அருளின் விநாடிகள் - 2026-08-16
Downloadஇன்றைய இறைவாக்குத் துகள் – 2026-08-16
இன்றைய சிறிய வழிச் செபம் – மறுதலிப்பு
மறுதலித்த பேதுருவை மன்னித்த இறைவா, இன்று மறுதலிக்காமல் உம்மை பின்பற்றிட அருள்தாரும் ஆமென்
இன்றைய துதி – 2026-08-16
இணைந்து செபிப்போம் – 2026-08-16
ஆண்டவரே இயேசுவே,
நேர்மையுடன் அரசாளுகின்றவரே! உம்மை துதிக்கின்றேன். நீர் அளிக்கும் விடுதலை நோக்கி அழைத்துச் செல்பவரே! உம்மை புகழுகின்றேன். நீர் அளிக்கும் வெற்றியில் நான் என்றும் மகிழ்ந்திருக்க கிருபை தந்தீரே நன்றி கூறுகின்றேன்.
ஐயா!தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என்று கத்தி கொண்டு வந்த கானானியப் பெண்ணிடம், "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்'' என அவரின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து;ஆசீரால் அவரையும் அவர் குடும்பத்தையும் நிரப்பியதை இன்றைய இறைவார்த்தையில் வாசிக்கும் நான் நீரே என் இறைவன்; என நம்பி,உம்மை என் நாளும் பின் தொடர்ந்து வருபவனாகவும்; உம்மால் என் வாழ்வில் அதிசயங்களை கண்டு கொள்ளவும் கிருபை தாரும். இயேசுவே! “என்னை முதலில் தேடு இம்மைக்கும், மறுமைக்குமான அனைத்தையும் உனக்கு வாக்கு பண்ணுவேன்” என உமது வார்த்தை சொல்கிறதே; அப்பா! மூவொரு கடவுளான உம்மை தேடி அடைந்திடவும்; நம்பிக்கையுடன் உமது வழி தொடர்ந்திடவும் நல் மனம்தாருமையா. ஆண்டவரே இயேசுவே! உமது வார்த்தை சொல்லுகின்றதே “என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும், மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்” ஐயா என்னுடைய வாழ்வின் சோதனைகள், தோல்விகள் அனைத்துக்காகவும் உம்மை மன்றாடுகின்றேன். என் கேள்விகளுக்கு விடைகளை காட்டும்: உமது ஞானத்தின் ஒளியால் என் பாதைகளை காட்டளையிடும். இயேசையா! இன்றைய நாளில் என்னோடு வாரும்; என் குரலுக்கு செவிசாய்க்க, என் பலவீனத்தினால் நீர் மறைத்து வைத்துருக்கும் உமது ஆசீர்வாதங்களை நான் அடைந்திட வேண்டும் என்று இயேசுவின் பரிசுத்த நாமத்தில் செபிக்கின்றேன். ஆமென்