யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: திப:1:1-11, எபேசி. 1:17-23, லூக்கா 24: 46-53



என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன


திருப்பலி முன்னுரை

இறைவனில் இனியவர்களே,

ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனின் வலது பக்கத்தில் அமர்கிறார். உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவும், அரும் அடையாளங்களைச் செய்யவும் நம் ஆண்டவர் நமக்கு அதிகாரம் தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயேசுவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்


திப:1:1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், "நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் " என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? " என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல: ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் " என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் " என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திபா: 47:1-2, 5-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்!

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்: ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்: உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே: பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின் றார் ஆண்டவர். பாடுங்கள்: கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்: பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடு ங்கள். பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்: அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்: அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.
எபிரேயருக்கு திருமுகத்திலிருந்து வாசகம் 9:24-28, 10:19-23

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாள மாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழை ந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறி ஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப் பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக் கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார். சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத் திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ் வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள் ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதி யான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே நாம் எதிர்நோக்கி இருப்பதைப் பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்: இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்கிறார் அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

லூக்கா 24: 46-53

அக்காலத்தில் இயேசு அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும் "பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் " என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் " என்றார். பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்க

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. எல்லாம் வல்லவராம் இறைவா,

உமது திருமகனின் உயிப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படை யில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு, திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணில் வாழ்பவராம் இறைவா,

இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுமைகளின் நாயகராம் இறைவா,

பேய்களை ஒட்டவும் நோய்களை நீக்கவும் இறைமகன் இயேசு அளித்த அதிகாரம் எம்மில் செயல்படவும், எங்கள் நம்பிக்கையால் உலகெங்கும் நற்செய்தியைப் பறை சாற்றி, உமது அரசை நிறுவவும் ஆற்றல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. அமைதி தருபவரே இறைவா,

உலகெங்கும் நோய், பசி, வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் மனக்கலக்கம் அடைந்து வருந்துகின்ற அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. உன்னதரான தந்தையே!

உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்'' (லூக்கா 24:51-52)

இயேசு சாவிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு தம் சீடர்களுக்குத் தோன்றி அவர்களோடு உரையாடியதையும் பின்னர் விண்ணகம் சென்றதையும் நற்செய்தியாளர்கள் குறித்துள்ளனர். இயேசுவின் விண்ணேற்றம் எதில் அடங்கியுள்ளது என்பதை விளக்கும்போது தூய அகுஸ்தின் ஓர் ஆழமான கருத்தைத் தெரிவிக்கிறார். அதாவது, இயேசு விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்து பிறந்தபோது எப்படி விண்ணகத்தை விட்டுவிடவில்லையோ, அதுபோலவே விண்ணேற்பு அடைந்து தந்தையிடம் சென்றபோது மண்ணகத்தை விட்டுப் பிரிந்துவிடவில்லை. இயேசுவின் சாவுக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பிறகு அவருடைய உடனிருப்பு ஒரு புதிய முறையில் அமைந்தது. அவர் தம்மை நம்பி ஏற்போர் நடுவே உறைகின்றார். அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளோடு கலந்து அவர்களை வழிநடத்துகிறார். இதை நாம் புறக்கண்களால் காண இயலாது; ஆனால் நம்பிக்கை என்னும் அகப்பார்வைக்கு இயேசுவின் உடனிருப்பு வெளிச்சம். இயேசு நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்துகிறார் என்றால் நாமும் ஒரு பணிப்பொறுப்பை அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். அவர் துன்புற்று இறந்து, சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்ததற்குத் திருத்தூதர்கள் சாட்சிகளானது போல நாமும் சான்று பகர அழைக்கப்படுகிறோம்: ''இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்'' (லூக்கா 24:48) என்று இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது நமக்கும் பொருந்தும்.

சீடர்கள் ''மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்'' (லூக்கா 24:52)). இயேசு உலக மக்களைப் பாவத்திலிருந்து மீட்டுவிட்டார் என்பது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும. மேலும் இயேசு ஆற்றிய மீட்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே அவருடைய சீடர்களின் பொறுப்பு. இவ்வாறு அவர்கள் இயேசுவை உலக மக்களுக்கு அறிவித்து, அவர்மீது நம்பிக்கை கொள்ள மக்களை அழைக்கும்போது இயேசு அவர்களோடு இருந்து அவர்களை ''உறுதிப்படுத்துவார்''. ஆக, இயேசு விண்ணகம் சென்றுவிட்டாரே என்று சீடர்கள் ஏக்கத்தோடு வீடுதிரும்ப வேண்டியதில்லை. அவர்களை விட்டு விண்ணகம் சென்ற இயேசு அவர்களோடு இருக்கின்றார். இது நம் வாழ்விலும் உண்மையாகும். இன்று வாழ்கின்ற மனிதர் நடுவிலும் இயேசுவில் நம்பிக்கை கொள்கின்ற சபை நடுவிலும் இயேசுவின் உடனிருப்பு உண்டு என்பது நம் நம்பிக்கை. இந்த உறுதிப்பாடு நமக்கு இருப்பதால் நாம் தொடர்ந்து ''நற்செய்தி அறிவிப்புப் பணியில்'' ஈடுபட்டுச் செயலாற்றிட அழைக்கப்படுகிறோம். இயேசுவின் மீட்புச் செயலால் நாம் அடைகின்ற மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் உடனிருப்பால் நாங்கள் உறுதிபெற்று வாழ்ந்திட அருள்தாரும்.