மெட்யுகோரியோவில்(Medjugorje) 2016வது ஆண்டில் அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு



2016-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! தாயாக நான் உங்களுடன் இருப்பது குறித்து மகிழ்வுற்றுள்ளேன், ஏனென்றால் நான் புதிதாக எனது மகனின் வார்த்தைகள் குறித்தும் அவரது அன்பு குறித்தும் உங்களுடன் பேச விரும்புகின்றேன். நான் நம்புகிறேன், நீங்கள் என்னை இதயத்தால் ஏற்றுக்கொள்வதுடன், எனது மகனின் வார்த்தைகள் மற்றும் அவரது அன்பு ஒன்றே இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை எனும் ஒளிக்கு உங்களை அழைத்துச் செல்லும். இது ஒன்றே உண்மை, அதை நீங்கள் ஏற்றக்கொண்டு வாழ்ந்தால் தூய இதயத்தைக் கொண்டு வாழ்வீர்கள். எனது மகன் தூயவர்களையும் உற்சாகப்படுத்துபவர்களையும் நேசிக்கிறார். தூய மற்றும் உற்சாகமான இதயங்கள் எனது மகனின் வார்த்தைகளை விரும்புகின்றன, அவை அதை வாழ்க்கைக்கு உகந்ததாக்குவதுடன் அதை கேட்டுக்கொள்கின்றன. எனது மகனின் வார்த்தைகள் அன்பையும் நம்பிக்கையையும் கொண்டு வருகின்றன. அவர் உங்களை அன்பு செய்வது போன்று. ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள். அவர் பெயரால் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள், அவர் நினைவாக அன்பு செய்யுங்கள். எனது மகனின் வார்த்தைகளைக் கேட்டாலே திருச்சபை ஆசீர்வதிக்கப்பட்டு வளர்ச்சிபெறும், எனது மகனின் வார்த்தைகளைக் கேட்பவர்களுக்கு நன்றி கூறுங்கள், அதை விரும்புபவர்களுக்கு நன்றி கூறுங்கள், அமைதியாகவும் நம்பிக்கையுடனும் முடிவடையும் தருவாயில் துன்பத்துடன் அவற்றை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நன்றி கூறுங்கள். ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது மகனின் வார்த்தைகளை விரும்புங்கள் மற்றும் அவரது அன்பே நாளில் முதலாவதும் இறுதியானதுமான எண்ணமாக இருக்கட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.



2016-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்கள் அனைவரையும் செபிக்க அழைக்கிறேன். செபம் இல்லாமல் நீங்கள் வாழ முடியாது, இது ஒரு சங்கிலித்தொடர் போன்று உங்களை இறைவன் அருகே எடுத்துச் செல்கின்றது. ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இதயத்தில் துணிவுடன் இறைவனிடமும் அவரது கட்டளைகளிடமும் திரும்புங்கள், இதன்மூலம் நீங்கள் உங்கள் முழு இதயத்திலிருந்தும் வானகத்தில் இருப்பது போல மண்ணகத்திலும் இருப்பதாக எனக் கூற முடியும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் சுயமாக இறைவனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். அதேவேளை எங்கு சாத்தான் உங்களைப் பாவத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இழுக்க விரும்புகிறான் எனவும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது இதயத்திற்குத் திரும்பி வாருங்கள், இதன்மூலம் நான் உங்களை எனது மகன் இயேசுவிடம் அழைத்து செல்ல முடியும், அவரே வழி, உண்மை மற்றும் வாழ்வு. நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!



2016-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன், எனது மகனைக் கண்டறிவதற்கும் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கும் புதிதாக அழைக்கிறேன். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் வெற்றிக்காகச் செபிக்கிறேன். எனது பிள்ளைகளே, நீங்கள் அதிகம் செபிக்க வேண்டும், இதன்மூலம் உங்களுக்கு மேலும் அன்பும் பொறுமையும் பெருகும். எனது மகன் தூய ஆவியானவர் ஊடாக எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார். செபியுங்கள், நீங்கள் எனது மகனை அறிந்து கொள்வதற்காக, செபியுங்கள், உங்கள் ஆன்மா அவரில் ஒன்றிப்பதற்காக. இதுவே செபம், இதுவே அன்பு, இது மற்றவர்களை கவர்ந்து இழுப்பதுடன் உங்களை எனது தூதர்களாக்கட்டும். நான் உங்களை தாயின் அன்போடு பார்க்கிறேன். நான் உங்களை அறிவேன், உங்கள் வேதனைகளையும் அறிவேன், ஏனென்றால் நானும் இவ்விதமான வேதனைகளை அமைதியாக அனுபவித்தவள். எனது நம்பிக்கை எனக்கு அன்பையும் நம்பிக்கையையும் தந்தது. நான் மீண்டும் கூறுகிறேன், எனது மகனின் உயிர்ப்பும் நான் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும் உங்களுக்கு நம்பிக்கையும் அன்புமாக இருக்கட்டும். ஆகவே, எனது பிள்ளைகளே, செபியுங்கள், நீங்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்வதுடன் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள், அது உங்கள் இதயத்தில் இருந்து வெளிப்பட்டு உங்கள் வேதனைகள் மற்றும் துயரங்களைப் போக்கி நம்பிக்கையைத் தரட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.



