பொதுக்காலம் 33 வது - ஞாயிறுஇரண்டாம் ஆண்டு 18-11-2012''இரண்டாம் வருகை''திருப்பலி முன்னுரைஅழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். திருடன் எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும். அதுபோல விபத்து எப்போது நிகழும் என்று யாருக்குத் தெரியும். சாவு எப்போது வரும் என்றும் எவருக்கும் தெரியாது. கடவுள் எப்போது வருவார் என்று யூகிக்க இன்றைய இந்த ஞாயிறு திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய நம் ஆண்டவர் அரசருக்குரிய மாட்சியுடன் நமக்கு தீர்ப்பிட வரும் நாளில் நிகழப்போகின்றவை பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்காக நாம் எப்பொழும் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. கிறிஸ்து இயேசுவின் பலியால் தூயவர்களாக மாற்றப்பட்டிருக்கும் நாம், தொடர்ந்து அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம்வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம். முதல் வாசகம்இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3 ``அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.'' - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்திருப்பாடல்: 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
பல்லவி |
சிந்தனைஎப்போது வரும் அந்த நாள் சில நாள்கள் திருடன் எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும். அதுபோல விபத்து எப்போது நிகழும் என்று யாருக்குத் தெரியும். சாவு எப்போது வரும் என்றும் எவருக்கும் தெரியாது. இந்த ஞாயிறு- கடவுள் எப்போது வருவார் என்று யூகிக்க அழைப்புக் கொடுக்கிறது. தீர்ப்பு நாள் வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா இனத்தவரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். அங்கே அவர் நடுத்தீர்ப்பார். (மத் 25) அந்த நாளில் இயற்கையில் பெரிய பெரிய மாற்றங்கள் எழலாம் என்பது எசாயா இறைவாக்கினர் காட்சியில் கூறப்பட்டுள்ளது. (எசா,13) அந்த நாளில் வான மண்டலங்கள் அதிர்ந்து வேறு உருப்பெறலாம் (எசா, 32:7) அந்த நாளில் பூமி அசைக்கப்படலாம் (தி,பெ,6:12-16) ஆண்டவரின் நாள் சிங்கத்திடமிருந்து தப்பியவன் - எதிரிலே கரடி ஒன்றைச் சந்தித்து மீண்டும் தப்பியோடி ஒரு வீட்டிற்குள் நுழைந்து சுவரில் கைவைத்தவனை ஒரு பாம்பு கடித்தால் எப்படி இருக்கும்? அப்படியே இன்னதுதான் நடக்கும் - இதுதான் நிறைவேறும், இன்றைக்குத்தான் வரும் என்று அந்த நாளை எண்ண முடியாது, மனிதன் எதிர்பார்க்காத நேரத்தில் ஆண்டவரின் நாள் வரலாம். (ஆமோ, 8:18-19) சினத்தின் நாள் மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகியது, மண்லுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார், (தொநூ 6:8.6) இதன் விளைவு நோவா காலத்து அழிவாகும், நோவாவைத் தவிர மற்றெல்லாரும் ஆண்டவரின் கோபத்திற்கு ஆளானார்கள். அது போல அந்த நாள் சினத்தின் நாளாகவும் வரலாம், பேரழிவு உண்டாகலாம். (செப், 1:12-16) வான மண்டலங்களிலிருந்து வான தூதர்கள் வருவார்கள், நல்லவர்களிலிருந்து கெட்டவர்களையும், கெட்டவர்களிலிருந்து நல்லவர்களையும் பிரித்தெடுப்பார்கள்.(மத் 25) உயிர்ப்பு நாள் உலகம் எப்போது முடியும்? உலகமெல்லாம் நெருப்பினாலே வேக மனிதர் எல்லாரும் செத்துப் போவார்கள். பின்னர் தீர்வை நடக்கும் காலம் வருகிறது, அப்போது இறந்தோர் இறைமகனின் குரலைக் கேட்பர், பொல்லாது செய்தவர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர், நல்லது செய்தவர் வாழ்வு பெற உயிர்தெழுவர். (யோவா 5:25-29) விளைவு அந்த நாள் எப்படியும் வரும், எப்போதும் வரலாம், அந்த நாள் நிச்சயம். கடவுள் மனிதனை சந்திக்கும் நாளாய் இருக்கும், பல குறிக்கப்பட்ட நாள்கள் - திருமண நாள். புதுநன்மை - உறுதிப்பூசுதல் நாள். குருப்பட்ட நாள்‚ இன்னும் பல விழா நாள்களுக்கு எவ்வாறு விழிப்பாயிருக்கிறோம், ஆயத்தம் செய்கிறோம், குறிக்கப்பட்ட நாளுக்கே அப்படி என்றால், குறிப்பிடப்படாத நாளுக்கு இன்னும் அதிகப்படியான ஆயத்தம் தேவையல்லவா? தூண்டிலோடு மீனுக்காக விடிய விடியக் காத்திருக்கும் மீனவனின் காத்திருப்பும் அவசியம், ஒற்றைக்காலில் சஞ்சலம் பாராமல் நின்று கொண்டிருக்கும் கொக்கின் விழிப்பும் அவசியம்....... அந்த நாள் எப்போதும் - எப்படியும் வரலாம். கேள்வி அந்த நாளுக்காக என்னுடைய ஆயத்தம் என்ன? மன்றாடுவோம்:இறைவா, எங்கள் வாழ்க்கை அன்பின் வெளிப்பாடாக அமைந்திட அருள்தாரும். |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்