பொதுக்காலம் 29 வது - ஞாயிறுஇரண்டாம் ஆண்டு 21-10-2012'உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாகதிருப்பலி முன்னுரைஅழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். இறையரசின் நன்மைக்காக, நாம் மற்றவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும். கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் பங்குபெறுவதன் அவசியத்தை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதராய் பிறந்த அனைவரும் துன்பத்தை ஏற்பதன் வழியாக, இன்பத்தின் மேன்மையை உணர அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து தனது சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் மாட்சியை அடைந்தார். இறைத்தந்தையின் இரக்கத்தைப் பெற்று கிறிஸ்துவின் வலப்பக்கத்தில் அமருமாறு, தூய வாழ்வு வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்த இறைமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம். முதல் வாசகம்இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 53: 10-11 அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்திருப்பாடல் 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 22)
பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!
பல்லவி |
சிந்தனைஇறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். நற்செய்தியை அறிவியுங்கள் நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன். பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றிவாகை சூடுவதற்காக இப்படி செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப் போல் ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப் போலக் குத்துச்சண்டை இட மாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே, தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன். (1கொரி 9:23-27) நற்செய்தி 1)திருச்சட்டம் அறியாதார் மூலம் நீங்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால், மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை (திப 2:23-24). நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அன்று, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம்மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது (யோவா 4:10, பிலி 2:6-11, உரோ 10:9). நற்செய்தி அறிவிப்பது ஒவ்வொருவரின் உரிமை தம் உடலுக்கு ஒருவர் உணவைத் தேடவோ, தண்ணீரைக் குடிக்கவோ, பிறரைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்பதல்ல. சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதும் ஒவ்வொருவருக்கும் உரிமையானவை தந்தையினுடைய சொத்தை மகன் பக்கத்து வீட்டுக்காரனிடம் கேட்டுத்தான் ஆளவேண்டும் என்பது தேவையற்றது. தந்தையினுடைய சொத்து எப்போதும் மகனுக்குத்தான், இயேசுவினுடைய பணியானது திருத்தூதுவர்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்பட்டது. அத்திருத்தூதுவர்கள் வழியாகப் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு கிறிஸ்துவனுக்கும் இது உரிமையாகிறது. நற்செய்தி அறிவிப்பது ஒவ்வொருவரின் கடமை ஓவ்வொரு கிறிஸ்துவ வாழ்வும் நற்செய்திக்கான போராட்டம். நற்செய்தி அறிவிக்காவிடில் அய்யோ எனக்கு கேடு. நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. ஆனால் நானாக விரும்பாவிட்டாலும், இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. ஓவ்வொரு கிறிஸ்துவனுக்கும் புனிதப் பவுலைப் போலக் கடமை இருக்கிறது. தான் பெற்ற கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பதே அக்கடமையாகும். பந்தயத்தில் பரிசு வாங்கியவர்கள் புனித தோமா இந்த உரிமயையும் கடமையையும் இரண்டு கண்ணாகக் கொண்டு செயல்பட்டதால்தான் இந்தியாவின் அப்போஸ்தலர் என்ற பரிசு பெற்றார். புனித சவேரியார் நற்செய்திக்காக மட்டுமே தம் உடலைக் கையளித்ததால் ஐந்நூறு வருடங்களுக்குப் பிறகும் இன்னும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். புனித அருளானந்தர் நற்செய்தி அளிப்பது மட்டுமே எனது பணி என்றிருந்ததால் இன்றைக்கும் அவருடைய இரத்தம் சிந்தப்பட்ட மண் இன்னும் குறைவுபடாமலேயே சிவப்பாக இருக்கிறது. அன்னை தெரஸா நற்செயல்களில் நற்செய்தி அறிவிப்பதை தம் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்ததால் இன்றைக்கும் அவர் அன்பின் தெரஸாவாகவே திகழ்கிறார். விளைவு அசோக மரம், தென்னை மரம் இரண்டுமே உயரம்தான், ஆனால் வித்தியாசம் இருக்கிறது. நாம் உயர்ந்திருப்பதை விட மற்றவருக்கு உபயோகமாக உயர்ந்திருப்பதில்தான் உயர்வு இருக்கிறது. செயல்படுவதென்றால் உறுதியோடு செயல்படுவோம். விட்டுக் கொடுப்பதென்றால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்போம். நற்செய்தியே நமது அடிப்படை. நற்செய்தி மூலமே திருச்சபைக்கு வளர்ச்சி, நற்செய்தியே நமது வாழ்வு. கேள்வி நற்செய்திப் பணியில் எனது பங்கு என்ன? (காண்: உரோ 15:14-21:10-15) மன்றாடுவோம்:வாய்சொல் வீரர் நிறைய உண்டு. வாய்ப் பந்தல் போடுவோருக்கு இன்று குறையே இல்லை. கடினமான பாதையை கைகாட்டிவிட்டு நடையைக் கட்டுகிறவர்கள் உண்டு. எருசலேம் நோக்கிய பயணம் பாடுகள், துன்பங்கள் நிறைந்தது. அவமானம், சிலுவை மரணத்தில் முடிவது. பிறர் வாழ்வுக்காக தன்னை இழப்பது. இந்த வாழ்கையை கையை காட்டிவிட்டு மாற்றுப் பாதையில் இயேசு செல்லவில்லை." இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்" (மாற் 10:32) கரடு முரடான காட்டுவழியில் அவர் நமக்கு முன் நடந்து தடம் அமைத்து தந்துள்ளார். பூகம்பம் நிறைந்த வாழ்வில் புதிய புரட்சிப் பாதை அமைப்பதில் இயேசு நமக்கு முன் நடந்து புதிய பாதை அமைத்துள்ளார். நம் வாழ்வின் துன்பப் பயணத்தில் நமக்கு முன் நடந்துகொண்டிருக்கிறார்.உன் வாழ்வின் இருள் சூழ்ந்த நேரங்களில், பகுதிகளில் உனக்கு முன் உன் தெய்வம் இயேசு அங்கு வந்து உன் வாழ்வின் இருளை அகற்றி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். இதுவே உன் தெய்வம் இயேசு. உங்கள் வாழ்வின் துன்பமும் கவலையும் இருளும் சூழ்ந்த இடங்களில் எல்லாம் இயேசு உங்களுக்கு முன் சென்று அனைத்தையும் நிவர்த்தி செய்து, மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த உயிர்ப்பின் அனுபவமாக மாற்றித்தருவதை உங்களால் நம்ப முடிகிறதா! இதுவே உண்மை. சீடர்கள் திகைப்புற்றனர். ஏனையோர் அச்சம் கொண்டனர். நீங்கள் நம்புங்கள். நல்லவை நடக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்