அருளின் விநாடிகள் - 2026-05-19
Downloadஇன்றைய இறைவாக்குத் துகள் – 2026-05-19
இன்றைய சிறிய வழிச் செபம் – பேரன்பு
பேரன்பு கொள்ளும் இறைவா, இன்று பேரன்பு என்றால் என்ன என்பதை அறிய ஞானத்தை தர வேண்டுகிறேன் ஆமென்
இன்றைய துதி – 2026-05-19
இணைந்து செபிப்போம் – 2026-05-19
ஆண்டவரே இயேசுவே,
ஆண்டவர் இயேசுகிறிஸ்து என்ற நாமம் போற்றப்பெறுவதாக! மேகங்கள் மீது வருபவரே! உம்மைத் துதிக்கின்றேன். திக்கற்ற என்னைக் கரம்பிடித்து வழிநடத்தும் உம்மைப் புகழ்ந்து பாடுகின்றேன். “உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு” என, இன்றைய இறைவார்த்தையில் வாசிக்கும் நான், பரிசுத்த வாஞ்சையுடன் உம்மைத் தேடி அடைந்திட; அதையே என வாழ்வாக்க அருள்தாரும். உம்மைத் தேடுகின்றவர் வாழ்வடைவார்கள். இறைவனின் கருணை அவர்களுக்கு நிறைவாய் கிடைக்கும்” என்றவரே! உம்மை நாடித்தேடும் போது என் வாழ்வு உயர்வடைகின்றது, மகிழ்வடைகின்றது, வளர்ச்சி அடைகின்றது, உம்மில் புதிய எழிற்சி பெறுகின்றதே அப்பா! இதே ஆசீர்வாதம், இதே அபிஷேகம், இதே உடனிருப்பு என் வாழ்நாள் வரை கூட இருக்க வேண்டும் இயேசுவே. “நன்மைகளால் தீமையை வெல்லுங்கள்” என்றவரே! வார்த்தையான நீர் கற்றுத்தந்த அன்பின் பண்புகளால் அனைத்து சோதனைகளையும் வெற்றி பெற ஆற்றலைத் தாரும். “என்னுடைய பிரசன்னம் உனக்கு முன் செல்லும்” என்று என்னை வழிநடத்தி வந்தவரே! இன்றைய நாளிலும் என்னை வழிநடத்தும். உமது பிரசன்னத்தையும் உடனிருப்பையும் இன்று உணர்ந்து கொண்டிடவும், உமது இறை அன்பால் என்னை நிறைக்கவும் வேண்டும் என்று, இயேசுவின் பரிசுத்த நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்