யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-06-11

பரிசுத்த தம திருத்துவம் பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: விடுதலைப் பயண நூலிருந்து வாசகம்.34:4-6, 8-9,திருப்பாடல்கள் தானி. 1: 29-33,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம்; திருமுகத்திலிருந்து வாசகம். 13:11-13,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 3:16-18)




தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.


திருப்பலி முன்னுரை

இறைவனுக்குரியவர்களே, மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மனித அறிவுக்கு எட்டாத மறைபொருளாகிய இறைவனின் இயல்புக்கு திருச்சபை இன்று விழா எடுக்கிறது. நித்திய வாக்கான இறைமகன் வழியாக இந்த உலகைப் படைத்த தந்தையாம் கடவுள், அவர் வழியாகவே இதை மீட்கத் திருவுள மானார். இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுமாறு, தூய ஆவியாரின் வல்ல மையால் இறைமகன் இயேசு மனிதரானார் என்ற மீட்பு செயல்பாட்டிலேயே இறைவனின் மூன்று ஆட்களை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். தந்தையுடையவை யாவும் மகனுடையவை; அவர்களது முழு உண்மையை நோக்கி தூய ஆவியார் நம்மை வழி நடத்துகிறார். மூவொரு இறைவனாகிய தந்தை, மகன் தூய ஆவியாரிடம் உலக மக்கள் அனைவரும் நம்பிக்கை கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்.
விடுதலைப் பயண நூலிருந்து வாசகம்.34:4-6, 8-9

அக்காலத்தில்ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார். ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, "ஆண்டவர்" என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், "ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர் என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, "என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.
திருப்பாடல்கள் தானி. 1: 29-33

எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட் சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி:

உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் புகழ்ச் சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி:

உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி:

இரண்டாம் வாசகம்

இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம்; திருமுகத்திலிருந்து வாசகம். 13:11-13

சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது; மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார். தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 3:16-18

அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை: ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அப்பா, தந்தையே இறைவா,

திருச்சபையின் மக்களை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது உடனிருப்பை உணர்ந்து வாழவும், உலக மக் களை உம்மிடம் ஈர்க்கவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணக தந்தையே இறைவா,

இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதியிலும் ஒற்றுமையிலும் வாழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

3. ஒற்றுமை அருள்பவரே இறைவா,

உலகெங்கும் மதம், இனம், மொழி, பண்பாடு என பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் மக்கள் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளைகள் என்ற உண்மையை உணர்ந்து ஒற்றுமையில் வளர உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்ல வருமான தந்தையே!

உலக நாடுகள் பலவற்றில், இன்று பெருகிவரும் உமது படைப்பின் ஒழுங்கிற்கு எதிரான செயற்பாடுகள் அழிந்து, உமது திட்டத்தைப் பக்குவமாகப் பேணிக் காக்கும் நல்லுள்ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. உன்னதரான தந்தையே!

எம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும் மனநிலையை உருவாக்கி உம்மை மகிமைப்படுத்தும் சக்தியை எமக்குத் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு, ''தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' என்றார்'' (யோவான் 3:16)

விவிலியத்திலேயே மிக மையமான ஒரு சொற்றொடர் யோவான் 3:16 என்பது அறிஞர் கருத்து. இதில் கடவுளுக்கும் அவர் அனுப்பிய திருமகன் இயேசுவுக்கும் மனித குலம் முழுவதற்கும் இடையே நிலவுகின்ற உறவு அழகாக, ஆழமாக எடுத்துக் கூறப்படுகிறது. முதன்முதலில் கடவுளின் அன்பு எல்லையற்றது என்னும் கருத்து இங்கே துலங்குகின்றது. அந்த அன்பு மனிதர் வாழ்கின்ற இந்த உலகின்மீது கடவுள் கொண்ட பாசத்தையும் பரிவையும் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு உலகத்தை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற கடவுள் தம் திருமகனாம் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்புகிறார். இயேசுவின் வழியாக, குறிப்பாக அவருடைய சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக (''பாஸ்கா மறைபொருள்'') கடவுளின் அன்பு நமக்கு வெளிப்படுத்தப்பட்டது.

கடவுள் நமக்குக் காட்டுகின்ற அன்பு வெறும் உணர்ச்சியோடு நின்றுவிடுவதில்லை. நம்மைத் தம்மோடு இணைத்து நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பதற்காகவே கடவுள் தம் திருமகனை நமக்கு அளித்தார். இவ்வாறு நாம் நிலைவாழ்வில், நிறைவாழ்வில் பங்கு பெறும் பொருட்டு நமக்காகத் தம்மையே பலியாக்கிய இயேசுவை நாம் நம்பிக்கையோடு பற்றிக்கொள்ள வேண்டும். இந்நம்பிக்கை நம்மில் உறுதியாக வேரூயஅp;ன்றியிருக்க வேண்டும். கடவுளின் எல்லையற்ற வல்லமையால் அனைத்தும் கைகூடும் என்னும் உறுதியோடு நாம் கடவுளையும் அவரது மகன் இயேசுவையும் அணுகிச் சென்றால் அவர் நமக்குக் கொடையாகத் தருகின்ற நிலைவாழ்வு எதிர்காலத்தில் ஒருநாள் விடியும் என்பது மட்டுமல்லாமல், ஏற்கெனவே இவ்வுலகில் தொடங்கிவிட்டது என்பதையும் நாம் உணர்வோம். இவ்வாறு கடவுளின் வல்லமையான தூய ஆவியார் நம்மில் செயல்பட்டு நாம் நம்பிக்கைகொண்டோராக மாறும்போது அதிசய செயல்கள் நம்மில் நிகழும். அதன் விளைவாக, நாம் கடவுளின் அன்பை நம் இதயத்தில் உணர்வதோடு அந்த அன்பினை நம் சகோதரர் சகோதரிகளோடு மனமகிழ்வோடு பகிர்ந்திடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.