யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் புதன்கிழமை
2018-01-10




முதல் வாசகம்

ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 1-10,19-20

அந்நாள்களில் சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண்பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை. கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர், �சாமுவேல்� என்று அழைத்தார். அதற்கு அவன், �இதோ! அடியேன்� என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, �இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?� என்று கேட்டான். அதற்கு அவர், �நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்� என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான். ஆண்டவர் மீண்டும் �சாமுவேல்� என்று அழைக்க, அவன் எழுந்து ஏலியிடம் சென்று, �இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?'' என்று கேட்டான். அவரோ, �நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக் கொள்'' என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர், �சாமுவேல்� என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, �இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?� என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, �சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, �ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்� என்று பதில் சொல்� என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, �சாமுவேல், சாமுவேல்� என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், �பேசும், உம் அடியான் கேட்கிறேன்� என்று மறுமொழி கூறினான். சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை. சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டுவிட்டார் என்று, தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் ஆண்டவரே!
திருப்பாடல் 40: 1,4. 6-9

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பிற இனத்தாருக்குப் பறை சாற்றப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ``எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், ``நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீமோனுடைய மாமியார் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்'' (மாற்கு 1:31)

இயேசு இறையாட்சிப் பணி ஆற்றிய இடங்களில் முக்கியமான ஒன்று கப்பர்நாகும் ஊர் ஆகும். அங்கே சீமோன் பேதுருவின் வீடு இருந்தது. இயேசு அங்குச் செல்வது வழக்கம். சீமோனுடைய மாமியாருக்குக் காய்ச்சல். இயேசு நோயாளருக்கு நலமளிக்கிறார் என்னும் செய்தி ஏற்கெனவே பரவியிருந்தது (காண்க: மாற் 1:27-28). எனவே, சீமோனுடைய மாமியாருக்கு நலமளிக்க வேண்டும் என இயேசுவைக் கேட்கிறார்கள். இயேசு கையைப் பிடித்து அவரைத் தூக்கவே காய்ச்சல் நீங்குகிறது. நலம் பெற்ற அப்பெண்மணி இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் ''பணிவிடை செய்தார்'' (மாற் 1:31). இங்குப் பணிவிடை எனக் குறிக்கப்படுவது ஏதோ உணவு பரிமாறியது மட்டுமல்ல. திருச்சபைச் சமூகத்தில் ஒருவர் மற்றவர் மட்டில் அன்புகொண்டு அவர்களைத் தம் குடும்ப உறுப்பினர்போல ஏற்று மதித்து ஒழுகுவதே ''பணிவிடை''. இத்தகைய பணிவிடை (''தொண்டு'') செய்யவே இயேசு இவ்வுலகில் வந்தார் (மாற் 10:45).

இயேசுவின் மீட்புப் பணி நம்மைத் தீமையிலிருந்து விடுவிப்பதோடு நாம் பிறரை முழு மனத்தோடு அன்புசெய்ய நமக்கு சக்தியையும் வழங்குகிறது. சீமோனின் மாமியார் இதற்கு ஒரு முன்மாதிரி எனலாம். அவருக்கு ஏற்பட்ட ''தீமை'' காய்ச்சலாக வெளிப்பட்டது. அத்தீமையிலிருந்து அவர் விடுதலை பெற்றது இயேசுவை அவர் சந்தித்து, அவரால் தொடப்பட்ட நேரம் நிகழ்ந்தது. இவ்வாறு நலம் பெற்ற அவர் ஒரு புதிய மனிதராக மாறுகிறார். இயேசுவுக்கும் அவரில் நம்பிக்கைகொண்டோருக்கும் ''பணிவிடை'' செய்ய அவர் திறம் பெறுகிறார். நாமும் நலம் பெற்ற மனிதராக, பிறருக்கு நலம் கொணரும் மனிதராக மாறிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் போல நாங்கள் பணிசெய்திட அருள்தாரும்.