2016-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இரக்கத்தின் காலமாகிய இவ் வேளையில் நான் உங்களை மனம்திரும்ப அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் குறைவாக அன்பு செய்கிறீர்கள், நீங்கள் இன்னும் குறைவாகவே செபிக்கின்றீர்கள். நீங்கள் தொலைந்துபோயுள்ளதுடன் உங்களுக்குத் தெரியவில்லை உங்கள் குறிக்கோள் எதுவென. சிலுவையை கண்ணோக்குங்கள், அதிலிருக்கும் இயேசுக் கிறிஸ்துவைப் பார்த்து அவரைப் பின்தொடருங்கள். அவர் உங்களை அன்பு செய்வதாலேயே சிலுவையில் உங்களுக்காகத் தன்னைப் பலியாக்கினார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இதயத்தால் செபிக்க வருமாறு மீளவும் உங்களை நான் அழைக்கிறேன், இதன்மூலம் நீங்கள் செபத்தால் நம்பிக்கையும் உங்களுக்குச் சொந்தமாக உள்ளவைகளுக்கான அர்த்தங்களையும் கண்டடைவீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக செபித்துக்கொள்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!



2016-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! நான் உங்களிடம் வருவது வானகத் தந்தை உங்களுக்குத் தரும் ஒரு பரிசாகும். உங்களுக்கு உதவவும், உண்மையின் வழியைக் கண்டடையவும், எனது மகனின் வழியைக் கண்டுகொள்ளவும் அவரின் அன்பால் நான் வருகை தருகிறேன். நான் உங்களுக்கு உண்மையை உறுதிப்படுத்தவே வருகை தருகின்றேன். நான் உங்களுக்கு எனது மகனின் வார்த்தைகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் முழு உலகும் நலமடையும் வார்த்தைகளைக் கூறினார், அந்த வார்த்தைகள் அனைவருக்கும் அன்பைக் கொடுத்தது, இந்த அன்பாலேயே அவர் தன்னைப் பலியாக்கி அதை உறுதிப்படுத்தினார். ஆனால் இன்றும் எனது பல பிள்ளைகளுக்கு அவரைத் தெரியவில்லை, அவர்கள் அவரைக் கண்டறிய விரும்பவில்லை, அவர்கள் அதை விரும்பாதவர்களாக உள்ளனர். அவர்களின் இவ் விரும்பாத்தனத்தால் எனது இதயம் வேதனையால் வாடுகின்றது. எனது மகன் எப்பொழுதும் தந்தையில் இருக்கிறார். அவரால் பூமியில் பிறந்ததால், அவர் இறை மைந்தனாகவும் என்னால் அவர் மனிதனாகவும் உருவாக்கப்பட்டார். அவருடனேயே வார்த்தைகள் எமக்குள்ளாக வந்தன. அவருடனேயே உலகிற்கு ஒளி வந்தது, அது இதயத்தினுள் நுழைந்து, ஒளிர்வதுடன் உங்களை அன்பு மற்றும் தேற்றுதலால் நிரப்புகின்றது. எனது பிள்ளைகளே, எனது மகன் அவரை அன்பு செய்யும் அனைவரையும் கண்டுகொள்கிறார். அன்பால் அவரை நிரப்பியுள்ளோமா என்பதை அவர் ஆன்மாக்கு ஊடாகப் பார்த்து அறிந்து கொள்கிறார். ஆகவே, எனது பிள்ளைகளே, எனது திருத்தூதர்களே, எனது சொல்லைக் கேளுங்கள்! சிறுவிடயங்களையும் அடிமைத்தனங்களையும் விட்டுவிடுங்கள்! தேவையற்றவைகளுக்காகவும், பொருட்களுக்காகவும் மட்டும் வாழாதீர்கள்! எனது மகனில் வாழுங்கள், அதன் மூலம் நீங்கள் அவரில் வைத்துள்ள அன்பை பிறர் கண்டுகொள்ளட்டும். அவரை மென்மேலும் கண்டறிவதற்கு நான் உங்களுக்கு உதவுவேன். நான் உங்களுக்கு அவர் குறித்து அறியத்தருவோன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.



2016-03-18 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட வருடாந்த செய்தி

„அன்பான பிள்ளைகளே! தாயின் இதயத்தோடு, உங்கள்மீது அன்பு நிறைந்தவளாக, கடவுளாகிய தந்தை மீது முழு நம்பிக்கை வைத்து உங்களுக்கு நான் கற்பிக்க விரும்புகிறேன். நீங்கள் உள்ளகப் பார்வைகளினால் மற்றும் உள்ளக கேட்கும் புலன்களினால் இறைவனின் சித்தத்தை கற்றுக்கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் அவரது எல்லையற்ற இரக்கமான இதயத்தைத் தெரிந்துகொண்டு அவரது அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள், அதாவது நான் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருந்தபோல நீங்களும் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆகவே எனது பிள்ளைகளே, உங்கள் இதயத்தை தூய்மையாக்குங்கள். உங்களை சோதனையில் சிக்கவைக்கும் மற்றும் இறைவனின் அன்பைத் தேட செபம் மற்றும் ஒறுத்தல்களை சிதைத்துவிடும் பல்வேறு காரணிகள் அனைத்திலுமிருந்தும் விடுபடுவதுடன், இவைகளால் எனது மகனுடன் சச்சரவு செய்வதையும் விட்டுவிடுங்கள். ஆனால் இவை அனைத்திலும் பார்க்க, எனது பிள்ளைகளே, நீங்கள் அன்பையும் இரக்கமுள்ள இதயத்தையும் அதிகம் கொண்டிருங்கள். நீங்கள் தூய்மையான மற்றும் சாதாரண இதயத்தை கொண்டிருப்பதுடன் பணி செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள். எனது பிள்ளைகளே, எனது சொல்லைக் கேளுங்கள், நான் உங்கள் ஈடேற்றத்திற்காகவே பேசுகிறேன். நான் நன்றி கூறுகின்றேன்“



