யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

திருவழிபாடு ஆண்டு - B



வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./>


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1. சாலமோன் ஞானம் 7:7-11

2. எபிரேயர் 4:12-13

3. மாற்கு. 10:17-30

திருப்பலி முன்னுரை -1

இறையாட்சிக்குரியவர்களே,

திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள். ஆண்டின் பொதுக்காலம் 28 ஆம் வாரத்திலிருக்கிற நாம்> நாம் பெற்றிருக்கிற கொடைகள்> ஆற்றல்கள்> சிறப்பான வாய்ப்புகள்> திறமைகள் போன்றவற்றை எப்படிப் பார்க்கிறோம். இவற்றிலெல்லாம் இறைவனின் கரம் நம்மோடிருந்து நம்மை சிறப்பிக்கிறது என்று பார்ப்பதோடல்லாமல்> எல்லாவற்றிலும் இறைவன் நம்முடன் இருக்கிறார் என்றுணர்ந்து அவருக்கு நன்றியுடையவர்களாய் வாழ இன்று தூண்டப்படுகிறோம்.

இறைவனின் வார்த்தையே நமக்கு ஞானமும், சக்தியும், வல்லமையுமாய் இருக்கின்றது என்பது இன்றைய இத் திருப்பலியின் மையக் கருத்தாக உள்ளது. அதாவது, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது என்னும் வார்தைகள் இவ்வுண்மையை மேலும் வலுப்படுத்தி நிற்கின்றன. எனவே நாம் நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள இறைவனுடைய நெறிமுறைகளைச் சரியான முறையில் கடைப்பிடித்து, தீமைகளை விட்டொழித்து புனித வாழ்வு வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.

திருப்பலி முன்னுரை -2

இறைவனுக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கடவுளைவிட உலகப் பொருட்களில் அதிகப் பற்று வைக்கும் எவரும் இறையாட்சில் நுழைய முடியாது என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளை அறிந்து, அவரை அன்புசெய்து வாழவே படைக்கப்பட்டிருக்கிறோம். இறை உறவிலும், மனித உறவிலும் நாம் வளர்ச்சி காண கடவுள் வழங்கியுள்ள பத்து கட்டளைகள் நமக்கு வழிகாட்டுதலாக அமைந்துள்ளன. அவற்றைச் சுருக்கி ஒரே அன்பு கட்டளையாக இயேசு நமக்கு வழங்கினார். நமது அன்பு செயல் வடிவம் பெறும் பொழுதுதான் நாம் இறையாட் சிக்கு நெருக்கமானவர்களாக மாற முடியும். செல்வம், உறவு, புகழ் என எது அன்புக்குத் தடையாக இருந்தாலும் அங்கு இறையாட்சி தடுக்கப்படுகிறது. உலகப் பொருட்களைப் புறக்கணித்து இறையாட்சியை விரும்பித் தேடும் நல்ல மனம் வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

இறைவனுக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் மேன்மையைப் பற்றி எடுத்துரைக்கிறது. பொன்னும் வெள்ளியும் ஞானத்துக்கு முன் மண்ணைப் போன்று இருப்பதாக சாலமோன் கூறுவதைக் காண்கிறோம். அரசப் பதவியின் செங்கோலும் அரியணையும் ஞானத்துக்கு முன் ஒன்றுமில்லாதது என்று குறிப்பிடுகிறார். ஞானத்தால் அனைத்துவித நலன்களும் தனக்கு கிடைத்ததாகவும் சாலமோன் எடுத்துரைக்கிறார். நாமும் இறைவனிடம் ஞானத்தைக் கேட்டுப் பெறுபவர்களாய் வாழும் வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

ஞானத்தோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-11

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்கு முன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும். உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்பு கொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.
திருப்பாடல் 90: 12-13. 14-15. 16-17

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். பல்லவி

16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவனுக்குரியவர்களே,
இறைவனுக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம் இறைவார்த்தையின் மேன்மையைப் பற்றி எடுத்துரைக்கிறது. கடவுளின் வார்த்தை உயிருள்ளதும், ஆற்றல் வாய்ந்ததுமாக உள்ளது என்பதை திருமுக ஆசிரியர் விளக்குகிறார். எண்ணங்களை சீர்தூக்கிப் பார்க்கும் இறைவார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்ற உள்ளுணர்வோடு செயல்படும்போது, நாம் கடவுளுக்கு உகந்த தூய வாழ்வு வாழ முடியும். இறையாட்சியில் நுழையத் தகுதியுடையவர்களாய் மாற வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

கடவுளுடைய வார்த்தை உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-13

சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-30

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ``நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?\'\' என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், ``நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? `கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட\'\' என்றார். அவர் இயேசுவிடம், ``போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்\'\' என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ``உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்\'\' என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ``செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்\'\' என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ``பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது\'\' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?\'\' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்\'\' என்றார். அப்போது பேதுரு அவரிடம், ``பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே\'\' என்று சொன்னார். அதற்கு இயேசு, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எங்கள் ஆயரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது திருச்சபை யின் மக்கள் அனைவரையும் உம்மோடும், பிறரோடும், இயற்கையோடும் நல்லுறவு கொண்டவர்களாய் உருவாக்கத் தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பெற்று, திருச்சபையின் மக்கள் அனைவரையும் ஞானத்தில் வழி நடத்த தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வின் ஊற்றாம் இறைவா,

உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் மக்களை வாழ்வின் பாதையில் வழிநடத்தவும், போர், தீவிரவாதம், வன்முறை, கலவரம் போன்ற அழிவுக்குரிய செயல்களில் இருந்து மக்களை விலக்கிப் பாதுகாக்கவும் தூண்டுதல் அளிக்க வேண்டு மென்றும், எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை, நீதி, அமைதி உண்மை ஆகியவற்றை விரும்பித் தேடவும், அதன் வழியாக உமது உண்மையான அன்பையும் இரக்கத்தையும் உணர வும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நீதியின் ஊற்றாம் இறைவா,

உலகில் பண ஆசை, பதவி மோகம், மத வெறி, தன்னலம், இன வெறி போன்ற காரணங் களால் நீதி மறுக்கப்படும் இடங்கள் அனைத்திலும் உம் இறையாட்சியின் மதிப்பீடுகள் விதைக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட உதவ வேண்டுமென்றும், எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உலகப் பொருட்கள் மீதான நாட்டங்களில் இருந்து விலகி, உமக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ளும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்கா:

எங்கும் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவா! இன்று நாங்கள் காணும் நிதி நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணங்களைப் பார்த்தால், இன்று எமக்கு உடனடி தேவையாக இருப்பது எம் ஆற்றல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதுதான். அப்படிப் பகிர்ந்து கொள்வது எம் ஆற்றலை அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நலந்தரும் ஊற்றாம் இறைவா,

உம்மை நம்பிக்கையோடு தேடி வரும் மக்களின் உடல் நோய்களையும், மன நோய்களையும் முழுமையாக குணப்படுத்தி, மற்றவர்களின் முன்னிலையில் உமது மாட்சிமிகு செயல்களின் சாட்சிகளாக அவர்களை மாற்ற வேண்டுமென்றும், உம் திருமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குபவர்களாய் வாழும் அருளை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மேலும் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நீதியின் நாயகராம் இறைவா,

நாங்கள்; நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள, உம்முடைய நெறிமுறைகளைச் சரியான முறையில் கடைப்பிடித்து, தீமைகளை விட்டொழித்து, இரக்கமுடையோராய் புனித வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்றும், உமது வழியில் செல்ல எமக்குத் தடையாக இருப்பவற்றையும், எமது ஆன்மிக வாழ்வில் குறைவுபடுவதையும் நாம் கண்டுணர்ந்து, எமது வாழ்வை உமக்குகந்த வாழ்வாக மாற்றியமைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன் றாடுகின்றோம்.

இளையோருக்காக :

அன்புத் தந்தையே இறைவா! உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டு மென்றும், இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும், அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை

''இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, 'நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று அவரைக் கேட்டார்'' (மாற்கு 10:17)

இயேசுவைத் தேடி வந்த இந்த மனிதரைப் பற்றிய செய்தியை ஒத்தமைவு நற்செய்தியாளர் மூவரும் குறித்துள்ளனர் (காண்க: மத் 19:16-30; மாற் 10:17-31; லூக் 18:18-30). இந்த மனிதர் இயேசுவை வழியில் எதிர்பாராத விதத்தில் சந்திக்கவில்லை; மாறாக, இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, ''ஓடிவந்து'' இயேசுவின் முன்னிலையில் தாள்பணிகின்றார். ''முழந்தாள்படியிடுவது'' சீடர் தம் குருவுக்குக் காட்டுகின்ற மரியாதையின் அடையாளம். எனவே, இந்த மனிதர் ஒருவிதத்தில் ஏற்கெனவே இயேசுவின் சீடராகத் தம்மைக் கருதி, தம் குருவிடமிருந்து நற்போதனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தோடு இயேசுவை அணுகுகிறார். ''நல்ல போதகரே'' என அவர் இயேசுவை அழைப்பதும் கருதத் தக்கது. அதற்கு இயேசு, ''நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே'' என்று பதிலளிக்கிறார் (மாற் 10:18). இயேசு கடவுளுக்கு உரிய பண்புகள் தமக்கு உரியவை என இங்கே உரிமை பாராட்டிப் பெருமை கொள்ளவில்லை. அதே நேரத்தில் கடவுளின் நற்பண்புகள் தம்மில் துலங்கியதால்தான் அம்மனிதர் தம்மை ''நல்லவர்'' எனக் கூறுகிறார் என்பதையும் இயேசு மறைமுகமாக ஏற்கிறார். ''நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' (மாற் 10:17) என்னும் கேள்வி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுகின்ற கேள்வியே. இம்மண்ணக வாழ்வோடு மனிதரின் இலட்சியங்கள் மடிந்துவிடுவதில்லை. சாவுக்குப் பின் வாழ்வுண்டு என்னும் உறுதிப்பாடு மனித உள்ளத்தில் ஆழப் பதிந்த ஒன்று.

எனவே, ''நிலைவாழ்வை'' அடைய வேண்டும் என்னும் உள்ளார்வத்தால் நாம் உந்தப்பட்டு, நிறைவடைய முனைகின்ற வேளையில் அக்குறிக்கோளை எட்டுவதற்கான வழியைத் தேடுவது இயல்பே. இயேசு அவ்வழியை நமக்குக் காட்டுகிறார். அவரை முழு மனத்தோடும் விருப்போடும் பின்செல்வோர் அவர் வாக்களிக்கின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர். அதற்கு நிபந்தனையாக இயேசு நமக்குக் கூறுவது: ''கடவுளிடமிருந்து உங்களைப் பிரிக்கின்ற அனைத்தையும் துறந்துவிடுங்கள்; கடவுளையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்''. இயேசுவின் குரலுக்குச் செவிமடுப்போர் அவர் காட்டிய வழியில் நடப்பார்கள். அந்த வழி நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வை நோக்கி நாங்கள் பயணம் சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.