யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: திரு. பணி. 5:12 - 16, திருவெளி 1:9-11,12-13,17-19, யோவான் 20:19-31



இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ; /> இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ; /> இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ; /> இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ; /> இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ; />


திருப்பலி முன்னுரை -1

உங்களுக்கு அமைதி உரித்தாகுக!

நம்பிக்கை கொண்டோரே, பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இறை இரக்கத்தின் ஞாயிறை சிறப் பிக்கும் இன்றைய நாளில், இறைமகன் இயேசு தம் திருத்தூதர்கள் வழியாக, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை திருச்சபைக்கு வழங்கிய நிகழ்வு இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகிறது. நாம் கடவுள் மீது எந்த அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், நமது ஐயங்களைப் போக்க கடவுள் இரக்கத்துடன் காத்திருக்கிறார் என்பதை உணர அழைக்கப் படுகிறோம். உயிர்த்த இயேசுவில் முழுமையான நம்பிக்கை வைக்கவும், மரணத்தை வென்ற அவருக்கு சான்று பகரவும் உறுதி ஏற்போம். நாம் அனைவரும் என்றென்றும் நம்மோடு நிலைத்து நின்று வாழ்வு தரும் இறைவனது பேரன்பிற்காக நன்றி சொல்லுவோம், அனைவரையும் மன்னிப்போம், இறைவனின் சாட்சிகளாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம். இந் நாளில், நாமும் புனிதத்தில் வளர வரம் வேண்டி, இந்த திருப்பலியில் விசுவாசத்துடன் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவரின் கூட்டம் வளர்ந்துள்ளது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 5:12-16

அந்நாள்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழி யாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படு மாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்து கொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்: எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல்: 118: 2-4. 22-27

என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!பல்லவி:

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்: அகமகிழ்வோம்.பல்லவி:

ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். ஆண்ட வரே இறைவன்: அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்: கிளைகளைக் கையிலேந்தி விழாவி னைத் தொடங்குங்கள்: பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.பல்லவி:

இரண்டாம் வாசகம்

சாவுக்கு உட்பட்டேனாயினும், இதோ நான் என்றும் வாழ்கிறேன்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 9-13,17-19

உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன். நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோ திக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை ; என்று அக்குரல் கூறியது. என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத் தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒரு வரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந் தார். நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது: ;அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்: ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ; என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ;தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவ ங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ; என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ;ஆண்டவரைக் கண்டோம் ; என்றார்கள். தோமா அவர்களிடம், ;அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலைவிட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ; என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ;இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ; என்றார். தோமா அவரைப் பார்த்து, ;நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ; என்றார். இயேசு அவரிடம், நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ; என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய் தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற் காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நம்பிக்கையின் நாயகரே இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உமது சாட்சிகளாக திகழ வரமருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பின் அரசரே இறைவா,

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், உம் திருமகனின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டு, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுவாழ்வின் ஊற்றே இறைவா,

உலகெங்கும் உள்நாட்டில் அகதிகளாக துன்புறுவோரும், அச்சுறுத்தல்களால் இடம் பெயர்ந்தோரும் உமது உதவியால் உரிமை வாழ்வு பெற உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும் அவைகளை மற்றவர்களோடு பகிர்ந்து உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. சமாதானத்தின் தேவனே இறைவா!

இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே சமாதானத்தை நாங்கள் ஒவ்வொருவரும், மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும் அனைத்துக் குடும்பங்களிலும் சமாதானம் ஒற்றமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

திருக் கூட்டத்தில் இருப்போம்

மனிதன் குடும்பமாக வாழ இறைவனால் அழைக்கப்பட்டிருக்கிறான். அதுபோல கிறிஸ்தவன் சமூகமாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறான். அவனது விசுவாசம் பிற மனிதர்களோடு உறவை உண்டாக்குகிறது. விசுவாசத்தில், இறைவனை அனைவரும் தந்தை என அழைப்பதால் நாம் அனைவரும் சமூகமாக வாழ வேண்டும் என்பது இறைத்திட்டம். ஆகவே விசுவாசம் என்பது பரந்து விரிந்த ஒரு வாழ்க்கை முறை. அதுவே கிறிஸ்தவம். அவனே கிறிஸ்தவன்(ள்).

உயிர்த்த இயேசுவை காணாதவரை, நம்மில் விசுவாசம் இல்லை. உயிர்த்த இயேசுவை அனுபவிக்காதவரை நம்மில் விசுவாசம் இல்லை. அவ்வாரே இறை மக்கள் சமூகத்தில் இணைந்திருக்கவில்லை என்றால் உயிர்த்த இயேசுவைக் காணமுடியாது. புனித தோமையின் நிலை இதுவே. அவர் திருத்தூதர் கூட்டத்தில் இல்;லாததால், உயிர்த்த இயேசுவைக் காணவில்லை; உயிர்த்த இயேசுவைக் காணாததால் இறைமக்கள் கூட்டத்திலும் திருத்தூதர் கூட்டத்திலும் இடம் பெறவில்லை.

நம் விசுவாசம் வளர, நாம் இறை மக்கள் கூட்டத்தோடு கலந்து உறவாடி வாழவேண்டும். நம்மைத் தனிமைப்படுத்தினால் உயிர்த்த இயேசுவைக் காணமுடியாது. உயிர்த்த இயேசுவைக் காணவிட்டால் நாம் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. கிறிஸ்தவம் ஒரு பெரிய குடும்பம். இறைவன் நமது தந்தை. நாம் எல்லோரும் சகோதர சகோதரிகள். ஒருவர் ஒருவரைத் தாங்கி வழிநடத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இத்தகைய வாழ்வில் நாம் உயிர்த்த இயேசுவைக் காண்கிறோம். "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்னும் அருள்நிலையைப் பெறுகிறோம். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

மன்றாட்டு:

புனித தோமையே! உம் வழிகாட்டுதலுக்கு எம் நன்றி. நீர் காட்டும் பாதையில் நடக்க உதவும்.