பொதுக்காலம் 32 வது - ஞாயிறுஇரண்டாம் ஆண்டு 11-11-2012''யாருடைய காணிக்கை மேலானது''திருப்பலி முன்னுரைஅனைவருக்கும் அன்பு வணக்கம். ஒரே கூடாரத்தின் கீழ் ஒரே சகோதர உள்ளங்களாக நம்மை அழைத்திருக்கும் இறைவனுக்கு நன்றிகூறி நற்கருணை கொண்டாட்டத்தில் இணைவோம். இன்று நாம் பொதுக்காலம் 32வது ஞாயிறை கொண்டாடுகிறோம். யாருடைய காணிக்கை மேலானது!இயேசு எருசலேம் கோவிலில் போதித்துவந்தார். ஒரு நாள் வழக்கம்போல இயேசு கோவிலுக்குச் செல்கிறார். அங்கே பலரும் காணிக்கைப் பெட்டிக்குள் நாணயங்களைப் போடுவதை இயேசு பார்க்கிறார். அப்போது ஓர் ஏழைக் கைம்பெண் அமைதியாக நடந்துவந்து, காணிக்கைப் பெட்டி அருகே பக்தியோடு செல்கிறார். அவரிடம் பெருமளவு செல்வம் கிடையாது. அன்றாட உணவுக்கே பிறரை நம்பித்தான் வாழ வேண்டும். அவர் கைவசம் இருப்பதெல்லாம் இரண்டு காசுகள். அதற்குப் பெரிய மதிப்பு கிடையாது. ஆனால் அந்த ஏழைப்பெண்ணின் முழுச் சொத்தும் அதுதான். அதை முழுவதும் அவர் காணிக்கையாகக் கொடுத்துவிட்டார். இதைப் பார்த்த இயேசு அக்கைம்பெண்ணின் இதயத்தை உற்றுநோக்குகிறார். அங்கே அன்பு தவிர வேறொன்றும் இல்லை. பிறர் தன்னைப் பார்த்து குறைவாக நினைப்பார்களே என்ற எண்ணம் அப்பெண்ணிடம் இல்லை. கடவுள் தனக்குத் தந்த சிறிய செல்வத்தைக் கடவுளுக்கே கொடுப்பேன் என நினைக்கிறார் அவர். அவருடைய உள்ளம் மகிழ்ச்சியாலும் நன்றியாலும் நிறைகிறது. மனிதரின் இதய ஆழத்தை அறிகின்ற இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணின் தாராள மனத்தைப் போற்றுகிறார்.நாம் கடவுளுக்கு என்ன கொடுக்கிறோம் என்று கேட்பதை விட, நாம் அவருக்குக் கொடுத்தபிறகு எதை நமக்கென்று வைத்துக்கொள்கிறோம் என்னும் கேள்வியைக் கேட்பது அதிகப் பொருத்தமாக இருக்கும். எவ்வளவு அன்போடு நாம் கொடுக்கிறோமோ அவ்வளவு அதிகமாக நமக்குக் கடவுள் தம் அருளை வழங்குவார். பொருளை விரும்புபவரல்ல நம் கடவுள்; நம்மையே நாம் அவருக்குக் கையளிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். எனவே நாம் இறைவார்த்தையை நம் மனத்தில் ஆழமாக இருத்தி, அவ் வார்த்தைக்கு ஆழமாகச் செவிகொடுத்து, அவ்வார்த்தைகளையும், செய்தியையையும் கடைப்பிடித்து வாழ நம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்றுச் செபிப்போம். முதல் வாசகம்அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 10-16 அந்நாள்களில் எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, �ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா� என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, �எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?� என்றார். அவர், �வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும்� என்றார். எலியா அவரிடம், �அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது� என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்திருப்பாடல் 146: 7. 8-9ய. 9bஉ-10 (பல்லவி: 1)
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு. அல்லது: அல்லேலூயா.
பல்லவி |
சிந்தனை''இயேசு, 'இக்கைம்பெண்ணோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்' என்றார்'' இயேசு வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தால் ஓரம் தள்ளப்பட்ட மக்களுள் கைம்பெண்களும் உண்டு. கணவனே வீட்டுக்குத் தலைவன் என்னும் கருத்து நிலவிய அக்காலத்தில் பெண்கள் கணவனுக்கும் வீட்டிலுள்ள பிற ஆண்களுக்கும் கட்டுப்பட்டே நடக்கவேண்டியிருந்தது. நற்செய்தியில் வருகின்ற கைம்பெண் இவ்வாறு சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட ஒருவராகவே இருந்தார். ஆனால் அவர் கடவுளின் இல்லமாகிய எருசலேம் கோவிலுக்குச் செல்கிறார். அங்கே காணிக்கை செலுத்துகிறார். அவர் அளித்த காணிக்கை மிகச் சிறியதுதான். ஆனால் அவருடைய தாராள உள்ளத்திற்கு எல்லையே இல்லை. தன்னிடமிருந்து எல்லாவற்றையுமே அவர் கடவுளுக்கென்று கொடுத்துவிட்டார். கோவில் நிர்வாகத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தலைமைக் குரு, பிற குருகுலத்தார் எல்லாருமே பேராசை பிடித்தவர்கள் என நாம் கூற இயலாது. ஆனால் அவர்களில் சிலராவது ஏழை மக்களைப் பிழிந்து தங்களுக்குச் செல்வம் தேடிக்கொண்டார்கள் என அறிகிறோம் (காண்க: லூக் 20:47). -- இன்றைய சமுதாயத்திலும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேர் உண்டு. அவர்கள் சமுதாயத்தில்ல நிலவுகின்ற அநீதிகளின் காரணமாகப் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள். ஆனால் சமுதாயத்தில் நிலவுகின்ற சுய நலத்தின் காரணமாக ஒடுக்கப்படுகின்ற மக்கள் கடவுள் பெயராலும் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுவது பெரும் கொடுமையே. ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள், அன்னியர் போன்றோரை வெறுத்து ஒதுக்காமல் அவர்கள் மட்டில் தனிக் கரிசனை காட்ட வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டுச் சட்டம் (காண்க: விப 22:22; இச 24:18). ஆனால் இயேசுவின் காலத்தில் பலர் இச்சட்டத்தை மறந்துவிட்டிருந்தார்கள். இயேசு கோவிலில் காணிக்கை போட்ட கைம்பெண்ணின் தாராள குணத்தைப் போற்றினார். ஏனென்றால் அக்கைம்பெண் ''தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' (லூக் 21:4). கடவுள் நம்மீது இவ்வாறே நடந்துகொள்கின்றார். அவர் தம் அன்பை நமக்கு அளந்து கொடுப்பதில்லை. அவருடைய அன்பு எல்லையற்றது; எந்தவொரு மனித அன்பையும் விட ஆயிரம் மடங்கு மேலானது. கடவுளின் எல்லையற்ற இரக்கமும் அன்பும் நம் வாழ்விலும் துலங்க வேண்டும். நம் உள்ளத்தின் நேர்மையைக் காண்கின்ற கடவுள் நாம் தாராள உள்ளத்தோடு அவரையும் அவர் மதிக்கின்ற மானிட உலகையும் அன்புசெய்திட நம்மை அழைக்கின்றார். மன்றாடுவோம்:இறைவா, உம் அன்புப் பெருக்கு எங்கள் வாழ்வில் ஆறாய் வழிந்தோடுவதை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும். |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்