2015 ஆம் ஆண்டுக்கான மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டியில் பரிசில்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறுவோர் விபரம்.எமது இணையத்தளத்தில் 2015ஆம் ஆண்டு நாடாத்தப்பட்ட மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டியில் உலகளாவிய ரீதியில் மொத்தமாக 458பேர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் 24 பேர் 100% புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். போட்டி விதிமுறைகளின் படி இவர்களில் மூவர் குழுக்கல் முறையில் வெற்றியாளர்களாக 23.01.2015 அன்று நடைபெற்ற பணியக நிர்வாகிகளுக்கான ஒன்று கூடலில் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பரிசில்களும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவர்களின் விபரங்கள் வருமாறு. வெற்றியாளார்கள்
மேலும் 90 பேர் 35% க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தி யடைந்துள்ளனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. |