இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா இன்றைய நாளே: முதல் நாள்….மூன்றாம் நாள்….. …..!தி.ப10:34 37-43 கொலோ3:1-4 யோவா20:1-9
கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே
இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே……
உயிர்த்த இறையவன் நம்இறைமகன் இயேசுவின்
இணையில்லா ஆசீர் உங்களோடு தங்கட்டும்!
உயிர்ப்பு ஞாயிறு ஒருநாள் கொண்டாட்டமல்ல
உயிர்த்த இயேசு ஒருகாலத்திற்குட்பட்டவர் அல்ல
உயிர்ப்பு அனுபவம் கடந்தகால வரலாறு அல்ல
உயிருள்ள இயேசு மண்ணகத்தை மறந்தவர் அல்ல
இன்றைநாள் எனக்கு ஏமாற்றம் தந்ந நாள் நல்ல நாள் அல்ல
இன்றைய தினம் என் வேலை கேள்விக்குறியான நாள் நல்ல நினைவு அல்ல
இன்றை நேரம் எனக்குகுரியது அல்ல நான் நினைத்தது நடக்கவில்லை
இன்றும் நான் கொடுத்துவைக்கவில்லை என்சார்பாக தீர்ப்பை இறைவன் தரவில்லை…
.
நாளின் நேரத்தின் தருணத்தின் நிகழ்வுகளுக்கு யார் காரணம்?
நானா? என்னை சுற்றியிருப்பவர்களா? என்னை படைத்த இறைவனா?
என்நாள் வராதா? எனக்கும் வாய்ப்பு கிடைக்காதா? என் நேரம் எப்பொழுது?
எனக்கும் உயிர்ப்பு என் திறமைக்கும் ஒரு புதியபாதை கிடைக்காதா?
மேற்சொன்ன ஆதகங்கள் குமுறல்கள் சராசரிமனிதனுடையவை
எனக்குரிய நாள் ராசியான நாள் எங்யோயில்லை யாரிடமுமில்லை
என்னை சுற்றி நானே உருவாக்கும் கசப்பான வெறுப்பான கல்லறை ஏன்!
என்குரிய நாளில்லை நேரமில்லை என்பதை மாற்றுவோம் மனதால் எண்ணத்தால்.
வாரத்தின் முதல்நாளும் விழுந்தபின் மூன்றாம் நாளான ஞாயிறு
முக்கியமான நாள் முழுமையான நாள் முடிவுறாத நாளாகும்.
உயிர்ப்பை புதுஉயிரை புத்துணர்வை புதுவாழ்வை பெற்றெடுத்த நாள்
உயரலாம் உருவாக்கலாம் உயிராகலாம் என்பதை உண்மையாக்கிய நாள்…..
ஓடிய திருத்தூதர்கள் திடீரென ஆச்சரியத்தில் ஆடிப்போனநாள்
தேடிச்சென்ற பெண்கள் திகைப்புள்ளாகி அதிசயத்தநாள்
வெறுமையான கல்லறை வெண்மை நிறை தூதர் அவரின் செய்திகள்
பயத்தை கேள்விகளை குழப்பங்களை அதிகமாக்கிய நாள்
இன்றையநாளும் முதல்நாளாக காண உயிர்ப்பின் நாளாக காண
இறப்பும் பயமும் பாவமும் பலவீனமும் சோதனையும் வேதனையும்
இறுதி கதவுஅல்ல முடியும் புள்ளி அல்ல முக்கியமையம் அல்ல
உயிர்ப்பே உயிர்த்த இயேசுவே மறுதொடக்கம் புதுமுயற்சி புதுவாழ்வு
இதயம் மற்றும் சிறுநீரக தானத்துக்காக ஆறுமாதங்கள் காத்திருந்த ஜிம்
7 என்ற எண்மட்டுமல்ல 7 எனவரும் எந்நாளும் எனக்குரிய நாள்
என்ற எண்ணம் மாற இன்றைய நாளும் என்நாள் என்உயிர்ப்பின் நாள்
என புத்துயிருடன் காத்திருந்து உயிர்ப்பை அனுபவித்த நாள் புது உயிர்பெற்றநாள்
மூன்றாம் நாளும் முதல் நாளும் எனக்கு மறுஅன்பு அனுபவமாகட்டும்.
அது முக்கியமான இன்றைய நாளாகட்டும் உயிர்ப்பின் மக்களாவோம்-ஆமென்.
|