்பட்டுள்ளது என்பதற்கு மேற்கூறியவை யாவும் தௌ;ளிய சான்றுகள். ஆகவே, திருச்சபை மிகுந்த ஆர்வத்தோடு தன் நம்பிக்கையைப் புது ஆற்றல்களால் உறுதிப்படுத்தவும், சிறப்பான முறையில் ஒற்றுமையுடன் ஒரே திருச்சபையாகக் காட்சியளிக்கவும் விரும்பும் இவ்வேளையில் இந்தப் பொதுச் சங்கம் கூட்டப்படுகிறது. அதே நேரத்தில், தன்னுடைய நலமான உயிர்த்துடிப்பை இன்னும் அதிகம் நடைமுறையில் கொணரவும் தன் உறுப்பினரில் தூய்மைநிலையை வளர்க்கவும் இறைவெளிப்பாட்டு உண்மையைப் பரப்பவும் தனி அமைப்புகளை உறுதிப்படுத்தவும் தனக்கிருக்கும் கனமான கடமையைத் திருச்சபை உணர்கிறது. எனவே இச்சங்கம் திருச்சபை என்றும் வாழ்வதாகவும் என்றுமே நிலையான இளமை பூண்டதாகவும் உள்ளது என்பதற்கு ஒரு வெளியடையாளமாய் அமையும்.
இன்றுவரை இத்திருச்சபை காலத்தின் போக்குகளை உணர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் புதிய உருப்பெற்றுத் திகழ்கிறது. புதிய ஒளி சிந்துகிறது. புதிய வெற்றிகளைப் பெற்றுவருகிறது. எனினும் அதே நேரத்தில் ஒரே திருச்சபையாக அது என்றும் நிலைத்திருக்கிறது. திருச்சபைக்கு அன்பு செய்து அதைக் காப்பாற்றி வரும் அதன் இறைமணமகன் கிறிஸ்து இயேசு, திருச்சபை பெற்றிருக்க வேண்டும் என விரும்பிய அந்த மிகவும் அழகிய உருவை நிலையாகக் காத்து வருகிறது.
காணக்கூடிய விதத்தில் கிறிஸ்தர் அனைவரிடையேயும் ஒன்றிப்பு உருவாகவேண்டுமென உலகின் பற்பல பகுதிகளிலும் பலர் அதிகமதிகம் தாராள உள்ளத்தோடு முயன்று வருவதை நாம் பார்க்கிறோம். இந்த ஒன்றிப்பே இறை மீட்பவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாய் அமையும். ஆகவே, பிற கிறிஸ்தவ சபைச் சகோதரர்கள் சகோதரிகள் ஒன்றிப்பை நாட ஆர்வம்காட்டவும் ஒருவகையில் அதனை நோக்கி அவர்கள் செல்லும் பாதையைத் தயாரிக்கவும் வழிவகுக்கக் கூடிய மறைக்கோட்பாட்டு விளக்கங்களையும் ஒருவர் மற்றவர்மீதான அன்பையும் பொதுச் சங்கம் அளிக்கும் என எதிர்பார்;ப்பது இயல்பே.
கடைசியாக உலகைக் கவனிக்கும்பொழுது அது பற்பல பயங்கரச் சண்டை சச்சரவுகளால் அச்சுறுத்தப்பட்டு, குழம்பி உறுதியற்று, கவலைகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் பொதுச் சங்கம் நன்மனத்தோர் அனைவரும் அமைதியை நாடிச் செல்லவும், அதனை வளர்க்க சிந்தனையையும் செயலையும் நெறிப்படுத்தவும் வாய்ப்பாக இருக்கவேண்டும். மனித குலத்தைப் படைத்தவரும் மீட்டவருமான கடவுளால் ஒளி ஏற்றப்பட்டு, வழி நடத்தப்பெற்ற மனிதரின் அறிவு, மனச்சான்று மற்றும் இயல்புக்கு மேலான அருள்நெறி நலன்கள் ஆகியவையே இந்த அமைதியை உருவாக்க முடியும். உருவாக்கவும் வேண்டும்.