2016-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பார்ந்த பிள்ளைகளே! இன்று நான் எனது அன்பை உங்களுக்கு எடுத்து வருகின்றேன். உங்களை அன்பு செய்யவும், அன்பு செய்பவர்களாக நீங்கள் மாறுவதற்குக் குரல் கொடுக்கவும் கடவுள்; எனக்கு அனுமதியளித்துள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அன்பு செய்வதில் ஏழைகளாக உள்ளதுடன், எனது மகன் இயேசு உங்கள் மீது கொண்ட அன்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்ததுடன், உங்களை மீட்டு நித்திய வாழ்வைத் தரவுள்ளார் என்பதை இன்னும் நீங்கள் விளங்கிக் கொள்ளாமல் உள்ளீர்கள். ஆகவே, செபியுங்கள் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள் அதனால் இறைவனின் அன்பைப் புரிந்து கொள்வீர்கள். நன்றி நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு“



2016-04-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்களுக்கு இறுக்கமான, மூடியுள்ள மற்றும் பயம் நிறைந்த இதயம் தேவையில்லை. எனது தாயின் அன்பை அதற்குள் அனுமதியுங்கள், அது கதிர்களைப் பரப்பி அன்பாலும் நம்பிக்கையாலும் நிரப்பட்டும், அது உங்கள் வேதனைகளைக் குறைக்கட்டும், அவைகளை நான் அறிந்துள்ளேன், அவைகளை நானும் அனுபவித்துள்ளேன். வேதனை மனத்தாங்கல்களை எழுப்புவதுடன் அதிகம் செபிக்க வைக்கின்றது. எவர் வேதனைகளைக் நீங்கச் செய்கின்றார்களோ, அவர்களை எனது மகன் அன்பு செய்கிறார். உங்களைத் தேற்றவும் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கவுமே அவர் என்னை உங்களிடம் அனுப்பினார். அவரில் நம்பிக்கை கொள்ளுங்கள். எனக்குத் தெரியும், நீங்கள் தொடர்ந்தும் இருட்டில் சுற்றித்திரிவது எவ்வளவு கடினம் என்பது. எனது பிள்ளைகளே, நீங்கள் செபிப்பதுடன் அன்பைக் கொடுப்பது அவசியமாகின்றது. எவர் செபித்து அன்பு செய்கின்றாரோ, அவர் பயம் கொள்வதில்லை, அவர் நம்பிக்கை கொள்வதுடன் இரக்கமுள்ள இதயத்தைக் கொண்டிருப்பார், அவர் ஒளியையும் எனது மகனையும் கண்டுகொள்வார். எனது திருத்தூதர்களான உங்களை நான் அழைக்கிறேன், நீங்கள் இரக்கமுள்ள இதயத்தையும் நம்பிக்கiயையும் கொண்ட முன்னுதாரணமானவர்களாக இருப்பதுடன் ஒளியை வழங்குகங்கள், இதன்மூலம் அனைத்து இருள்களும் அகலட்டும், இதை எனது மகன் வழங்குவார். நீங்கள் பயப்படாதீர்கள், நீங்கள் தனியாக இல்லை, நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன், உங்கள் மேய்ப்பர்களுக்காகச் செபியுங்கள், அவர்கள் எந்த வேளையிலும் அன்பைக் கொண்டிருக்கவும், எனது மகனின் அன்பு போன்று அன்பைச் செலுத்தவும், அவரின் ஊடாகவும் அவரின் நினைவிலும் வாழவும் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.



2016-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது மாசற்ற இதயம் உங்களது பாவத்தையும் பாவத்துக்கான பழக்க வழக்கங்களையும் பார்த்துக் குருதி வடிக்கிறது. நான் உங்களை அழைக்கிறேன், இறைவனிடம் செபத்துடன் திரும்புங்கள், இதுவே மண்ணில் உங்களை நன்கு வாழ வைக்கும். தன்னை விட்டு விலகியுள்ள அனைவருக்கும் உங்கள் இதயம் நம்பிக்கையையும் மகிழ்வையும் கொடுக்க இறைவன் என் மூலமாக உங்களை அழைக்கிறார். எனது அழைப்பு உங்கள் ஆன்மாக்கும் இதயத்துக்கும் இதமளிக்கும் மருந்தாகட்டும், இதன்மூலம் அனைத்தையும் படைத்த இறைவன், உங்களை நேசிப்பதுடன் எப்பொழுதும் நீங்கள் அவரைப் போற்றிப் புகழ அழைக்கிறார். எனது அன்பான பிள்ளைகளே, வாழ்க்கை குறுகியது, நீங்கள் நன்மை செய்வதற்கு இக்காலத்தைப் பயன்படுத்துங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!



2016-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

எனது அன்பார்ந்த பிள்ளைகளே! உங்கள் உண்மையான மனம்திரும்புதலையும் உறுதியான நம்பிக்கையையும் எனது இதயம் விரும்புவதுடன், அதன்மூலம் உங்கள் அன்பு மற்றும் அமைதி நீங்கள் விரும்பும் அனைவருக்கும் பரவட்டும். ஆனால் எனது பிள்ளைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் வானகத்தந்தைக்கு முன்பாக தனித்துவமான பெறுமானமுள்ளவர்கள் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். இதனால் தூயஆவியின் இடைவிடாத கொடைகள் உங்களில் நிரம்பட்டும். எனது உளத்தூய்மையான பிள்ளைகளே! உங்கள் உள்ளம் தூய்மையாய் இருக்கட்டும். உளரீதியான அனைத்தும் உயிரோட்டமானவை மற்றும் மிகவும் அழகானவை. நம்பிக்கையின் இதயம் திருப்பலி என்பதை மறவாதீர்கள், அதனூடாகவே எனது மகன் எப்பொழுதும் உங்களுடன் உள்ளார். அவர் உங்களிடம் வருவதுடன் உங்களுக்காக அப்பத்தைப் பிட்டுப் பகிர்கின்றார், ஏனென்றால் எனது பிள்ளைகளே அவர் உங்களுக்காக இறந்து உயிர்த்தெழுந்தார் அத்துடன் மீண்டும் வருவார். எனது வார்த்தையை அறிந்த உங்களுக்கு நான் கூறுகின்றேன், அதுவே உண்மையானது, உண்மை ஒருபோதும் மாறாதது. எனது பல பிள்ளைகள் இதை மறந்துவிட்டனர். எனது பிள்ளைகளே எனது வார்த்தைகள் புதியதோ அல்லது பழையதோ அல்ல, அது என்றும் நிலையானது. ஆகவேதான் நான் உங்களை அழைக்கிறேன் எனது பிள்ளைகளே, நீங்கள் இந்தக் காலத்தின் அடையாளங்களை நன்கு புரிந்துகொள்வதுடன், நீங்கள் „உடைந்துபோயுள்ள சிலுவையைப் பொறுக்கி எடுங்கள்“ மற்றும் அதை வெளிப்படுத்தும் திருத்தூதர்களாக வாழுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.



