யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
2017-10-08

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 5: 1-7,பதிலுரைப்பாடல். திபா. 80: 8, 11-15, 18-19,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-9,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43)




நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்


திருப்பலி முன்னுரை

படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! மிகுந்த பரிவுடையவரும், நம்மை அழிவிலிருந்து காக்கின்றவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பெதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகியவை, கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள, நமது உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாப்பதோடு, அறி வெல்லாம் கடந்த இறை அமைதி நமக்கு நிறைவாழ்வைத் தரும், அப்போது அமைதியை அருளும் கடவுள் நம்மோடு இருப்பார் என்பதே இன்று நாம் பெற்றுக் கொள்ளும் செய்தியாகும். அத்தோடு இறைவன் வெளிப்படுத்தும் விசுவாச உண்மைகளை நேர்மையோடு விசுவசித்து ஏற்றுக் கொண்டு வாழாவிட்டால் ஏற்படுக் கூடிய தீமை பற்றியும் நமக்கு எடுத்துக் கூறப்படுகின்றது.



முதல் வாசகம்

ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 5: 1-7

என் நண்பரைக் குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன். செழுமைமிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக் கொத்திக் கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைக் கொடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்; மாறாக, காட்டுப் பழங்களையே அது தந்தது. இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன? என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்: ``நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும். நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப் படுவதுமில்லை; நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.'' படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே; அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி:ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே:
பதிலுரைப்பாடல். திபா. 80: 8, 11-15, 18-19

எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்: வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர். அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின. பல்லவி

பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன: வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன. பல்லவி

படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்: இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்: எமக்கு வாழ்வு அளித்தருளும்: நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி

இரண்டாம் வாசகம்

அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-9

சகோதரர் சகோதரிகளே, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். இறுதியாக, சகோதரர் சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்கு உரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43

அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: `மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவுக் குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேரவேண்டிய பழங்கiளைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களை விட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், `இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?'' என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், ``அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' என்றார்கள். இயேசு அவர்களிடம்,"கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அமைதியை அருளும் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் அனைவரும்: உமது அழைப்பின் பொருளை நன்குணர்ந்தவர்களாய் உண்மையானவை, கண்ணியமானவை, நேர்மையானவை, தூய்மையானவை, விரும்பத்தக்கவை, பாராட்டுதற்குரியவை, நற்பண்புடையவை, போற்றுதற்குரியவை, ஆகியவற்றையே மனத்தில் இருத்திக்கொண்டு, திருத்தூதர்கள் வழியாய்க் கற்றுக்கொண்டவை, பெற்றுக் கொண்டவை, கேட்டறிந்தவை, அவர்கள் வாழ்வில் கண்டுணர்ந்தவை யாவற்றையும் தம் வாழ்வில் பிரதிபலித்து வாழும் ஆற்றலை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பார்க்கும் தந்தையே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாம், உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்திக்கொண்டு வாழுவதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பரிவுள்ளம் உடையவரான தந்தையே இறைவா!

ஒவ்வொரு நாளும் உலகில் பெருகிவரும் வன்முறையின் வேர்களை அறுத்தெறிந்து, உலகில் அமைதி நிலவிடவும், உலகிற்கு நீர் கொடுத்துள்ள இயற்கை வளங்கள் அனைத்தும், பொறுப்பிலுள்ளோரால் சரியான முறையில் பகிரப்பட்டு, பராமரிக்கப்படவும் வேண்டிய மனப்பக்குவத்தையும் அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கமும் கனிவும் நிறைந்த அன்புத் தந்தையே எம் இறைவா!

எம் குடும்பங்களில் அனைவரும் “உமது எண்ணங்கள் வேறு! எங்கள் எண்ணங்கள் வேறு” என்பதைத் தெளிவாய் உணர்ந்து, உமது எதிராய் முணுமுணுக்காமல் உமது உயரிய அன்பையும், நீதியையும் உணர்ந்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

5. எங்கள் வானகத்தந்தையே, எம் இறைவா!

உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களாலும், பூமி அதிர்ச்சியலும் மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. எங்கள் வானகத்தந்தையே, எம் இறைவா!

உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களாலும், பூமி அதிர்ச்சியலும் மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

7. ஆதரித்தாளும் எம் இறைவா,

எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

'பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்'' (மாற்கு 12:2)

மக்களுக்குக் கடவுளாட்சி பற்றி போதித்த இயேசு உவமைகளைப் பயன்படுத்தி கருத்துக்களை எடுத்துரைத்தார். ''கொடிய குத்தகைக்காரர் உவமை'' என்னும் கதையில் வருகின்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார். குத்தகைக்காரர்கள் தோட்டத்தை நன்முறையில் காவல் காத்து, அதிலிருந்து பலன் எடுத்து, தம்மிடம் அத்தோட்டத்தை ஒப்படைத்த உரிமையாளருக்கு அவருக்கு உரிய திராட்சைப் பழங்களைக் கொடுக்கக் கடமைப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தவறியது மட்டுமல்ல, அத்தோட்டத்தின் உரிமையாளர் அனுப்பிய பணியாளர்களை அவமதித்து, அவருடைய மகனையும் கொன்றுபோடுகிறார்கள். இயேசு இந்த உவமை வழியாகக் கூறிய உண்மை இயேசுவின் பகைவர்களுக்குத் தெளிவாகவே புரிந்தது. அவர்களிடம் கடவுள் ஒப்படைத்த பொறுப்பை அவர்கள் நிறைவேற்றத் தவறியதோடு, கடவுளால் அனுப்பப்பட்டு அவர்களைத் தேடி வந்த இயேசுவையும் அவர்கள் கொல்லத் தேடினார்கள்.

கடவுள் நம்மிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார். அவருடைய அழகிய படைப்பாகிய இவ்வுலகம் அவர் நம் கைகளில் தந்துள்ள பொறுப்பு. இந்த உலகத்தைக் கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப நன்முறையில் பாதுகாத்துப் பேணுவது நம் கடமை. ஆனால் நாம் இப்பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிடுகிறோம். இவ்வுலகில் உள்ள வளங்களும் செல்வங்களும் எல்லையற்றவை என்னும் தவறான எண்ணத்தில் மனிதர்கள் உலக வளங்களைச் சுறண்டுகிறார்கள். அதன் விளைவாக, நீரும் நிலனும், காடும் மலையும், காற்றும் சுற்றுப்புறமும் மாசடைந்து மனித வாழ்க்கை சீர்குலையத் தொடங்குகிறது. நாம் உலகத்தை ''அடக்கி ஆளலாம்'' என நினைப்பதற்குப் பதிலாக, இவ்வுலகத்தைப் ''பொறுப்போடு கண்காணிக்க வேண்டும்'' என்னும் சிந்தனையைப் பெற வேண்டும். அப்போது இன்றைய தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் சீரிய வாழ்வை உருவாக்கிக் கொடுக்க இயலும். இவ்வாறு பொறுப்போடு செயல்பட்டால் நாம் மனிதரை மனிதராக மதிப்போம். மனிதரைக் கடவுளின் சாயலாக ஏற்று, அவர்களுடைய நலனை முன்னேற்றுவதில் கருத்தாயிருப்போம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு நீர் அளிக்கின்ற கொடைகளை நன்றியோடு ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.