2023-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
„அன்பான பிள்ளைகளே! இயற்கைக்குச் சென்று செபிக்குமாறு உங்களை
அழைக்கிறேன், அனைத்திலும் உயர்ந்தவர் உங்கள் இதயங்களுடன் பேசுகிறார்,
ஒவ்வொருவரையும் படைத்த இறைவன் தனது அன்புக்குச் சாட்சியாக உங்களுக்கு
தூயஆவியானவரின் வல்லமையை உணரச்செய்கிறார். நான் உங்களுடன் இருப்பதுடன்
உங்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன். எனது குரலைக் கேட்பதற்காக உங்களுக்கு
நன்றி கூறுகின்றேன்.“