நான் பலமுறை சங்கத்திலிருந்து எதிர்பார்க்கும் பலன்கள் குறித்து பேசியுள்ளேன். இவற்றை அடைய, சங்கத்தின் செயல்பாடுகளுக்கும் முயற்சிகளுக்கும் கடின உழைப்பும் தேவை. நம்பிக்கைக் கோட்பாடுகளும் நடைமுறை வாழ்வும் ஒருங்கிணைய வேண்டும். விவிலியம், திருமரபு, அருளடையாளங்கள், இறைவேண்டல், திருச்சபை ஒழுங்குமுறைகள், அன்புச் செயல்கள், இரக்கப் பணிகள், பொது நிலையினரின் திருத்தூதுப் பணி, நற்செய்திப் பணிக்கண்ணோட்டம் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இந்த ஒமைப்பு, உலகியல் அமைப்பின்மேல் தாக்கம் செலுத்த வேண்டும். திருச்சபை "அன்னையாகவும் ஆசிரியையாகவும்" உள்ளது. மனிதர்கள் முழுமையான வாழ்வைப் பெற வேண்டும். ஆன்மீக வளர்ச்சியும் உலகியல் ஒழுங்கமைப்பின் மேம்பாடும் ஒன்றிணைய வேண்டும். திருச்சபை, குடும்பம், பள்ளி, உழைப்பு, குடிமைச் சமூகம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. சமூகப் படிப்பினைகள் மூலம், அறநெறி, நீதியமைப்பை விளக்கி, மனித உரிமைகளை பாதுகாக்கிறது. அவ்வாறே, பொதுச் சங்க விவாதங்கள் மனித உள்ளங்களை மட்டும் değil, முழு மனித ஈடுபாட்டையும் கிறிஸ்தவ ஒளியால் மேம்படுத்தும். இது, வலுவான அருள்நெறி சக்திகளால் ஊடுருவும் ஒரு மகத்தான பணியாகும்.
1959 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி, பொதுச் சங்கம் கூடுவதை முதன்முறையாக அறிவித்தேன். அப்பொழுது, நடுங்கிய கைகளோடும் சலனமுற்ற மனத்தோடும், சிறிய விதை ஒன்றை நடுவதைப்போல் இருந்தேன். ஆனால் கடவுளின் அருளால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அது பெருமரமாக வளர்ந்ததை மகிழ்ச்சியுடன் காண்கிறேன். சங்க விவாதங்களைத் தீர்மானிக்குமுன், உலகெங்கும் உள்ள கத்தோலிக்க ஆயர்கள், உரோமைச் செயலவையின் திருப்பேராயங்கள், துறவற நிறுவனங்கள், கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் ஆலோசனைகளை ஒரு வருடம் முழுவதும் கேட்டுப் பெற்றேன். அவற்றிலிருந்து முக்கியமானவை ஆழ்ந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. சங்கத்திற்கான தயாரிப்புகளுக்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை, நம்பிக்கை, ஒழுங்குமுறை சார்ந்த விவாதத் தொகுப்புகளை உருவாக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டன. இந்த ஆய்வுப் பணிகள் தற்போது நிறைவு அடைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இறை மீட்பரின் அருளில் முழுமையான நம்பிக்கையுடன், தூய யோசேப்பின் துணையை நாடி, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைக் கூட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது என்று கருதுகிறேன். தூய உரோமை திருச்சபையின் கர்தினால்கள் மற்றும் மறைமாவட்ட தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு, 1962-ஆம் ஆண்டு, நான் தீர்மானிக்கும் நாளில், வத்திக்கானில் உள்ள பேராலயத்தில், அனைத்துலக பொதுச் சங்கம் முறையாக கூடும் என அறிவிக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள கர்தினால்கள், மறைத்தந்தையர்கள், பேராயர்கள், ஆயர்கள், மற்றும் மற்ற உரியவர்களும் இந்த பொதுச் சங்கத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆணையும் விருப்பமுமாகும்.
நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் அழைப்பு பொதுச் சங்கம் பெரிய நிகழ்வாக நடைபெறவிருப்பதை கருத்தில் கொண்டு, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் அதில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த சங்கத்தின் வெற்றிக்காக இறைவேண்டல் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும். நம்பிக்கையிலிருந்து எழும் இறைவேண்டல், கிறிஸ்துவ நோன்பு முயற்சிகள் மற்றும் தாராளமான கிறிஸ்தவ வாழ்வு ஆகியவை, இச்சங்கம் அளிக்கவுள்ள போதனைகளை செயல்படுத்துவதற்கான முன்பணியாக அமையும். மறைமாவட்ட ஆயர்கள், துறவறத் திருப்பணியாளர்கள், மற்றும் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் இந்த முயற்சியில் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும். சிறுவர்களின் மாசற்ற இறைவேண்டல் கடவுளிடம் பெரும் மதிப்புடையது. நோயால் வருந்துவோரின் துயரங்களும், கிறிஸ்துவின் சிலுவையின் வல்லமையால் சிறந்த மன்றாட்டாக அமையக்கூடியவை. பிரிந்த கிறிஸ்தவர்களும் சங்கத்திற்காக இறைவேண்ட வேண்டும் என்று உருக்கமாக கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் சங்கத்திற்கான செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளனர் என்பதும், அதன் வெற்றிக்காக இறைவனை மன்றாட முனைகின்றனர் என்பதும் எனக்கு ஆறுதலாக இருக்கின்றன. மேலும், இச்சங்கத்தின் நிகழ்வுகளை அருகிலிருந்து அறிய அவர்களது பதிலாளிகளை அனுப்ப திட்டமிடுகின்றனர் என்பதும் பெரும் எதிர்பார்ப்பை அளிக்கின்றது. திருச்சபையின் ஒற்றுமையும், இறை ஆவியின் வழிநடத்தலும் பண்டைய திருச்சபை, தூய பேதுருவுடன் இணைந்து கிறிஸ்துவின் திருவுளத்திற்காக மன்றாடியது போல, இன்றைய கிறிஸ்தவக் குடும்பமும் ஒருமனதாக இறைவேண்ட வேண்டும். உலகமெங்கும் உள்ள இறை மக்கள்,"நாங்கள் வாழும் இக்காலத்தில் உம் வியத்தகு செயல்களை உமது புதிய பெந்தகோஸ்து நிகழ்வால் புதுப்பித்தருளும்"என்று இறை ஆவியை மன்றாடுவார்களாக. இந்த கொள்கை விளக்கம், இன்று மற்றும் வருங்காலத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்குப் புறம்பான எந்தச் சட்டமும் இதைத் தடுக்க முடியாது. எனவே, யாரும் என் தீர்மானங்களை மாற்றவோ, மறுக்கவோ, மதிக்காமல் விடவோ கூடாது. இது 1961ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், என் பணிப் பொறுப்பின் நான்காவது ஆண்டில் உரோமை, தூய பேதுரு பேராலயத்தில் வழங்கப்பட்டது. யோவான் XXIII, கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்
நிறைவாழ்வு, அன்பு, அமைதி பற்றி எல்லா மக்களுக்கும் நாடுகளுக்கும் தூது அனுப்புவதில் சங்கத் தந்தையராகிய நாங்கள் பேருவகை கொள்கிறோம்; இந்நலன்களை வாழும் கடவுளின் மகன் இயேசு கிறிஸ்து உலகுக்கு அளித்துள்ளார்; திருச்சபையிடம் அவற்றை அவர் ஒப்படைத்துள்ளார். எனவேதான் மாண்புமிகு திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவானின் அழைப்பை ஏற்று, திருத்தூதர் வழிவந்துள்ள நாங்கள் பேதுருவின் வழித்தோன்றது தலைமையில் ஒரே திருத்தூதுக் குழுவாக, இயேசுவின் அன்னையான மரியாவோடு ஒருமனப்பட்ட இறை வேண்டலில் இங்கு ஒன்றுபட்டுள்ளோம்.
எம்மையே புதுப்பித்துக்கொள்வது எவ்வாறு என்று நாங்கள் இச்சங்கத்திலே தூய ஆவியின் துணையுடன் ஆராய விழைகிறோம். இவ்வாறு, கிறிஸ்துவின் நற்செய்திக்கு உண்மையான சாட்சிகளாக இருக்க விரும்புகின்றோம். இன்றைய மக்கள் இறை உண்மையை முழுமையாகவும் தூய்மையாகவும் அறியவேண்டும்; விருப்புடன் அதற்கு இசைந்து நடக்கவேண்டும்; இதற்கு அவ்வுண்மையைத் தகுந்த முறையில் அவர்களுக்கு அளிக்க வேண்டும்; இம்முயற்சியிலேதான் ஈடுபட்டுள்ளோம் நாங்கள். ஆயர்களுக்குரிய பொறுப்புணர்வால் உந்தப்பட்டு நாங்கள் கடவுளைத் தேடும் அனைவரின் ஏக்கங்களும் நிறைவு பெற எங்களையே அர்ப்பணிக்க விரும்புகிறோம். உண்மையிலே ''கடவுள் தம்மை அவர்கள் தேட வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்'' (திப 17:27).
