பொதுக்காலம் 30 வது - ஞாயிறுஇரண்டாம் ஆண்டு 28-10-2012''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்''திருப்பலி முன்னுரைஅழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் 30 வது ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பார்வையற்ற பர்த்திமேயுக்கு இயேசு பார்வை அளித்த நிகழ்ச்சியை மீண்டும் ஒருமுறை தியானிக்கிறோம். எனவே, இன்று வாசகத்தின் கடைசி வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று என்று இயேசு கூறியதும், அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார் என்று வாசிக்கிறோம். பார்வை பெற்ற அம்மனிதர் நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுதான்: பார்வை பெறுவது கடவுளைப் புகழ்வதற்காகவும், இயேசுவைப் பின்பற்றுவதற்காகவும்தான் என்பது அவரது அனுபவம். பார்வை பெற்றதும் தனது குடும்பத்தினரைத் தேடிச் செல்லவில்லை, புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. மாறாக, கடவுளைப் புகழ்ந்தார், இயேசுவைப் பின் தொடர்ந்தார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர். நாமும் புதிய பார்வை பெறவேண்டும். நமது வாழ்வின் நோக்கம் கடவுளைப் புகழ்வதும், இயேசுவைப் பின்பற்றி வாழ்வதும்தான் என்பதை உணர்வதே அந்தப் புதிய பார்வை. வேறு எதற்காக இந்த வாழ்வு? வேறு எது நம் வாழ்வுக்குப் பொருள் சேர்க்கும்? வேறு எதுவுமல்ல. இவை மட்டும்தான். எனவே, இறைவனைப் புகழ்வோம். இயேசுவைப் பின்பற்றுவோம். இந்தப் புதிய பார்வையை இயேசுவிடமிருந்து பெறுவோம். இறைமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம். முதல் வாசகம்எரேமியா நூலிலிருந்து வாசகம் 31:7-9 ஆண்டவர் கூறுகிறார்; யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள். இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்திருப்பாடல் 126: 1-6
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்!
பல்லவி |
சிந்தனை''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' (லூக்கா 18:42) இயேசு புரிந்த புதுமைகள் மக்கள் வியந்து தம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படவில்லை. தம்மைக் கடவுள் என்று நிரூயஅp;பிப்பதற்காகவும் மட்டுமே அவர் புதுமைகள் ஆற்றவுமில்லை. இயேசு புரிந்த அதிசய செயல்கள் அவர் கடவுளின் வல்லமையோடு செயல்பட்டார் என்பதைக் காட்டியது உண்மைதான். ஆனால் மக்கள்மீது இயேசு இரக்கம் கொண்டு அவர்களுடைய பிணிகளைப் போக்குவதற்கும் அவர்களுக்குப் புதிய வாழ்வு அளிப்பதற்கும் அந்த வல்லமையைப் பயன்படுத்தினார். லூக்கா நற்செய்திப்படி, எருசலேமை நோக்கி நெடிய பயணம் மேற்கொள்கின்றார் இயேசு. வழியில் அவர் தம் சீடர்களுக்கும் பிறருக்கும் இறையாட்சி பற்றிப் போதிக்கிறார். இறையாட்சியின் பண்புகளை விளக்கும் விதத்தில் அவர் புரிந்த புதுமைகளும் அமைகின்றன. பார்வையற்ற ஒருவர் இயேசு அவ்வழியே போவதை அறிந்து, ''இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று உரக்கக் கத்துகிறார். அவர் அப்படி குரல் எழுப்புவது முறையல்ல என்று கூறி மக்கள் அவரை அதட்டுகின்றனர். ஆனால், இயேசுவின் இரக்கப் பண்பு பற்றிக் கேள்விப்பட்ட அந்த மனிதர் நம்பிக்கை இழக்கவில்லை. இயேசு மனது வைத்தால் எப்படியாவது தனக்குப் பார்வை அளிக்க முடியும் என்று அந்த மனிதர் நம்புகிறார். எனவே, இயேசுவைப் பார்த்து, ஆழ்ந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் அவர், ''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என மனதுருக இறைஞ்சி வேண்டுகின்றார். -- ''பார்வை பெற வேண்டும்'' என்பது நம் மன்றாட்டும் கூட. சில சமயங்களில் நாம் பார்வை இழந்தவர்கள் போல நடந்துகொள்கின்றோம். நம் அகக் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகின்ற உண்மைகளைக் கூட மறுக்க நாம் தயங்குவதில்லை. சில உண்மைகள் நமக்குக் கசப்பாகத் தோன்றும்போது அவற்றைப் பார்க்க நம் கண்கள் மறுக்கின்றன. சில சமயங்களில் பழைய பார்வைகள் நம் கண்களைப் பார்வையிழக்கச் செய்துவிடுவதும் உண்டு. அந்த வேளைகளிலெல்லாம் நாம் எழுப்ப வேண்டிய மன்றாட்டு, ''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை வெற வேண்டும்'' என்பதே. நம் கண்கள் நன்றாகத்தானே இருக்கின்றன என நினைத்து நாம் சில வேளைகளில் நமது பார்வையற்ற நிலையை மூடி மறைக்க எண்ணுகிறோம். ஆனால் நம் அகக் கண்களைத் திறந்து பார்த்தால் நாம் உண்மையிலேயே கடவுளின் பார்வையைப் பெறாமல் இருக்கிறோம் என உணர்ந்துகொள்ள வாய்ப்புப் பிறக்கும். கடவுளின் பார்வையைப் பெற வேண்டும் என்றால் நாம் நம்முடைய குறுகிய பார்வைகளை அப்புறப்படுத்திவிட்டு, நம் அகக்கண்களை அகலத் திறக்க வேண்டும். இதற்குக் கடவுளின் அருள் நமக்குத் தேவை. எனவே, பார்வை பெற நாம் எப்போதுமே இறைஞ்சுவது முறையே. மன்றாடுவோம்:இறைவா, எங்களுக்குப் புதிய பார்வை தந்தருளும். |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்