யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
பொதுக்காலம் 22வது வாரம் ஞாயிற்றுக்கிழமை
2015-08-30



உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./> உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்./>


திருப்பலி முன்னுரை - 1

இறைத்திருமகன் இயேசுவில் அன்புள்ளம் கொண்ட அவரின் இனிமையான மக்களே உங்கள் அனைவருக்கும் என் கனிவான வாழ்த்துகளைக் கூறி மகிழ்கிறேன். இன்று பொதுக்காலம் இருபத்திரெண்டாம் ஞாயிறு. இன்று திருப்பலி வாசகங்களின் வழியாக ஆண்டவர் சிறந்த உறுதிப்பாட்டை நமக்கு வழங்கி இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழ்பவர் நலமே பெறுவர் என்று நமக்குக் கூறப்படுகிறது. இறைத்திட்டம் காட்டும் வழி கடினமான குறுகலான வழியாயிருந்தாலும்
1) அது நிறைவானது
2) அது வாழ்வளிப்பது
3) அது ஆற்றல் தருவது
4) அது என்றுமே மாறாதது
காட்டப்படும் இந்தவழியில் நாம் செல்லும்பொது வாழ்வு பெறுவது உறுதி. இறைவனை வழிபடுகின்ற மக்களாக வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.

திருப்பலி முன்னுரை - 2

இறைவன் அன்பு வழிநடத்தல்களில் தங்களை உட்படுத்தி ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். இன்று பொதுக்காலம் இருபத்திரெண்டாம் ஞாயிறு.
இறைவார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொண்டு, இறைவன் நமக்குக் கற்றுத் தரும் நியமங்களின்படி தூய வாழ்வு வாழ இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மேலும் நமது உள்ளத்தில் இருந்து வெளிவருகின்ற பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்ற தீச் செயல்களை விலக்கி, உள்ளத்தில் தூய்மை உள்ளவர்களாக இறைவனையும், பிறரையும் அன்ப செய்து வாழவும் அழைப்பு விடுக்கின்றன. எனவே எப்பொழுதும் தூய்மையான உள்ளத்தோடு இறைவனை வழிபடுகின்ற மக்களாக வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.

திருப்பலி முன்னுரை - 3

தூய்மைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு தேவையற்ற மனித மரபுகளில் இருந்து விலகி கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து தூயவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனித உள்ளத்தின் விளைவுகளாகிய கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல்களில் இருந்து விலகி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நமக்கு தந்த இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளைப் பின்பற்றி வாழுமாறு ஆண்டவர் நம்மைத் தூண்டுகிறார். உடலின் தூய்மையை விட உள்ளத்தின் தூய்மையையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என் பதை இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார். நம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் தூய எண்ணம் கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

தூய்மைக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம், ஆண்டவர் அளித்த நியமங்களின்படி நடக்க இஸ்ரயேல் மக்களை மோசே உற்சாகப்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் கட்டளை படி நடப்போர் ஆண்டவர் வாக்களித்த நாட்டை உரிமையாக்கி கொள்வர் என்ற வாக்குறுதியையும் இஸ்ரயேலருக்கு மோசே வழங்குகிறார். கடவுளின் கட்டளைகளே மக்களை அறிவிலும் ஞானத்திலும் சிறந்ததாக மாற்றும் என்ற தெளிவைப் பெற நாமும் அழைக் கப்படுகிறோம். நம் ஆண்டவர் நம்மோடு இருக்குமாறு அவர் தந்த கட்டளைகளை நம் வாழ்வில் கடைபிடித்து தூயவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி சாய்ப்போம்.

நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2,6-8

இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? 2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். பல்லவி
திருப்பாடல் 15: 2-3 5

தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4யb நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

தூய்மைக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். நிறைவான வரங்களும், நல்ல கொடைகளும் விண்ணகத் தந்தையாம் கடவுளிடம் இருந்தே வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் பவுல், உள்ளத்தில் ஊன்றப்பட்ட இறைவார்த்தைகளுக்கு ஏற்ப வாழுமாறு நமக்கு அறிவுரை வழங்குகிறார். தந்தையாம் கடவுளின் பார்வையில் தூயதும் மாசற்றதுமான வாழ்வு வாழ்ந்து, மீட்படையும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிசாய்ப்போம்.

இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21-22, 27

சகோதரர் சகோதரிகளே, நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ``உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?\'\' என்று கேட்டனர். அதற்கு அவர், ``வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். `இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்\' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்\'\' என்று அவர்களிடம் கூறினார். இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ``நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்து கின்றன\'\' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

ஓளியின பிறப்பிடமான தந்தையே இறைவா!,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொது நிலைப் பணியாளர்கள் அனைவரையும், உலகின் அனைத்தத் தீமைகளிலிருந்தும் விடுவித்து, உம்முடைய பணியைத் நேர்மையோடும், தூய்மையான உள்ளத்தோடும் ஆற்றக் கூடிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தீங்குகள் அனைத்தினின்றும்விடுக்கின்றவரான தந்தையே இறைவா! ,

