யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

அன்னை கன்னிமரி - இறைவனின் தாய் - புத்தாண்டுப்பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: எசாயா 60:1-6, எபேசி 3:2-3, 5-6, மத்தேயு 2:1-12)



உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> ''தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு
குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டார்கள்/> ''தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு
குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டார்கள்/> ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 
'உம் மனைவி மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 
ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்/> ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 
'உம் மனைவி மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 
ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்/> ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 
'உம் மனைவி மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 
ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்/> ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 
'உம் மனைவி மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 
ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்/> ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 
'உம் மனைவி மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 
ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்/> ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 
'உம் மனைவி மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். 
ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்/>


திருப்பலி முன்னுரை - 1

இறைமகன் இயேசுவில் அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, அனைவருக்கும் திருக்காட்சிப் பெருவிழாவின் வாழ்த்துக்களைக்கூறி மகிழ்கிறேன். உலக மக்களை மீட்க இறைமகன் இயேசு மனிதனாகப் பிறந்து வந்ததை உலக மக்களுக்கு அறிவிக்க இறைவன் ஓர் அருமையான ஏற்பாட்டை ஏற்படுத்தியிருந்தார். அதைத்தான் திருக்காட்சிப் பெருவிழா எனக் கொண்டாடுகிறோம்.

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உலக செல்வங்களை விட மேலான செல்வமாகிய இறைவனில் மகிழ்ச்சி காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. யூதர்கள் அறிந்துகொள்ளாத அரசர் இயேசுவின் பிறப்பை, விண்மீனின் அடையாளத்தைக் கொண்டு கிழக்கத்திய ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள். குழந்தை இயேசுவின் மேன்மையை உணர்ந்தவர்களாய் அவரைக் கண்டு வணங்கச் செல்கிறார்கள். அனைத்துலகின் அரசராம் இறைவனே, மனிதராக பிறந்திருப்பதை அறிந்து அவருக்கு பொன்னும், சாம்பி ராணியும், வெள்ளைப்போளமும் காணிக்கையாக அளிக்கிறார்கள். அந்த ஞானிகளைப் போன்றே, நாமும் அனைத்துக்கும் மேலாக ஆண்டவருக்கு பணிவிடை செய்யும் மன நிலையைப் பெற்று வாழும் வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

இறைமகன் இயேசுவில் அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, அனைவருக்கும் திருக்காட்சிப் பெருவிழாவின் வாழ்த்துக்களைக்கூறி மகிழ்கிறேன். உலக மக்களை மீட்க இறைமகன் இயேசு மனிதனாகப் பிறந்து வந்ததை உலக மக்களுக்கு அறிவிக்க இறைவன் ஓர் அருமையான ஏற்பாட்டை ஏற்படுத்தியிருந்தார். அதைத்தான் திருக்காட்சிப் பெருவிழா எனக் கொண்டாடுகிறோம்.

வரலாற்றையே படைத்த இறைவன் வரலாற்றில் காலம், இடம் இவற்றிக்கு உட்பட்டவராக பிறந்தார். இவர் இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை எல்லா மக்களுக்கும் ‘தானே இறை மீட்பர்’ என்று புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தி தன்னுடைய மீட்பு திட்டத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார். இன்றைய சூழ்நிலையில் நாம் இறைபிரசன்னத்தை உணர்ந்து, பிற மக்களும் கிறிஸ்துவை அறிய, கிறிஸ்துவுக்குள் வாழ கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா? என்பதை சிந்திக்க அழைக்கின்றது இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள். எனவே அனைவரும் இறைவெளிப்பாட்டை, இறைபிரசன்னத்தை உணர எனது பங்களிப்பை கொடுப்பேன் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

திருப்பலி முன்னுரை - 3

ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிக்கும் நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இன்று அன்னையாம் திருச்சபை ஆண்டவரின் திருக்காட்சி விழாவினைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

மீட்பு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் உரிய தனியுடைமை அல்ல. மாறாக, அது எல்லோருக்கும் உரிய உயர்வான கொடை என்பதை இன்றைய பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய முதல் வாசகம் பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவார்கள் என்றும், இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் நற்செய்தியின் வழியாக பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவுடன் உடன் பங்காளிகள் ஆகின்றனர் என்றும், இன்றைய நற்செய்தியில்: பிற இனத்து ஞானிகள் இயேசுவை வணங்கி ஆராதித்தனர் என்றும் கூறப்படுகின்றது.