2016-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது தரிசனம் உங்கள் அனைவருக்கும் இறைவனின் ஒரு கொடை என்பதுடன் மனம்திரும்பலுக்கான ஒரு சந்தர்ப்பமாகும். சாத்தான் வலிமையாக இருப்பதுடன் உங்கள் இதயத்தில் குழப்பங்களையும் சச்சரவுகளையும் ஏற்படுத்த விரும்புகிறான். ஆகவே நீங்கள் செபியுங்கள், எனது அன்பான பிள்ளைகளே, உங்களை தூய ஆவியானவர் மகிழ்வானதும் சமாதானமும் கொண்ட சரியான பாதையில் வழிநடத்தட்டும். நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகனிடம் உங்களுக்காக வேண்டுகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!



02.06.2016 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! திருச்சபையின் தாயாகவும், உங்களின் தாயாகவும், நீங்கள் எவ்வாறு என்னிடம் வருகின்றீர்கள், நீங்கள் எவ்வாறு என்னைச் சுற்றி ஒன்றுகூடுகின்றீர்கள், நீங்கள் எவ்வாறு என்னைத் தேடுகின்றீர்கள் என்பதைப் பார்த்து நான் சிரித்துக் கொள்கின்றேன். மீண்டும் மீண்டும் நான் உங்களிடம் வருவது வானகம் எவ்வாறு உங்களை நேசிக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அது உங்களுக்கு நித்திய வாழ்விற்கான வழியைக் காட்டுவதுடன் குணப்படுத்துகின்றது. எனது தூதர்களே, நீங்கள் தூய இதயத்தையும் அதில் எனது மகனையும் கொண்டிருக்க செய்யும் முயற்சிகள் நீங்கள் சரியான வழியில் செல்வதை எடுத்துக் காட்டுகின்றது. அவர் தனது அன்பை பல சமிக்கைகள் மூலம் விட்டுச்சென்றுள்ளார். அவர் நம்பிக்கையை விட்டுச்சென்றுள்ளார். நீங்கள் உங்களை ஒப்புக்கொடுப்பதற்கும் ஒப்புரவாக்குவதற்கும் தயாராக இருந்தால், நீங்கள் பொறுமையாக இருந்தால், அயலாருடன் இரக்கமுள்ள இதயத்தோடும் அன்போடும் இருந்தால் அவரைக் கண்டுபிடிப்பது மிக இலகுவானது. பலர் எனது வார்த்தைகளையும் எனது செயல்களையும் ஏற்றுக்கொள்வதில்லை, ஆனால் எனது மகன் என் மூலமாக அனைவரையும் அழைக்கிறார். அவரது ஆவி எனது அனைத்துப் பிள்ளைகளுக்கும் வானகத் தந்தையிடமிருந்து ஒளியாக பிரகாசிக்கப்படுகின்றது. ஆகவே எனது தூதர்களே, உங்கள் திருச்சபைக்காக செபியுங்கள், அதை அன்புசெய்வதுடன் அன்பை செயற்படுத்துங்கள். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், அவர்களில் நீங்கள் எனது மகனின் அளப்பெரிய அன்பைக் கண்டுகொள்வீர்கள். நான் நன்றி கூறுகிறேன்.



2016-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களுடன் இருப்பதற்காக என்னுடன் சேர்ந்து இறைவனுக்கு நன்றிகூறுங்கள். செபியுங்கள், எனது அன்பான பிள்ளைகளே, கடவுளின் கட்டளைகளின்படி வாழுங்கள், அதன்மூலம் பூமியில் உங்களுக்கு நலம் கிடைக்கட்டும். இன்று, இந்த இரக்கத்தின் நாளில், நான் உங்களுக்கு அன்னையின் சமாதான ஆசீரையும் எனது அன்பையும் வழங்குகின்றேன். நான் எனது மகனிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்வதுடன், தொடர்ந்து செபித்துக் கொள்ளுங்கள், இதன்மூலம் நான் உங்களுடன் சேர்ந்து எனது திட்டங்களை செயற்படுத்த முடியும். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!