நாம் வாழும் இன்றைய உலகில் நாளாந்தம் பெருகிவரும் கொலை, விபச்சாரம்,, களவு, போதைப் பொருள் பாவனைகள் போன்ற தீச் செயல்கள் அகன்று போகவும், நன்மைத்தனங்கள் பெருகவும் இதன்மூலம் எல்லா மக்களும் உமக்கேற்ற வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கொடைகள் அனைத்திற்கும் ஊற்றான இறைவா! ,

உமது பிள்ளைகளாகிய நாம், வெறுமனே மேலோட்டமான கொண்டாட்டங்களிலும், சடங்காசாரங்களிலும் எமது கவனத்தைச் செலுத்தாது , ஆவியிலும் , உண்மையிலும் வழிபடுகின்ற மக்களாக வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றவரும்: ,

பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றவரும் சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றவரும், ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரும்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றவணுமான தந்தையே எம் இளைஞர்களை ஆன்மீகத்திலும் அருள் வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வரங்களின் வள்ளலாம் இறைவா,,

கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல் களின் பிடியில் சிக்கித் தவிப்போர் அனைவரும், உமது அருளால் நன்மைத்தனத்திற்குரிய தூய எண்ணங்களைப் பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தூய்மையின் நிறைவாம் இறைவா,,

இயேசுவின் கட்டளைகளுக்கு ஏற்ப மனித மரபுகளிலிருந்து விலகி, உம்மையும் பிறரையும் அன்பு செய்து தூயவர்களாய் வாழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, 'உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?' என்று கேட்டனர்'' (மாற்கு 7:5)

கிருமிகள் வழியாக நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்பது இப்போது பரவலான வழக்கமாக இருக்கிறது. இது நல்ல வழக்கம்தான். அதுபோல, உணவருந்துமுன் கைகளைக் கழுவ வேண்டும் என்பதும் சரியாகத்தான் படுகிறது. ஆனாலும் சடங்கு சம்பிரதாயமாகக் கை அலம்புகின்ற பழக்கம் யூதர்களிடையே நிலவியது. இது பற்றிய சட்ட திட்டங்கள் ''மூதாதையர் மரபு'' என்னும் தொகுப்பாக முதலில் வாய்மொழி முறையிலும் பின்னர் ''மிஷ்னா'' என்னும் எழுத்துமுறையிலும் வடிவம் பெற்றன. வழிபாட்டுச் சடங்குகளை நிறைவேற்றும்போது தூய்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக யூத குருக்கள் கை கழுவினர். பிற இனத்தாரோடு உறவுகள் வளரவே, கை கழுவும் பழக்கம் குருக்களல்லாத பொது மக்களிடையேயும் பரவியது. சட்டத்தைக் காக்கும் வேலியாக உருவான இப்பழக்கம் படிப்படியாக ஒரு தடுப்புச் சுவர் போல ஆயிற்று. அதாவது, மக்களை ஒருவர் ஒருவரிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் பிரிக்கின்ற தடையாக மாறிற்று. இத்தகைய தடுப்புச் சுவர்களை இயேசு தகர்த்தெறிய வந்தார். கை கழுவவதற்கு எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துவது, கைகளைக் கழுவும்போது அவற்றை எப்படி விரிப்பது, எத்தனை தடவை கழுவுவது போன்ற அதிநுணுக்கமான கேள்விகள் எழுப்பப்பட்டன. உரோமை ஆட்சியாளர்களால் சிறைப்படுத்தப்பட்ட யூத குரு பற்றி ஒரு கதை உண்டு. குடிப்பதற்கென்று அவருக்கு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அத்தண்ணீரைக் குடித்துத் தாகம் தீர்ப்பதைவிட சடங்குமுறையான கை அலம்பலுக்கென்றே தண்ணீரை எல்லாம் பயன்படுத்திவிட்டதால் சாவும் நிலைக்கு வந்துவிட்டாராம். அந்த அளவு சடங்குமுறை ஒழுங்குகள் மக்களின் வாழ்வை ஆக்கிரமித்துக் கொண்டன.

தண்ணீரினால் கழுவிப் பெறுகின்ற வெளித்தூய்மையை விட உள் தூய்மையே முதன்மையானது என இயேசு கற்பிக்கிறார். தேவையற்ற சுமைகளை மக்கள் மீது ஏற்றிய சமயத் தலைவர்களை இயேசு கடிந்துகொள்கிறார். தூய்மை என்பது உள்ளத்திலிருந்து எழ வேண்டும். நம்மைத் தேடி வருகின்ற கடவுளுக்கு நம் உள்ளத்தை நாம் திறப்பதே தூய்மை அடைய வழியே தவிர வெளிச் சடங்குகளால் வாழ்வில் தூய்மை துலங்கிவிடாது. அதுபோலவே தீட்டு என்பது மனித உள்ளத்திலிருந்து பிறக்கின்ற அழுக்கு. அத்தகைய அழுக்குகளை இயேசு பட்டியலிடுகிறார்: ''மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன'' (மாற் 7:21-22). இத்தகைய தீட்டுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் தூய்மை வாழ்வு நடத்தவும் நாம் விரும்பினால் நாம் ''உதட்டளவில் கடவுளைப் போற்றாமல் உள்ளத்தளவில் அவரை அணுகிச் செல்ல வேண்டும்'' (காண்க: மாற் 7:6). கடவுளின் வார்த்தையை நம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நல்ல சிந்தனைகள் உருவாகிட எங்களையே உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.