யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம்
2018-12-08

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா




முதல் வாசகம்

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ``நீ எங்கே இருக்கின்றாய்?'' என்று கேட்டார். ``உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்'' என்றான் மனிதன். ``நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?'' என்று கேட்டார். அப்பொழுது அவன், ``என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்'' என்றான். ஆண்டவராகிய கடவுள், ``நீ ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், ``பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்'' என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், ``நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்'' என்றார். மனிதன் தன் மனைவிக்கு `ஏவாள்' என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.
திருப்பாடல் 98: 1. 2-3. 3-4

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உ உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்


- ஆண்டவரின் அருள்வாக்கு

- இறைவனுக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார் (லூக்கா 1:38)

மரியாவின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. திருமண ஒப்பந்தம் ஆகி, இல்லறம் நடத்துவதற்கு முன் மரியா கடவுளின் திருமகனைத் தம் உதரத்தில் கருத்தாங்க அழைப்புப் பெறுகிறார். இது வியத்தகு நிகழ்ச்சி மட்டுமல்ல, மரியாவைப் பொறுத்தமட்டில் இது பெரும் அதிர்ச்சிதரும் செய்தியாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின் யோசேப்பு மரியாவின் வாழ்வில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள இயலாமல் திணறிக்கொண்டிருந்தார். இதுவும் மரியாவுக்கு ஒரு சோதனையாகவே அமைந்திருக்க வேண்டும். குழந்தைப் பேறு நெருங்கியதும் தம் குழந்தையை ஈன்றெடுத்து வசதியாகக் கிடத்துவதற்குக் கூட அவருக்குக் கிடைத்தது தீவனத்தொட்டியே. குழந்தை இயேசு எருசலேம் கோவிலில் காணாமற்போன நேரமும் மரியாவுக்குப் பெருவேதனை தந்தது. ஆனால் இத்துயரமான தருணங்களிலும் மகிழ்ச்சியான நேரங்களிலும் மரியா கடவுளின் வார்த்தையைத் ''தம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்'' (லூக்கா 2:50). கடவுளின் வார்த்தை மரியாவுக்கு ஆறுதல் தரும் ஊற்றாயிருந்தது.

மரியாவுக்கு ஏற்பட்ட மாபெரும் வேதனை அவர்தம் அருமைந்தன் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதும், இயேசுவின் தோள்மேல் சிலுவை சுமத்தப்பட்டு இறுதியில் அச்சிலுவையில் ஒரு குற்றவாளிபோல அறையப்பட்டு உயிர்துறந்ததுமே. இத்துயரம் மரியாவின் இதயத்தை ஈட்டிபோல் துளைத்தது. இந்த நேரங்களிலெல்லாம் மரியா மன உறுதி இழக்கவில்லை; உள்ளதம் தளரவில்லை. மாறாக, கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டார். கடவுளால் எல்லாம் இயலும் என்பதை மரியா இத்தருணங்களில் மிக ஆழமாக உணர்ந்தார். மரியா கடவுளின் ''அடிமை'' என்றதும் கடவுள் அடிமைத்தனத்தை ஏற்கிறார் என்று பொருளாகாது. மாறாக, மரியா தம்மைப் படைத்து, பாவத்திலிருந்து காப்பாற்றிய கடவுளையே தம் வாழ்வின் மையாமாகக் கொண்டிருந்தார் என்பதே பொருள். இவ்வாறு செயல்பட்டதால் மரியா தம் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முனையவில்லை. கடவுளின் திருவுளம் இவ்வுலகில் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே மரியாவின் வாழ்க்கை நோக்கமாக இருந்தது.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை அறிந்து அதன் கோரிக்கைகளை நாங்கள் ஏற்று வாழ அருள்தாரும்.