2016-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் உண்மையாக உங்கள் மத்தியில் வந்துள்ளது உங்களை மகிழ்விக்கும் ஏனென்றால் இது எனது மகனின் மிகுந்த அன்பால் நிகழவது. அவர் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார், இதன்மூலம் நான் உங்களுக்கு அன்னையின் அன்புடன் பாதுகாப்பு வழங்குகிறேன், இதன்மூலம் நீங்கள் வேதனை மற்றும் மகிழ்வு, துன்பம் மற்றும் அன்பு போன்றவற்றை விளங்கிக்கொண்டு உங்கள் ஆன்மாவில் அவற்றை மிக ஆழமாகப் பதித்துக்கொள்வதுடன், நான் உங்களை மீண்டும் புதிதாக அழைக்கும்போதெல்லாம், இயேசுவின் இதயம், அதாவது நம்பிக்கையின் இதயத்தைப் போற்றிப்புகழ வேண்டும். எனது மகன், முடிவில்லா வாழ்வுடையவர் நாளுக்கு நாள் உங்களிடம் திரும்புகிறார். அவர் உங்களிடம் திரும்பி வருகிறார், அவர் உங்களைவிட்டு ஒருபோதும் விலகமாட்டார். எனது பிள்ளைகளே உங்களில் ஒருவர், அவரிடம் திரும்பி வரும்போது அன்னையாகிய எனது இதயம் மகிழ்வால் துள்ளுகின்றது. ஆகவே, எனது பிள்ளைகளே, எனது மகனிடம் திரும்பி வாருங்கள். எனது மகனிடம் வரும் வழி கடினமானது, முழுமையாக வேதனை தருவது, ஆனால் இறுதியில் எப்பொழுதும் வெளிச்சமானது. நான் உங்கள் வேதனைகள் மற்றும் துன்பங்களை அறிவேன் அத்துடன் அன்னையின் அன்புடன உங்கள் கண்ணீரைத் துடைக்கிறேன். நீங்கள் எனது மகனில் நம்பிக்கை கொள்ளுங்கள், ஏனென்றால் அவர் நீங்கள் ஒருமுறையாவது ஒரு விடயத்திற்காகத் தேடாத போதும் உங்களுக்காக அதைச் செய்வார். நீங்கள், எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் ஆன்மாவை மட்டும் பராமரியுங்கள், ஏனென்றால் அது ஒன்றுதான் உங்களுக்கு உலகில் சொந்தமானது. நீங்கள் அதை அசுத்தமாகவோ அல்லது பரிசுத்தமாகவோ வானகத் தந்தையிடம் எடுத்து வரலாம். கவனத்திற் கொள்ளுங்கள், எனது மகனின் அன்பில் நம்பிக்கை கொள்பவர்களுக்கு எப்பொழுதும் வெகுமதி கிட்டும். நான் உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், விசேடமாக அவரில் அன்பு செலுத்தி அவரது மந்தைகளை மேய்ப்பவர்களுக்காக செபித்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்"



2016-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நீங்கள் தவறிச்செல்வதை நான் பார்ப்பதுடன், உங்கள் இதயத்தில் செபமோ அல்லது மகிழ்வோ தெரியவில்லை. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்திற்குத் திரும்புவதுடன் மனிதருக்கு அல்லாது இறைவனுக்கு முதலிடம் கொடுங்கள். நான் உங்களுக்கு எடுத்து வரும் நம்பிக்கையை இழக்காதிருங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இந்த வேளையில் நீங்கள் ஒவ்வொரு நாளும் இதயத்தில் அமைதியுடன் இறைவனை மென்மேலும் தேடிக்கொள்ளுங்கள், செபியுங்கள், செபியுங்கள், செபம் உங்களுக்கு மகிழ்வைத் தரும்வரை செபியுங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“



2016-08-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களிடம், உங்களிடையே வருகை தந்துள்ளேன், இதன்மூலம் நான் உங்கள் நலனுக்காக அவரிடம் வேண்டிக் கொள்வேன். எனக்குத் தெரியும் உங்களில் ஒவ்வொருவருக்கும் கவலைகள் உண்டு, சோதனைகள் உண்டு, ஆகவே தாயாக உங்களை அழைக்கிறேன், எனது மகனின் திருவிருந்துக்கு வாருங்கள். அவர் உங்களுக்காக அப்பத்தைப் பிட்பார், அவராகவே உங்களுக்கு அதைத் தருவார், அவர் உங்களுக்கு நம்பிக்கையைத் தருவார். அவர் உங்களிடம் மேலும் விசுவாசத்தை, நம்பிக்கையை மற்றும் உற்சாகத்தைத் தேடுகின்றார். அவர்- சுயநலம், தீர்ப்பிடுவது மற்றும் மனித பலவீனங்களுக்கு எதிரான உங்களது உள்ளார்ந்த எதிர்ப்பை எதிர்பார்க்கின்றார். ஆகவே தாயாக உங்களுக்குக் கூறுகின்றேன்: செபியுங்கள், இதனால் செபங்கள் உங்களுக்கு உள்ளார்ந்த எதிர்ப்பைக் காட்டுவதற்கான பலத்தைத் தரும். எனது மகன் சிறுவனாக இருந்தபோது அடிக்கடி என்னைப் பலர் விரும்புவார்கள் மற்றும் தாய் என்று அழைப்பார்கள் எனக் கூறிவந்தார். நான், இங்கு உங்கள் மத்தியில் அன்பை உணர்கின்றேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். இந்த அன்பின் பிரகாரம் நான் எனது மகனிடம் வேண்டிக் கொள்கின்றேன், உங்களில் எவரும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, வீடு திரும்பும்போது, இங்கு வருகை தந்த மாதிரியே செல்லமாட்டீர்கள். நீங்கள் மிக அதிக நம்பிக்கை, இரக்கம் மற்றும் அன்பை எடுத்துச் செல்வதுடன், நீங்கள் எனது அன்பின் தூதர்களாக இருந்து கொள்ளுங்கள், இதை உங்கள் வாழ்வில் சாட்சியமாக்கும்போது, வானகத் தந்தை சாவின் அல்லாது வாழ்வின் ஊற்று என்பதை அறிந்து கொள்வீர்கள். அன்பான பிள்ளைகளே, மீண்டும் உங்களிடம் தாயாகத் தயவாகக் கேட்டுக்கொள்வது, எனது மகனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக அவர்களது ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களுக்காக, உங்கள் மேய்ப்பர்களுக்காக, செபியுங்கள், அவர்கள் எனது மகன் குறித்து எவ்வளவு இயலுமோ அவ்வளவு அன்புடன் அறிவிக்கின்றனர் இதன்மூலமே மனம்திரும்புதல் ஏற்படுகின்றது. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“



