2023-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி
"அன்பான பிள்ளைகளே! கடுமையாகச் செபிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். நவீனத்துவம் உங்கள் எண்ணங்களில் நுழைந்து செபத்தின் மகிழ்வையும் இயேசுவின் சந்திப்பையும் பறிக்க விரும்புகின்றது. ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் குடும்பங்களில் செபத்தைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். இதனால் நான் உங்களைத் தேர்ந்தெடுத்த முதல் நாட்களில், செபங்கள் இரவும் பகலும் எதிரொலித்ததுபோல, அன்னையான எனது இதயம் மகிழ்வுறும், ஆனால் வானகத்தில் அமைதியில்லை, மாறாக இரக்கத்தின் இந்த இடம் போதியளவு சமாதானத்தையும் ஆசீரையும் வழங்குகின்றது. எனது அழைப்பைக் கேட்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."