பொதுக்காலம் 34 வது - ஞாயிறுஇரண்டாம் ஆண்டு 25-11-2012இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா!திருப்பலி முன்னுரைஇறையரசுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் முப்பத்திநான்காம் ஞாயிறு திருப்பலியுடன் இன்று தாய் திருச்சபையானது கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கப்படுகிறோம். என்றென்றும் ஆட்சி செய்பவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத் தன்மையைப் பற்றி சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. அனைத்துலகின் அரசரான நம் ஆண்டவர், ஆளுநன் பிலாத்து முன்னிலையில் ஒரு கைதியாக நிற்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. உண்மைக்கு சாட்சியம் கூறுவதே என் பணி, வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்ற இறைமகன் இயேசுவின் கூற்று அவரது பணி வாழ்வில் நிறைவேறியது. இவ்வுலகில் எத்தனை அரசுகள் ஆண்டு வந்திருக்கின்றன ஆனால் ஒன்றுகூட நிலையான அரசு இல்லை, காரணம் உண்மை இல்லை. இயேசு இவ்வுலகிற்கு கொண்டு வந்த அரசு நிலையான அரசு. அந்த நிலையான அரசின் மக்களாக வாழ வேண்டுமென்றால நம்மிடம் உண்மை இருக்க வேண்டும். உண்மையை வெளிப்படுத்தவே இறைமகனாகிய இயேசு, மானிடமகன் ஆனார். அவருடைய வருகைக்காக இந்த உலகைத் தயாரிக்கும் பணி ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உண்டு என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நம் ஆண்டவரும் அரசருமான இயேசுவைப் பற்றிய உண்மைக்கு சான்று பகர்பவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம். முதல் வாசகம்இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7:13-14 அந்நாட்களில் இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்: இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்: அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன: எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்: அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்திருப்பாடல்: 93: 1-2. 5 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
பல்லவி |
சிந்தனை''இயேசு பிலாத்துவை நோக்கி, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்' என்றார்'' (யோவான் 18:37) இயேசுவை நாம் அரசராகப் போற்றுகின்றோம். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களில் இயேசு ''இறையாட்சி'' பற்றிய நற்செய்தி அறிவித்தது விளக்கப்படுகிறது. எனவே கடவுளின் பெயரால் ஓர் ''அரசாட்சியை'' நிறுவுவதை இயேசு தம் பணியாகக் கொண்டிருந்தார். அந்த ஆட்சியில் கடவுளே அரசராக இருப்பார். இயேசுவும் அந்த ஆட்சியில் பங்கேற்பார். யோவான் நற்செய்தியில் ''இறையாட்சி'' என்னும் கருத்து மைய இடம் பெறவில்லை. மாறாக, இயேசு கடவுள் பற்றிய ''உண்மை''யை அறிவிப்பவராக, அதை வெளிப்படுத்துபவராக வருகின்றார். கடவுள் பற்றிய உண்மை யாது? கடவுள் நம் வாழ்வின் தொடக்கமும் நிறைவுமாக இருக்கின்றார் என்பதே அந்த உண்மை. கடவுள் நம்மை அன்புசெய்து, நமக்காகத் தம் திருமகனையே பலியாக்கினார் என்பதே அந்த உண்மை. கடவுள் நம் நல்ல ஆயராக இருந்து நம்மை அன்புடன் ஆண்டு நடத்துகிறார் என்பதே அந்த உண்மை. இவ்வாறு கடவுள் பற்றிய உண்மையை நமக்கு எடுத்துரைத்த இயேசு அந்த உண்மையை யார்மீதும் திணிக்கவில்லை. பிலாத்துவின் முன்னிலையில் குற்றவாளி போல நிறுத்தப்பட்ட போதும் இயேசு தம்மை ஓர் அரசராக அடையாளம் காட்டி பிலாத்துவைக் கவரவில்லை. மாறாக அவர் விடுப்பது ஓர் இனிய அழைப்பு. அதை யார்யார் ஏற்கின்றார்களோ அவர்களே இயேசுவின் ஆட்சியில் பங்கேற்பவர்கள். -- இயேசு இவ்வுலகில் வந்து பிறந்தது கடவுள் பற்றிய உண்மையை நமக்கு அறிவித்து, நாம் அந்த உண்மையை ஏற்றிட நமக்கு அழைப்பு விடுப்பதற்காகவே. இயேசுவின் அழைப்புக்குச் செவிசாய்க்கின்ற மனிதர்கள் அவருடைய ''மந்தை''யைச் சார்ந்தவர்கள். அவர்கள் சில வேளைகளில் வழிதவறிச் சென்றுவிட நேர்ந்தாலும் நல்ல ஆயராகிய இயேசு அவர்களைத் தேடிச் சென்று அழைத்து வருவார். இயேசு ஆற்றிய பணி நமது பணியாக மாறிட வேண்டும். நாமும் கடவுள் பற்றிய உண்மைக்குச் சான்று பகர அழைக்கப்படுகிறோம். அவ்வாறு சான்று பகர்கின்ற வேளையில் நமக்கும் துன்பங்கள் ஏற்படலாம். எதிர்ப்புகள் நம்மை எதிர்கொண்டு வரலாம். அந்த வேளைகளில் நாம் இயேசுவைப் போல நிலைத்து நிற்க வேண்டும். அவர் நமக்குத் தருகின்ற தூய ஆவியின் வல்லமையால் நாம் திடம் பெற்ற மனிதர்களாக ''உண்மைக்குச் சான்று பகர்ந்திட'' வேண்டும். உண்மையை முதலில் நம் உள்ளத்தில் ஏற்றால்தான் நாம் அதற்குச் சான்று பகர முடியும். அவ்வாறு ஏற்கும்போது நம் உள்ளத்தில் நிலவுகின்ற பாவம் என்னும் இருள் நம்மை விட்டு அகலும். கடவுளின் அருள் என்னும் ஒளி நம் உள்ளத்தையும் இதயத்தையும் வாழ்வையும் நிரப்பும். அப்போது நாம் ஒளியின் மக்களாகத் திகழ்வோம். ''அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளியாக'' உலகுக்கு வந்த இயேசுவை நம் அரசராக நாம் ஏற்போம்; அவருக்கு உகந்த குடிமக்களாக வாழ்ந்திடுவோம். மன்றாடுவோம்:இறைவா, உம் திருமகன் வழியாக எங்களுக்கு நீர் அறிவிக்கின்ற உண்மையை நாங்கள் எங்கள் வாழ்வுக்கு ஒளியாகக் கொண்டிட அருள்தாரும். |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்