2016-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களுடன் வானகத் தந்தையின் மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இதயத்தின் கதவுகளைத் திறவுங்கள், இதன்மூலம் உங்கள் இதயத்தில் இறைவனால் மட்டும் தரக்கூடிய நம்பிக்கை, சமாதானம் மற்றும் அன்பு வளர்ச்சிபெறும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அதிகளவில் இவ்வுலகுடனும் அதன் மாயைப் பொருட்களிலும் கட்டுண்டுள்ளீர்கள், ஆகவேதான் சாத்தான் வீசும் கடல் காற்றைப்போல உங்களை அலைக்கழிக்கிறான். ஆகவே நீங்கள் உங்கள் வாழ்வை இதயத்தின் செபங்களுடன் இணைத்து எனது மகன் இயேசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலத்தை அவரிடம் ஒப்படையுங்கள், அதன்மூலம் நீங்கள் அவரிலும் ஏனையவர்களிலும் மகிழ்வடைவதுடன் உங்கள் வாழ்வை இதற்கு உதாரணமாக்குங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பபைப் பின்பற்றுவதற்கு“



2016-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது மகனின் விருப்பத்திற்கும் அன்னையான எனது அன்பிற்குமாக நான் உங்களிடம் வருகின்றேன், எனது பிள்ளைகளே, அனைத்திற்கும் மேலாக, எனது மகனின் அன்பை இதுவரை கண்டறியாதவர்களுக்காக வருகின்றேன். என்னை நினைப்பவர்களுக்கும், என்னைக் கூவி அழைப்பவர்களுக்குமாகவே உங்களிடம் வருகின்றேன். நான் உங்களுக்கு அன்னையாகிய எனது அன்பையும் எனது மகனின் ஆசீரையும் எடுத்து வருகின்றேன். உங்களுக்கு தூய மற்றும் திறந்த இதயம் உள்ளதா? நான் வந்திருக்கும்போது எனது கொடைகளையும் அடையாளங்களையும் காண்கின்றீர்களா? எனது பிள்ளைகளே, உங்கள் பாவ வாழ்வை விடுத்து எனது முன்மாதிரிகை உங்களை வழிநடத்தட்டும். எனது வாழ்வு வேதனை, இரகசியம் மற்றும் வானகத்தந்தையில் அளவில்லா விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டதாய் இருந்தது. வேதனை, மகிழ்ச்சி, அன்பு அனைத்தும் தற்செயலாக ஏற்பட்டவை அல்ல. அவை எனது மகன் உங்களுக்குக் காட்டிய இரக்கத்தால் நித்திய வாழ்விற்கு இட்டுச்செல்பவை. எனது மகன் உங்களிடமிருந்து அன்பு மற்றும் அவரில் செபிப்பதை எதிர்பார்க்கின்றார். அன்னையாக நான் உங்களுக்குக் கற்பிப்பது: அவரை அன்பு செய்வது மற்றும் அவரிடம் அமைதியாகச் செபிப்பது என்பதன் அர்த்தம், உதடுகளை அசைத்துக் கொள்வது மட்டுமல்லாது அமைதியாக உங்கள் ஆன்மாவால் செபிப்பதாகும். இதுவே எனது மகனுக்காக நீங்கள் செய்யும் சிறிய மற்றும் அழகான செயலாகும். எனது பிள்ளைகளே, எனது மகன் உங்களிடம் எதிர்பார்த்திருக்கிறார். செபியுங்கள், இதன் மூலம் நீங்கள் அவரது முகத்தைக் காணுங்கள், இதனால் உங்களுக்கு வெளிப்படுத்தல் நிகழ முடியும். எனது பிள்ளைகளே, நான் உங்களுக்கு ஒரேயொரு உண்மையை வெளிப்படுத்துகிறேன். செபியுங்கள், இதன்மூலம் நீங்கள் இதை விளங்கிக்கொள்ள முடியும், இதன்மூலம் நீங்கள் அன்பை மற்றும் நம்பிக்கையை பரப்ப முடியும், இதன்மூலம் நீங்கள் எனது அன்பின் சீடர்களாக முடியும். எனது அன்னைக்குரிய இதயம் விசேடமாக உங்கள் மேய்ப்பர்களை அன்பு செய்கின்றது. அவர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களுக்காகச் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“



2016-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை செபிப்பதற்கு அழைக்கிறேன். செபங்கள் உங்களுக்கு வாழ்வை வழங்கட்டும். இதன்மூலமாக மட்டுமே உங்கள் இதயத்தில் அமைதியும் மகிழ்வும் நிரம்பும். இறைவன் உங்கள் அருகில் இருப்பதுடன் உங்கள் இதயத்தில் அவரை உங்கள் நண்பனாக உணர்ந்து கொள்ளுங்கள். நன்கு பழகிய ஒருவருடன் கதைப்பதுபோல் நீங்கள் அவருடன் கதைப்பதுடன், அதற்கு நீங்கள் சாட்சியம் வழங்க வேண்டிய தேவையும் உள்ளது, ஏனென்றால் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இயேசு உங்கள் இதயத்தில் இருப்பதுடன் நீங்கள் அவருடன் ஒன்றித்துள்ளீர்கள். நான் உங்களுடன் என்றும் இருப்பதுடன் தாய்ப் பாசத்துடன் உங்கள் அனைவரையும் அன்பு செய்கின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“