கடவுள் தன்னை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் வெளிப்படுத்தினாலும்கூட அவர் எல்லோருக்கும், எல்லாக் காலத்திற்கும் சொந்தமானவர். இன்று நாம் வாழும் காலச் சூழ்நிலையில்: இறைவார்த்தை, நற்கருணை வழியாக தன்னை வெளிப்படுத்தும் அன்புத் தெய்வம் நீதிக்கான முயற்சிகளிலும், சமத்துவ சமபந்தியிலும், ஏழை எளியோருக்கான நிலப்பாடுகளிலும், உரிமைக் குரலிலும் தன்னைத் தானே வெளிப்படுத்துகின்றார் என்பதை உணர்ந்தவர்களாய், அவரின் வெளிப்பாட்டை அறிந்து கொள்ளத் தேவையான ஞானத்தையும், அருளையும் வேண்டி இத் திருப் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27

22 ஆண்டவர் மோசேயிடம் கூறியது; 23 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை; 24 "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! 25 ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! 26 ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" 27 இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
திபா 67: 1-2. 4. 5,7

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். 6 நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி "அப்பா, தந்தையே " எனக் கூப்பிடுகிறது. 7 ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். 17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். 19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். 20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. 21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்: ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

வழிகாட்டும் நாயகனே எம் இறைவா!

மீட்பரைக் காண ஆவலோடு பயணத்தை மேற்கொண்ட மூன்று அரசர்களுக்கு விண்மீன் வழிகாட்டியது போல, உம் திருமகனை முழுமையாக அறிந்து, அவரின் சீடாகளாக வாழத்துடிக்கும் எங்களுக்கு நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் தங்கள் சொல், செயல் மற்றும் வாழ்வு வழியாக இயேசுவை நோக்கிய எமது பயணத்தில் விண்மீன்களாய்ச் செயல்பட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா!

இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்றும், தாங்கள் அரசாகளாய் இருந்தும்: மெசியா என்னும் மீட்பரைக்காண, ஏற்றுக்கொள்ள, வழிபட ஆவலோடு நீண்ட பயணத்தை மேற்கொண்டனர். அதேபோன்று எங்களை வழிநடாத்த நீர் கொடுத்துள்ள அனைத்துத் தலைவர்களும் தாழ்ச்சி, உண்மை, நீதி, நேர்மை, தன்னலமின்மை போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், மூன்ற அரசர்களையும்,இயேசுவையும் தங்கள் பணி வாழ்வுக்கு மாதிரிகையாகக் கொண்டு எல்லா மக்களின் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஆவலுடன் உழைக்கத் தேவையான அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திருக்காட்சி நிகழ்வின் வழியாக உம் அன்பை எல்லா மக்களக்கும் வெளிப்படுத்திய இறைவா!

கீழ்த்திசை அரசர்களைப் போன்று, நாங்கள் எளிய மனத்தோடும், திறந்த உள்ளத்தோடும் வாழவும்: எவ்வளவு எதிர்ப்புக்கள், தடைகள் எம் வாழ்வில் வந்தாலும், தொடர்ந்து உம்மைத்தேடி, எம் வாழ்வில் உம்மைச் சொந்தமாக்கிக் கொள்ள அருளைத் தரவேண்டுமென்றும், புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களை எப்பொழுதும் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கும் அன்புத் தந்தையே!

மூன்று அரசர்கள் பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் போன்றவற்றை அமைதியின் அரசராகிய இயேசுவுக்குத் தங்களின் பரிசாகக் கொடுத்து உமது ஆசீரைப் பெற்றனர். நாங்களும் நீர் விரும்பும் தூய உள்ளத்தையும், நேர்மையான வாழ்வையும் உமக்குப் பரிசாகத் தந்து அமைதியையும், மகிழ்ச்சியையும் எமது வாழ்வில் நிரந்தரமாக்கிக் கொள்ள அருள்தர வேண்டுமென்றும், கடந்த ஆண்டிலே பல போரழிவுகளை சந்தித்த மக்களுக்காக மக்களாக மன்றாடுகிறோம். அவர்கள் இந்த ஆண்டிலே எந்தவொரு இடர்ப்பாடின்றி வாழ தம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அரும்பெரும் செயல்கள்; புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழவும், எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

எங்கள் சமூகத்தில் இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்கள் மறுவாழ்வு பெறவும், எங்கள் ஒவ்வொருடைய உள்ளத்திலும் அவதரித்து அன்பு, அமைதி, சமாதானம் போன்ற புண்ணியங்களை எங்களுக்கு பொழிந்தருள வேண்டுமாய், பிறந்திருக்கின்ற இயேசுபாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சிய+ட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்றும், நிலையற்ற இந்த உலகின் செல்வங்களைத் தேடி மன நிம்மதியை இழந்து நிற்கும் மக்கள் அனைவரும், நிலையான செல்வமாகிய உம்மில் நிம்மதி காண அருள்புரியவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

எமது இளம் தலைமுறையினர் நிதானத்தோடும், முழு ஞானத்தோடும் உமது வழிகளைக் கண்டடைந்து, உமக்குரியவர்களாக வாழ அவர்களை நிறை உண்மையை நோக்கி வழி நடாத்தியருள வேண்டுமென்றும், நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தாயும் தந்தையுமான இறைவா,

உடல், உள நோயினால் வேதனையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி: அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்றும், இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

புது வாழ்வு...