''அத்திருச்சபை கறைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு'' (காண் எபே 5:27) தம்மைத்தாமே சாவிற்குக் கையளித்தார் கிறிஸ்து. அதே கிறிஸ்துவின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து, ஆயர்களாகிய நாங்களும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களும் புதுப்பிக்கப் பெறும்படி எங்கள் முழு ஆற்றலையும் கருத்தையும் ஒருங்கே ஈடுபடுத்துகின்றோம். இவ்வாறு, கடவுளின் மாட்சியாகிய அறிவொளி மிளிரும்படி எங்கள் இதயங்களில் சுடரொளி வீசும் இயேசு கிறிஸ்துவின் எழில்மிகு திருமுகம் எல்லா இனத்தார் முன்னும் ஒளிர்வதாக (காண் 2 கொரி 4:6)
உலகை மீட்கத் தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்கு இறைத்தந்தை உலகின் மீது அன்பு கூர்ந்தார் என்று நம்புகின்றோம். உண்மையிலேயே தம் ஒரே மகன் வழியாக நம் பாவத்தளையறுத்தார்; அவர் வழியாகவே அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்க விரும்பினார்; கடவுளின் உண்மையான பிள்ளையாக நாம் இருக்கவும் இவ்வாறு அழைக்கப் பெறவும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தால்p அமைதியை நிலைநாட்டினார் (காண் கொலோ 1:20). நாம் இறைவாழ்வு வாழ்ந்து கடவுளுக்கும் கிறிஸ்துவில் நம்முடன் ஒன்றித்திருக்கும் நம் சகோதரர், சகோதரிகளை அன்பு செய்யுமாறு இறைத்தந்தை நமக்கு இறை ஆவியை அருளியுள்ளார்.
நாம் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டிருப்பதால் உலகைச் சார்ந்த கடமைகளினின்றும் உழைப்புகளினின்றும் அந்நியமாகிவிட்டோம் என்று பொருளாகாது. மாறாக நம்பிக்கை, எதிர்நோக்கு, கிறிஸ்துவின் அன்பு ஆகியவை நம் சகோதரர், சகோதரிகளுக்குப் பணிசெய்ய நம்மைத் தூண்டுகின்றன. இவ்வாறு செய்தால் ''தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கு வந்த'' (மத் 20:28) இறை ஆசிரியரின் மாதிரிப்படி நம் வாழ்வு அமையும். திருச்சபையும் ஆதிக்கம் செலுத்தவன்று பணிபுரியவே தோன்றியுள்ளது. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்; அதனால் நாமும் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். (1 யோவா 3:16)
ஆகவே, சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் விளைவாக நம்பிக்கை ஒளி அதிகத் தெளிவாகவும் ஆற்றலோடும் ஒளிருமென நம்பிக்கை ஒளி அதிகத் தெளிவாகவும் ஆற்றலோடும் ஒளிருமென நம்புகிறோம்; அஃதோடு ஓர் அருள்வாழ்வு மறுமலர்ச்சியையும் எதிர்நோக்கியிருக்கிறோம். அம்மறுமலர்ச்சியிலிருந்து, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்துறை மற்றும் கலை முன்னேற்றம், பண்பாட்டு வளர்ச்சி போன்ற மனித நலன்கள் மேம்பாடடைய ஓர் உந்துதல் பிறக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
பாருலகில் பரவியுள்ள எல்லா நாடுகளிலுமிருந்து ஒன்றுகூடியுள்ள நாங்கள் எம் பொறுப்பில் உள்ள எல்லா மக்களின் இன்னல்கள், உடல், உளத் துயர்கள், கவலைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எங்களது இதயத்தில் தாங்கி நிற்கின்றோம். இன்றைய மக்களை வருத்தும் எல்லாக் கவலைகள் மீதும் இடையறாது எங்கள் கருத்தைத் செலுத்துகின்றோம். எனவே, மிகமிகத் தாழ்ந்தோர், வறியோர், வலுவற்றோர்மீது முதலில் அக்கறை காட்டுகிறோம். பசியிலும் கடுந்துயரிலும் அறியாமையிலும் உழலும் மக்கள் திரள்மீது கிறிஸ்துவைப் போல் நாங்களும் இரக்கம் காட்டுகிறோம். மனித நிலைக்கு ஏற்ற வாழ்வை அமைக்க வழிவகையின்றிக் தவிப்போரை எங்கள் எண்ணத்தில் என்றும் கொண்டுள்ளோம்.