2016-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தூய ஆவியானவர் வானகத் தந்தையின் சித்தப்படி என்னை இயேசுவின் தாயாகச் செய்தார், இதன்மூலம் நான் உங்களுக்கும் தாயானேன். ஆகவேதான் நான் உங்களின் வேண்டுதல்களைக் கேட்பதற்காக அன்னையாகிய எனது கரங்களை அகல விரிக்கிறேன், இதன்மூலம் நான் உங்களுக்கு எனது இதயத்தைத் தருவதுடன் என்னோடு இருக்குமாறும், எனது மகனின் சிலுவையில் நம்பிக்கை வைக்கவும் உங்களை அழைக்கிறேன். இருப்பினும் எனது பல பிள்ளைகள் எனது மகனின் அன்பை இன்னும் அறியாதிருக்கின்றனர், பலர் அவரைக் கண்டறிய விருப்பமில்லாது உள்ளனர். ஓ, எனது பிள்ளைகளே, எத்தனை செயல்களை செய்து அல்லது கண்டு நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, நீங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது தூதர்களே, உங்கள் இதய அமைதியுடன், எனது மகனின் குரலைக் கேளுங்கள், இதன்மூலம் உங்கள் இதயம் அவரது இல்லமாகட்டும், இதன்மூலம் அது தாகமில்லாது கவலையில்லாது இருக்கட்டும், எனது மகனின் ஒளியால் பிரகாசிக்கட்டும். விசுவாசத்திற்கு ஊடாக நம்பிக்கையைத் தேடுங்கள், ஏனென்றால் விசுவாசமே உயிரின் ஊற்றாக உள்ளது. மீண்டும் உங்களை நான் அழைக்கிறேன்: செபியுங்கள், செபியுங்கள், நீங்கள் விசுவாசத்தில் உற்சாகமாகவும், ஆன்மீகத்தில் அமைதியுடனும் ஒளி பரப்பியும் வாழுங்கள். எனது பிள்ளைகளே! அனைத்தையும் ஒன்றாக விளங்கிக்கொள்ள முயலாதீர்கள், ஏனென்றால் நானும் அனைத்தையும் விளங்காதவள், ஆனால் நான் அன்பு செய்ததுடன் எனது மகன் உரைத்த இறை வார்த்தையின்படி வாழ்ந்தவள், அவரே, முதலாவது ஒளியும் மாட்சிமையும் ஆனவர். தூதர்களான எனது பிள்ளைகளே, செபிக்கும், காணிக்கையைச் செலுத்தும் நீங்கள் உண்மையைப் பரப்புங்கள், எனது மகனின் வார்த்தையான இறைச் செய்தியைப் பரப்புங்கள், ஏனென்றால் நீங்களே உயிர்வாழும் இறைவார்த்தையாக உள்ளீர்கள், நீங்களே எனது மகனின் ஒளியைப் பிரகாசிப்பவர்களாக உள்ளீர்கள். உங்களை உற்சாகப்படுத்தவும் கண்காணித்துக் கொள்ளவும் எனது மகனும் நானும் உங்கள் பக்கத்தில் இருக்கிறோம். எனது பிள்ளைகளே, எப்பொழுதும் எனது மகன் கரங்களால் ஆசீர் பெற்ற உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“



2016-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை அழைக்கிறேன்: சமாதானத்திற்காக செபியுங்கள்! சுயநலப்போக்கை விட்டுவிடுவதுடன் நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுதல்களை செவிமடுங்கள். அது இல்லாமல் நீங்கள் உங்கள் வாழ்வை மாற்றியமைக்க முடியாது. செபத்தை விரும்பவதன் மூலம் உங்களுக்கு அமைதி கிடைக்கும், அமைதியில் வாழும்போது உங்கள் தேவைகள் பற்றி அறிந்து கொள்வீர்கள், அதற்கு சாட்சியம் வழங்குவீர்கள். தற்போது இறைவன் தொலைவில் இருப்பதாக எண்ணும் நீங்கள் அவரைக் கண்டுகொள்வீர்கள். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள் அத்துடன் இறைவன் உங்கள் இதயத்தின் உள்வர அனுமதியுங்கள். நோன்பிருத்தலுக்கு மற்றும் ஒப்பரவாகுதலுக்கு திரும்பி வாருங்கள், இதன்மூலம் நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“



2016-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்களிடம் வருவதும் என்னை உங்களுக்கு வெளிப்படுத்துவதும் எனது தாயன்புமிகு இதயத்திற்கு பெரு மகிழ்வைத் தருகின்றது. இது உங்களுக்கும் இங்கு வருகைதரும் ஏனையவர்களுக்குமான எனது மகனின் ஒரு பரிசாகும். தாயாக உங்களை அழைக்கிறேன், அனைத்திலும் பார்க்க எனது மகனை அன்பு செய்யுங்கள். அவரை முழு இதயத்தாலும் அன்பு செய்வதற்கு, நீங்கள் அவரை நன்கு அறிந்திருக்க வேண்டும். செபிக்கும்போது நீங்கள் அவரை அறிந்து கொள்வீர்கள். இதயத்தாலும் உணர்வாலும் செபியுங்கள். செபம் என்பதன் அர்த்தம், அவரது அன்பையும் அவரது அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வதாகும். செபம் என்பதன் அர்த்தம் அன்பு செய்தல், கொடுத்தல், துன்பப்படல் மற்றும் அதில் ஈடுபடல் என்பதாகும். எனது பிள்ளைகளே, உங்களை செபத்தினதும் அன்பினதும் தூதர்களாகுமாறு அழைக்கிறேன். எனது பிள்ளைகளே, இது விழிப்பாக இருக்கும் காலம். இவ் விழிப்பான வேளையில் அன்பிலும் நம்பிக்கையிலும் செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன், எனது மகன் உங்கள் இதயத்தைப் பார்க்கும்போது, அவர் உங்களிடம் நிபந்தனையற்ற நம்பிக்கையையும் அன்பையும் காண வேண்டுமென தாயான எனது இதயம் விரும்புகிறது. எனது தூதர்களின் ஒன்றுசேர்ந்த அன்பு வாழ்வழிக்கும், வெற்றிகொள்ளும் அத்துடன் சாத்தானை விரட்டிவிடும். எனது பிள்ளைகளே, நானே இறைமனிதனைப் பெற்றெடுத்த பாத்திரம், நானே இறைவனுக்கு வழிகாட்டி. ஆகவே எனது தூதர்களே நீங்கள் எனது மகனின் உண்மையான தூய அன்புள்ள பாத்திரங்களாக இருக்க உங்களை அழைக்கிறேன், இறைவனின் அன்பை இதுவரை அறியாதவர்களுக்கு, அதை உணராதவர்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் வாழ உங்களை அழைக்கிறேன். எனது பிள்ளைகளே நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்,.“ இறையன்னையின் காட்சி மறைவுற்ற வேளையில், மிர்ஜான ஒரு இரசப் பாத்திரத்தைக் கண்டார்.



