யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் செவ்வாய்க்கிழமை
2019-06-11

புனித பர்னபா




முதல் வாசகம்

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்11;21-26,13;1-3

21 ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். 22 இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பிவைத்தார்கள். 23 அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். 24 அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார். 25 பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; 26 அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஒராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள். 1 அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர். 2 அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், "பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்" என்று கூறினார். 3 அவர்கள் நோங்கள் கைகன்பிலிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
திருப்பாடல்கள்98;1-6

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.பல்லவி

3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.பல்லவி

4 உலகெங்கும் வாழ்வோரே! ஆனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.பல்லவி

6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,


நற்செய்திக்கு முன் வசனம்

அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு10;7-13

அக்காலத்தில்யேசு சீடர்களுக்கு நீங்கள் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள். 8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். 9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். 10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. 11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். 12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். 13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

வாழ்த்து என்னும் நற்செய்திப் பணி

இயேசு தன் சீடர்களை நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பினார். விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என முழக்கமிடச் சொன்னார். அதன் வெளி அடையாளங்களாக குணமாக்கச் சொன்னார். அமைதியை வழங்கச் சொன்னார். பிறர் ஏற்றாலும், மறுத்தாலும் அமைதியை அறிவிக்கச் சொன்னார். இந்தப் பணி இன்றும் தொடர வேண்டிய பணி. நற்செய்தி என்பது இன்று பலருக்கும் கசப்பான செய்தி;யாக இருக்கிறது. இன்றைய நுகர்வு கலாசார வாழ்வில் விண்ணரசின் மதிப்பீடுகளைவிட, உலக இன்பங்களின் கவர்ச்சி பெரிதாகத் தோன்றுகிறது. எனவே, பலருக்கும் இறைவார்த்தையும், நற்செய்தி அறிவிப்பும் தேவையற்றவையாக மாறி விட்டன.

இந்தச் சூழலிலும் இயேசு நம்மை நற்செய்தியைப் பறைசாற்ற அழைக்கின்றார். குறிப்பாக, நாம் சந்திக்கின்ற அனைவருக்கும் இறைவனின் அமைதியை, ஆசியை, சமாதானத்தை அறிவிக்கவும், வாழ்த்தவும் இன்றைய நற்செய்தி வழியாக நமக்கு அறைகூவல் விடுக்கிறார்.ஒவ்வொரு நாளும் காலையில் நாம் சந்திக்க ஒவ்வொருவருக்கும் ஆசியை, வணக்கத்தை, அமைதியை ஆசி மொழியாகச் சொன்னால் என்ன? அது ஒரு நற்செய்தி அறிவிப்பன்றோ! பிறர் செவி மடுத்தாலும், இல்லாவிட்டாலும் பிறரை வாழத்துவோம். அந்த வாழ்த்துக்கும், ஆசிக்கும் அவர்கள் தகுதி உடையவர்களாய் இருந்தால், அது அவர்களிடம் தங்கும். இல்லாவிட்டால், நம்மிடமே திரும்பி வரட்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் வாழ்த்துவோம், அனைவருக்கும் ஆசி வழங்குவோம்.

மன்றாட்டு:

ஆசிகளின் நாயகன் இயேசுவே, இந்தப் புதிய நாளுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த நாளில் நான் சந்திக்கின்ற அனைவருக்கும் உமது ஆசியை, அமைதியை வழங்கியருளும். நான் எந்தப் பாகுபாடுமின்றி அனைவரையும் வாழ்த்தவும், அமைதி வழங்கவும் என்னைத் துhய்மைப்படுத்தியருளும். நான் இன்று முழுவதும் உமது அமைதியின் கருவியாய் செயல்படுவேனாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.