ஆண்டவர் இயேசுவின் அருள் வாக்கு உங்கள் வாழ்வில் விளக்காக இருந்து வெளிச்சம் தந்து, செல்வங்கள் அனைத்தும் தந்து உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வதாக. உங்களுக்கு எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இயேசுவின் அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் என்றும் உங்களோடு இருப்பதாக.

புத்தாண்டு மலர்கிறது. நம் மனங்களில் புத்துணர்வு மலர்கிறது மரியன்னை மடியில் அது தவழ்கிறது. மரியா, இறைவனின் தாய் என்ற உண்மையை இன்று நாம் கொண்டாடுகிறோம். ஏனெனில், கன்னிமரியில் ”காலம்” நிறைவுற்றது (கலா. 4:5) கடவுள் மனிதரானார். எனவே அவர் காலத்தை வென்றவர். அதனால் தான் நிலாவினை கால்மணையாக்கி கம்பீரமாய் காட்சிஆகின்றார் (தி.வெளி. 12:1) ”ஒளி உண்டாகுக” (தொ. நூல் 1:2) என்று கடவுள் சொன்னபோது அவர் நேரத்தைத் தான் படைத்தார் அதுவே முதற்படைப்பு; நமக்கு அவர் நல்கும் முதற்கொடை. அதுதான் மீட்பின் வரலாறாய் நீள்கிறது. கடவுள் ”இப்போது” என்ற நிகழ்காலத்தில் தான் நிறைந்திருக்கிறார். அவரது பெயர்கூட ”இருக்கின்றவர் நானே” (வி.பய. 3:14) என்பதே. இறந்தகாலம் புதைக்கப்பட்டுவிட்டது, பதிர்கலம் இன்னும் பிறக்கவில்லை நிகழ்காலம் மட்டுமே உண்மை நேரம். அதில் முழுமையான இறைவனோடு இணைந்து வாழபவரே வரலாறு படைப்பர்கள். ”மரியா இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தம் உள்ளத்தில் இரத்தி சிந்தித்துக் கொண்டிருந்தார் என்று லூக்கா நற்செய்தியாளர் எழுதுகின்றார். உதரத்தில் இயேசுவை பத்து மாதம் தாங்கி ஒவ்வொரு மணித்துளியும் கன்னிமைக் குன்றா தாய்மை என்னும் வரலாறு படைத்த அவர் இப்பபோது அவரை உள்ளத்தில் தாங்கி ஒவ்வொறு நிமிடத்தையும் அவரது நினைவால் நிறைக்கின்றார். வொவ்வொறு காலத்துளியும் அருளினை தாங்கி வரும் காலம். அது வெறுமனே கடந்துவிடக்கூடாது. ஒவ்வொறு கனமும் தியானித்து வாழ்பவரே அன்னை மரியைப் போல் அருள் நிறைந்தவர்! அத்தகையோர் வாழ்வே மீட்பின் வரலாறாய் மாறும்!

இறை ஒளி நம் வாழ்வில் வீசுவதாக

புத்தாண்ணட பிறக்கிறது. இவ்வாண்டு வளம் சேர்க்கும் நல்லண்டாய் அமைவதாக! அன்னை மரி வழியாக உலகுக்கு வந்த இயேசுவை விட பெரிய ஆசீர் இவ்வுலகில் ஒருபோதும் இல்லை. ஆண்டவர் தம் திருமுகம் இயேசுவில் தனான் வெளிப்படுத்தப்படுகிறது. இயேசுவையும், மரியாவையும், யோசேப்பையும் கண்டு தரிசித்து கடவுளைப் போற்றி புதழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்ற இடையர்கள் போல, இறைவனைின் திருமுக ஒளியை ஒவ்வெரு நாளும் நம் அன்றாட வாழவின் அனுபவங்களில் நாம் கண்டு மகிழ்ந்து தமாதானத்தை அனுபவிப்போம். இறைவனின் தாயாம் தாய்மரி, இயேசுவோடு இந்த ஆண்டு முழுவதும் நம்முடன் நடப்பார்களாக.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். நாங்கள் தொடங்க விரும்பும் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க உமது ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும்.