2016-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை, மீளவும் செபிப்பதற்கு வருமாறு அழைக்கிறேன். இந்த இரக்கத்தின் காலத்தில் இறைவன் உங்களை தூயவர்களாக மற்றும் மிகச் சாதாரணமான வாழ்க்கையை வாழ என் மூலமாக அழைக்கிறார், இதன்மூலம் நீங்கள் சிறு விடயங்களிலும் இறைவனின் படைப்பை அறிந்து கொள்வதுடன், அவரை அன்பு செய்து அவர் தந்துள்ள அனைத்திற்காகவும் அவருக்கு நன்றி கூறுங்கள். அன்பான பிள்ளைகளே, உங்கள் வாழ்வு மற்றவர்களுக்கு அன்பைக் கொடுப்பதாக அமையட்டும், அதற்காக இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார், நீங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருப்பதுடன் இறைவனின் அன்பை விரும்பாதவர்களாக வாழாதீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவருக்காகவும் எனது மகனிடம் மன்றாடிக்கொள்வேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!"



2016-12-02 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது பிள்ளைகள் நடந்து கொள்ளும் விதத்தை நான் பார்க்கும்போது, எனது தாய்மைக்குரிய இதயம் அழுகின்றது. பாவங்கள் அதிகரிக்கின்றன, தூய்மையான ஆன்மா எப்பொழுதும் முக்கியமானது என்பதுடன் எனது மகனை பலர் மறந்து விடுகின்றனர், பலவேளைகளில் அவரை மதிப்பது குறைவடைகின்றது, எனது பிள்ளைகள் தண்டிக்கப்படுகின்றனர். ஆகவே நீங்கள், எனது பிள்ளைகளே, எனது அன்பின் சீடர்களே, எனது மகனின் பெயரால் இதயத்தாலும் ஆன்மாவாலும் அழைக்கிறேன். அவரே ஒளியின் வார்த்தைகளாக உங்களுக்கு இருப்பார். அவர் உங்களுக்குத் தன்னை வெளிப்படுத்துவார், அவர் உங்களுடன் அப்பத்தைப் பிட்பதுடன் அதை அன்பு வார்த்தைகளாக வழங்குவார், இதன்மூலம் நீங்கள் அதை இரக்கமுள்ள இதயச் செயல்களாக மாற்றுவதுடன் உண்மைக்கு சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, பயம் கொள்ளாதீர்கள். உங்களில் எனது மகன் இருப்பதற்கு அனுமதியுங்கள். அவர் உங்களின் காயங்களைப் பராமரிப்பதுடன் இழந்துபோன ஆன்மாவை மீட்டெடுக்க உதவுவார். ஆகவே, எனது பிள்ளைகளே, செபமாலை செபிப்பதற்கு திரும்பி வாருங்கள். அவரிடம் நல்ல உணர்வுகளுடன், இரக்கமுள்ள இதயத்துடன் செபியுங்கள். வார்த்தைகளால் செபிப்பதோடு மட்டும் நின்றுவிடாது, இரக்கச் செயல்களாலும் காட்டுங்கள். அன்புடன் அனைத்து மனிதர்களுக்காகவும் செபியுங்கள். எனது மகன் அன்பைக் காணிக்கையாக்குபவர்களின் வேண்டுகோள்களைக் கேட்டுக்கொள்வார். ஆகவே, அவருடன் வாழுங்கள், அன்பாக இருப்பது மற்றும் பலமும் நம்பிக்கையும் கொள்வது, நித்திய வாழ்விற்கு இட்டுச்செல்லும். இறைவனின் அன்பின் மூலம் நான் உங்களுடன் இருப்பதுடன் தாய்மையின் அன்பில் வழிநடத்துவேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“



25-12-2016 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, மிகுந்த மகிழ்ச்சியோடு எனது மகனை சுமந்தபடி அவரது சமாதானத்தை உங்களுக்கு தருவதற்காக வருகின்றேன். உங்களுடைய இருதயத்தை அவரது சமாதானத்திற்க்காக திறவுங்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு நீங்கள் அதைப்பெற்றுக் கொள்வீர்கள். உங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் சமாதானத்தை தருவதற்காக விண்ணகம் விளைகின்றது. உங்களின் செபத்தினால் இந்த சமாதானத்தை பெற்று கொள்வீர்கள். உங்களுடைய நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என, எனது மகனுடன் உங்களை அசீர்வதிக்கின்றேன். உங்களுடைய உள்ளம் தளராத உள்ளத்தோடு எப்போதும் பரலோகத்தை நோக்கி இருப்பதாக. அப்போது கடவுளின் திட்டம் நிறைவேறும். எனது அழைப்பிற்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.