2022-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
அன்பான பிள்ளைகளே! உங்கள் பெயரிலும் எனது வேண்டுகோளை ஏற்றும் நீங்கள் செய்துவரும் அனைத்து உதவிகளுக்கும் செபங்களுக்கும் நான் உங்களுடன் சேர்ந்து மகிழ்வடைகின்றேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது திட்டத்தின்படி மக்களைக் குணப்படுத்துவது மிக முக்கியமானது என்பதை மறவாதீர்கள். இறைவனிடமும் செபத்திலும் திரும்பி வாருங்கள், இதன்மூலம் தூயஆவியானவர் உங்களில் மற்றும் உங்கள் ஊடாக செயலாற்றுவார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, சாத்தான் போருக்கு மற்றும் வெறுப்புக்காகப் போராடும் இந்த நாட்களிலும் நான் உங்களோடு உள்ளேன், பிரிவினைகள் வளர்வதுடன் பாவங்கள் மனிதரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்கின்றது. எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி.“