எனவே, நாங்கள் மனிதரின் மாண்பைச் சார்;ந்தவற்றையும் மக்களிடையே உண்மையான சகோதரத்துவத்தை உருவாக்க உதவுகின்றவற்றையும் ஆழமாக உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு எங்கள் பணியில் ஈடுபடுவோம். ''கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது'' (2கொரி 5:14). ஏனெனில், ''உலகச் செல்வதைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?'' (1 யோவா 3:17)
1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள், திருத்தந்தை 23 ஆம் யோவான் வானொலியில் ஆற்றிய பேருரையில் இரு முக்கியமான விஷயங்களை வலியுறுத்தினார்.
அமைதி என்பது அனைவரும் விரும்பும் ஒரு உயரிய இலட்சியமாகும். போரை வெறுக்காதவரும், அமைதியை விரும்பாதவரும் எவருமில்லை. ஆனால், திருச்சபை இதனை எல்லாரையும்விட அதிகமாக விரும்புகிறது.
அமைதிக்கான திருச்சபையின் பணி:
கிறிஸ்தவ சமுதாயம், சகோதரத்துவத்தின் சின்னமாக திகழ வேண்டும். இன, மொழி, தேசியத்தால் வேறுபட்டவர்களையும் தழுவி, அனைவரும் சகோதர, சகோதரிகளாக இணைந்து வாழ வேண்டும் என்பதையே திருச்சபை வலியுறுத்துகிறது.
திருச்சபை, சமூகத்தில் நிலவும் அநீதிகளையும், அச்சீர்கெட்ட சூழலையும் கண்டித்து, அனைவரும் சமத்துவமான வாழ்வினை அடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
சமூகநீதி நிலைநாட்டுவதற்கான வழிகள்:
இந்த கொள்கைகளை, “அன்னையும் ஆசிரியையும்” (Mater et Magistra) என்ற திருத்தந்தையின் சுற்றுமடல் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
திருத்தந்தையின் இந்த உரை, உலக அமைதி மற்றும் சமூகநீதி ஆகியவை ஒன்றுடன் ஒன்றிணைந்தவை என்பதை மெய்ப்பிக்கின்றது.
இவ்வுலகைச் சார்ந்த செல்வங்களும் வல்லமையும் எங்களிடம் இல்லை. ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருச்சபைக்குத் தருவதாக வாக்களித்த இறை ஆவியின் ஆற்றலில் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். எனவே, அதிக அளவு நீதியும் சகோதரத்துவமும் நிறைந்த ஓர் உலகைக் கட்டி எழுப்புவதிலே எம்மோடு ஒன்றித்துப் பணிபுரிய மக்களனைவரையும் பணிவோடும் ஆவலோடும் அழைக்கிறோம். எங்களை ஆயர்களாகக் கொண்டுள்ள எங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டுமன்றிக் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லாச் சகோதரர் சகோதரிகளுக்கும் ஏனைய நல்மனத்தோர் அனைவருக்குமே வேண்டுகோள் விடுக்கிறோம். இத்தகைய ''எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்'' (காண் 1 திமோ 2:4) ஏனெனில் அன்பின்வழி கடவுளுடைய முடிவில்லா ஆட்சியின் முற்காட்சியாக இறையாட்சி இம்மண்ணிலே ஒருவிதத்தில் மிளிரவேண்டும் என்பதே இறைத்திட்டம். நாம் விரும்பி எதிர்பார்க்கும் அமைதி இவ்வுலகிலிருந்து இன்னும் வெகு தூரத்திலே உள்ளது. ஏனெனில், அறிவியலின் முன்னேற்றம் வியக்கத்தக்கதாயிருப்பினும், அது அறநெறியின் சீரிய நெறிமுறைகளுக்கு எப்பொழுதும் இசைந்ததாக இருப்பதில்லை. ஆதலால் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் அச்சுறுத்தல்கள் அறிவியல் முன்னேற்றத்தினால் விளைகின்றன. இவற்றிற்கிடையில் நம் ஒரே மீட்பரான இயேசு கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கும் உயர்ந்த எதிர்நோக்கு எனும் ஒளி இவ்வுலகில் ஒளிரவேண்டும் என்பதே எமது மன்றாட்டு.
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Designed by DB Media