யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

திருவழிபாடு ஆண்டு - B

( வாசகங்கள் :எரேமியா 31:7-9,எபிரே 5:1-6,மாற். 10:46-52 )



இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./>


திருப்பலி முன்னுரை

இயேசுவின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களே, ஆண்டின் பொதுக்காலம் 30 ஆம் வாரத் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றேன்.

ஒடுக்கப்பட்ட, ஒரங்கட்டப்பட்ட மக்கள் சார்பாகச் செயலாற்றும் நம் இறைவனின் இதய அன்பைப் பற்றியும், மாற்றமடையாத அவருடைய வாக்குறுதிகள் பற்றியும், நோய் தீர்க்கும் அவருடைய வல்லமை பற்றியும், பரிவு காட்டக் கூடியவராயிருக்கும் அவருடைய மன்னிக்கும் அளவுகோல் பற்றியும் இன்றைய இறை வார்த்தைகள் நம்மோடு பேசுகின்றன.

எனவே நாம் இறைவன் முன்பாக சிரம் தாழ்த்தி அவருடைய இதய அன்பிற்காக நன்றி சொல்லுவதோடு, மாபெரும் விடுதலைச் சக்தி அவர் மட்டுமே என்பதை நாம் ஆழமாக விசுவசித்து, அவரிடமே நம்பிக்கை கொண்டு, மனமாற்றம் பெற்று புதுவாழ்வு வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9

ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; `ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்! \' என்று பறைசாற்றுங்கள். இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.
திருப்பாடல் 126: 1-2. 4-5. 6

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2யb அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி

2உன ``ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்\'\' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறிதவறி நடப்போருக்கும் பரிவு காட்டக்கூடியவராய் இருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்ததுபோன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும். அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. ``நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்\'\' என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். இவ்வாறே மற்றோரிடத்தில், ``மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே\'\' என்றும் கூறப்பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ``இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்\'\' என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ``தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்\'\' என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, ``அவரைக் கூப்பிடுங்கள்\'\' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ``துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்\'\' என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, ``உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?\'\' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ``ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்\'\' என்றார். இயேசு அவரிடம், ``நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்றுஎன்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்: நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

மாபெரும் செயல் புரியும் அன்புத் தந்தையே இறைவா!

மக்கள் சார்பாகக் உமக்குமுன் பணிபுரிய நீர் ஏற்படுத்தியிருக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணியாலும், வாழ்வாலும், செபத்தாலும் ஆன்மிக மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றில் அதிக அக்கறை கொண்டு செயற்படுவதற்கு வேண்டிய அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வறண்ட ஓடையை நீரோடையாக மாற்றுவிடும் தந்தையே இறைவா!

எமது வாழ்வில் அன்பு, ஒற்றுமை, அமைதி, உறவு, அருள்வாழ்வு, செபம், தூய்மை ஆகியவற்றில் காணப்படும் வறட்சியினை நீக்கி உமது பிள்ளைகளாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டும் அன்புத் தந்தையே இறைவா!

இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர் மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அடிமை நிலையை மாற்றிவிடும் தந்தையே இறைவா!

உலக நாடுகள் அனைத்திலும் பல்வேறு அடிமைத்தனத்திற்குள் அகப்பட்டு துன்பங்களை அனுபவித்து வரும் அனைவருக்கும் மகிழ்வும், அமைதியும், சுதந்திரமும் நிறைந்த வாழ்வை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம்மை மகிழச் செய்யும் தந்தையே இறைவா!

தாழ்ச்சி என்னும் பண்பை எம்மில் வளர்த்து எமது பாவத்தை உணர்ந்து, மனம் வருந்தி மன்னிப்புப் பெற்று புதுவாழ்வு வாழ வரமருள வேண்டு மென்றும், எவ்வேளையிலும் உமது இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த உமது அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்லும் மனவுறுதியோடு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன் றாடுகின்றோம்.

இளையோருக்காக :

அன்புத் தந்தையே இறைவா! உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டு மென்றும், இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும், அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை

"உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

முளைத்து மூன்று இலைவிடும் முன், கீழே இருப்பவன் எல்லாம் தனக்கு சேவகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். பெரிய மனிதன் ஆக ஆக, இந்த காலத்தில் எல்லோரும் தனக்கு கூஜா தூக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.செல்வமும் செல்வாக்கும் பெருகப் பெருக எல்லோரும் தனக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான்.

ஆனால் இங்கே ஒரு பெரிய மனிதர், இறைவன் இயேசு "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று சாலை ஓரம் படுத்திருந்த பார்வையற்ற மனிதனிடம் கேட்கிறார். பாதை ஓரத்தில், வாழ்க்கையின் ஓரத்தில், பார்வையற்று, வாழ வழியற்றுப் படுத்திருக்கும் மனிதனுக்கு "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டது அவனை வாழ்வின் மையத்திற்கு கொண்டு சென்றிருக்கும் அல்லவா!

நண்பர்களே! இன்று இதே போல் எத்தனை பேர் வாழ்வின் ஓரத்தில், விழி இழந்து, வழி இழந்து உங்களின் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கிறார்கள். "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என யாராவது கேட்கமாட்டார்களா எனக் காத்திருப்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன? இயேசுவின் இவ் வார்த்தையை நாமும் அடிக்கடி பயன்படுத்த முன்வருவோம். நம்மிடம் இயேசு அதே வார்த்தையால் கேட்பார்.

மன்றாட்டு:

இறைவா, எங்களோடு தொடர்ந்து உறவாடுகின்ற உம்மை எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கண்டுகொள்ள அருள்தாரும்.