இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக் காலம் 3ஆம் ஞாயிறு

உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர்

முதலாம் வாசகம்: எசாயா 61:1-2a, 10-11
இரண்டாம் வாசகம் : 1 தெசலோனிக்கர் 5: 16-24
நற்செய்தி வாசகம் : யோவான் 1: 6-8, 19-28

இன்று திருவருகைக் காலம் 3ஆம் வாரத்தில் பயணிக்கின்றோம். இறைசிந்தனைக்காக இறைவார்த்தையை வாசித்து தியானித்த பெழுது “உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர்” என்ற இறைவசனம் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. இறைவனின் தாய் அன்னை மரியாள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. நாம் உறங்கும்போதும் விழிக்கும்போதும் நம்மை முழுமையாக அறிந்து வழிநடத்துகின்ற இறைவன் நம்பிக்கைக்குரியவர். அவர்நிழலைப்போல் மாறுபவர் அல்ல மாறாக அவர் நேற்றும் இன்றும் என்றும் நம்பிக்கைக்குரியவர். இன்றைய பதிலுரைப் பாடலாக லூக்கா நற்செய்தியில் அன்னை மரியா கபிரியேல் வானதூதரின் நற்செய்தியை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டபின்பு அவருடைய உறவினரான எலிசபெத்தை சந்திக்க சென்ற அன்னை மரியாவின் காதுகளில் கேட்ட வார்த்தை “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர், உம் வயிற்றில் வளரும் குழுந்தையும் ஆசி பெற்றதே! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் ஆண்டவருடைய அழைப்பை அன்னை மரியாள் நம்பிக்கைக் கொண்டு முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். அன்னை மரியாள் இடைவிடாது மன்றாடுவதிலும் எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி உள்ளத்துடன் இறைவனின் திருவுள்ளத்தை ஏற்று அவருக்கு வாழ்நாள் முழுவதும் பிரமாணிக்கமாய் இருந்தாள். இறைவனை நம்பும்போது நமது உள்ளத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கின்றது

ஒளியான இறைவன் என்றும் நம்பிக்கைக்குரியவர். அவர் நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். இறைவன் அவருடைய வழிநடத்தலின் வழியாக நமக்கு உயிர்மூச்சாக கொடுத்துள்ள தொடக்கநூல் முதல் திருவெளிப்பாடு நூல் வரை உள்ள ஒவ்வொரு சொற்களும் இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்பதை எடுத்துரைக்கின்றது. இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்பதை இறுதிமட்டும் நம்பியவர்தான் அன்னை மரியாள். அவர் உன்னத கடவுளின் வல்லமையால் நிழலிட்டபிறகு மகிழ்ச்சியால் நன்றிப் பாடல் பாடுகின்றார். இறைவாக்கினர் ஏசாயாவும் கூறகின்றார் ‘ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன். என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும் என்று. இறைமகன் இயேசுவும் தந்தையாகி இறைவனை சிலுவை மரணம் மட்டும் நம்பினார். அவருடைய நம்பிக்கை உயிர்ப்பின் போது மகிழ்ச்சியாக மாறுகின்றது. இன்று நானும் நீங்களும் இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்பதை நமது வாழ்க்கையில் உணர்ந்திருக்கின்றோமா? உண்மையிலும் ஆவியிலும் என்றும் வாழுகின்ற இறைமகன் இயேசுவின் அமைதியும் அருளும் நம் உள்ளத்திலும் குடும்பத்திலும் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அவரைபற்றி வார்த்தையின் வழியாக அறிந்து அனுபவித்து சுவைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் திருமுழக்கு யோவானைப் போல் பிறருக்கு இறைமகன் இயேசுவைப் பற்றி சுட்டிக் காட்ட முடியும். இறைவனின் ஆவியானவர் நம்மில் வாழ்கின்றார். அவருடைய செயல்பாடுகளை தடுக்க வேண்டாம் என்று இறைவார்த்தை கூறுகின்றது. நமது அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலையில் பயணிக்க ஆவியானவரின் செயல்பாடுகள் மிக அவசியம். ஒளியான இறைவனை பாவம் என்னும் இருளால் இழந்து விட்டால் அவரைக் கண்டிப்பாக உணரமுடியாது. திருமுழுக்கு யோவான் தனது தாய் எலிசபெத்தின் வயிற்றில இருக்கும் போதே ஆண்டவரின் நற்செய்தியைக் கேட்டு துள்ளிக் குதித்தவர். ஆவியானவரால் அபிசேகம் செய்யப் பட்டவர். அப்படி இருந்தும் அவர் தோற்றத்தில் எளிமையும் தாழ்மையும் இருந்தது. தன்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு உண்மையை எடுத்துரைத்தார். இறைமகன் இயேசுவின் நற்பண்புகளைப் பற்றி துணிவுடன் எடுத்துரைக்கின்றார்

இறைவன் நமக்குக் கொடுத்துள்ள திருவருகைக் காலமானது அருளின் காலம். நமது மனங்களில் உள்ள கரடு முரடான மேடு பள்ளங்களை இறைவனின் அருளால் நிரப்ப வேண்டும். நம்மில் இறைவனின் ஒளி இருந்தால்தான் நம்மால் அவருக்கு சான்று பகர முடியும். இறைவன் எனக்கும் உங்களுக்கும் அளவிடமுடியாத நன்மைகளைச் செய்துள்ளார். பாசமும் நேசமும் கருணையும் இரக்கமும் கொண்டுள்ள ஒளியான இறைவனுக்கு என்றும் பிரமாணிக்கமாய் இருப்போம். இம்மானுவேலாகிய இறைவனை நம்மில் வரவேற்க வேண்டிய தாயாரிப்புகளை முழு உள்ளத்துடனும் வாஞ்சையுடனும் அனைவரும் தயார் செய்வோம். ஒளியான இறைவா வாரும் உலகின் இருளை அகற்றும் வன்முறை கலகம் கொடுமைகள் சமூகத் தீய சக்திகளை அகற்றும் மன்னிப்பு அன்பு ஒற்றமை சமாதானம் நிலவ ஒளியின் ஆற்றலைத் தாரும் உலக நாட்டுத் தலைவர்களை உமது ஞானத்தால் நிரப்பும் மனித குலத்தையும் படைப்புக்களையும் பாதுகாக்கவும். பாவத்திற்கு அடிமையாகி அதன் வழியில் பயணிக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவை விடுவித்தருளும். ஒளியான இறைவா எங்களோடு வந்து தங்கும். நம்மை உருவாக்கியவர் என்றும் நம்பிக்கைக்குரியவர் என்பதை நம்புவோம். நான் யார்? எங்கிருந்து வந்தவர்? என்னுடைய குடும்பம்? என்னுடைய வாழக்கை? என்னுடைய நிலை ? திருமுழுக்கு யோவானைப் போல் தாழ்மையோடு உள்ளோமா? ஒளியின் சாட்சிகளாய் வாழ்கின்றோமோ? சிந்திப்போம்? நற்குணங்களைப் பெற்று இறைவன் முன்பு நம்மை தாழத்துவோம் அப்போது அவர் உயர்த்துவார்.