இன்று பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு.‏

திருவழிப்பாட்டு ஆண்டு B (23-08-2015)

தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/> தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது/>


திருப்பலி முன்னுரை - 1

திருமகன் இயேசுவில் புது வாழ்வு பெற்றுள்ள இறைமக்கள் அனைவருக்கும் இன்று ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவருக்கும் திருமகன் இயேசுவின் பெயரால் வாழ்த்துகளைக்கூறி மகிழ்கிறேன். இன்று பொதுக்காலம் இருபத்தோராம்ஞாயிறு. இன்றைய வழிபாடு இறைமக்கள் அனைவருக்கும் எல்லாமே இறைவன்தான் என்பதை உணர்த்தி இதைத் தெரிந்திராத மக்கள் அவரைவிட்டு அகல்கின்றனர் என்பதை நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது. நாமும் இன்று நமக்குத்தானே ஒரு வினாவை எழுப்பி ஆய்வுசெய்வோம். நமக்கு எல்லாமே இறைவன் தானா? இதை உணர்கிறோமா?

இறைவனுடைய இரக்கமும், வல்லமையும், அருளும் அவரிடம் அடைக்கலம் புகும் அனைவருக்கும் கிடைக்கின்றன. ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன: அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்: அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்: நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். என்னும் இறைவனின் செய்திகள், அவருடைய வார்த்தைகள் வழியாக இன்று நம்மை வந்தடைகின்றன. எனவே வாழ்வு தரும் ஆவியையும், நிலை வாழ்வையும் வழங்கும் இறைவனின் வார்த்தைகளை நாம் வாசித்து, தியானித்து, செபித்து, வாழ்வாக்கி இயேசுவோடு என்றும் ஒன்றித்திருக் கும் சீடர்களாயிருந்து, சாட்சிய வாழ்வு வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.

திருப்பலி முன்னுரை - 2

ஆண்டவருக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்தொன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நிலைவாழ்வு தரும் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, உண்மை கடவுளுக்கு பணிந்து வாழவும், பணிவிடை செய்யவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப வாழாமல், தூய ஆவியாரின் வழிநடத்துதலின்படி கடவுளின் மாட்சியை வெளிப்படுத்துபவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.

கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும், அவரோடு ஒன்றித்த வாழ்வு வாழ்ந்து நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். பேதுருவைப் போல ஆண்டவர் இயேசுவின் நிலைவாழ்வு தரும் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

ஆண்டவருக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம், யோசுவா இஸ்ரயேல் மக்களிடம் கடவுளைப் பற்றி கேள்வி கேட்டதையும், அதற்கு அவர்கள் அளித்த பதிலையும் பற்றி பேசுகிறது. இஸ்ரயேல் மக்கள் உண்மை கடவுளை விடுத்து, வேற்றின தெய்வங்களை வழிபட விரும்புகிறார்களா என்பதற்கு பதிலளிக்குமாறு யோசுவா கேட்கிறார். கடவுளாகிய ஆண்டவரின் மாபெரும் செயல்களை விடுதலைப் பயணத்தில் கண்ட மக்கள், அவரை விடுத்து வேற்று தெய்வங்களை நாடப் போவதில்லை என்று பதிலளிக்கிறார்கள். நாம் வழிபடும் உண்மை கடவுளிடம் முழுமையான நம்பிக்கை கொண்டு வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

நாங்களும் அவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-2,15-17,18

அந்நாள்களில் செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம். மக்கள் மறுமொழியாக, ``ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்'' என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
திருப்பாடல் 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். பல்லவி

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். பல்லவி

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. பல்லவி



தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவருக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல ஒருவர் மற்றவருக்கு பணிந்து வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து திருச்சபையின் தலையாய் இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டும் பவுல், கிறிஸ்துவுக்கு பணிந்து ஒரே உடலாய் வாழுமாறு நமக்கு அறிவுரை வழங்குகிறார். கிறிஸ்துவின் வார்த்தையினாலும் திருமுழுக்கு நீரினாலும் கழுவப்பட்டுள்ள நாம் அனைவரும், கடவுள் முன்னிலையில் மாசற்ற, தூய வாழ்வு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவால் பேணி வளர்க்கப்படும் உடலின் உறுப்புகளாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

திருமணத்தில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்தும்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-32

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். ``இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்'' என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில் இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், ``இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? '' என்று பேசிக் கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ``நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை'' என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், ``இதன் காரணமாகத்தான் `என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக்குக் கூறினேன் '' என்றார். அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், ``நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? '' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

வாழ்வின் ஊற்றாம் இறைவா,

உம்மிடம் கொண்டுள்ள நம்பிக்கையால் நாளும் வளர்ந்து வருகின்ற உமது திருச்சபையினை வழிநடத்தி வரும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரையும், உம் மீதான நம்பிக்கையில் உறுதிபடுத்திக் காத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உண்மையின் உறைவிடமாம் இறைவா,

உலகிற்கு நிலைவாழ்வு அளிக்கும் உமது திருமகனின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, உலகெங்கும் உமது நற்செய்தியைப் பறைசாற்றும் தூதுவர்களாக விளங்கும் வல்லமையை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

நன்மைகளின் நாயகராம் இறைவா,

எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை கடவுளாகிய உமது மேன்மையை உணரவும், பொய்மையின் இருளிலிருந்து விலகி உண்மையின் ஒளியாகிய உம்மைத் தேடி வரவும் தேவையான அருளுதவிகளை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

விடுதலை தருபவராம் இறைவா,

தீராத நோய்கள், கடன் தொல்லைகள், மன வேதனைகள், பிரச்சனைகள் போன்றவற் றில் சிக்கித் தவிப்போர் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உம் இரக்கத்தால் அவற்றில் இருந்து விடுதலை பெற்று, வாழ்கின்ற உண்மை கடவுள் நீரே என்பதை அறிக்கையிடவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நிலைவாழ்வு அளிப்பவராம் இறைவா,

உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வு தரும் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய், மாசற்ற, தூய வாழ்வு வாழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அடைக்கலப் பாறையாம் தந்தையே இறைவா!

போதைப்பொருள், வீண் களியாட்டம், ஆடம்பரம், கலாச்சாரச் சீர்கேடு ஆகியவற்றிற்கு அடிமையாகி வாழும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் புது வாழ்வு வாழ வேண்டிய அசீரை அளித்துக் காத்திட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு பன்னிரு சீடரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' ... என்றார்'' (யோவான் 6:67-68)

மனித வாழ்க்கையில் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள் அவ்வப்போது எழுவதுண்டு. வாழ்நாள் முழுவதும் கூடி வாழ்ந்து ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க எண்ணுவோர் தங்கள் வாழ்க்கைத் துணை பற்றித் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட படிப்புத் துறையில் சேர்ந்து பிற்காலத்தில் நிலையான ஒரு தொழில் செய்ய விரும்புவோர் தங்கள் படிப்புப் பற்றி உறுதியான முடிவெடுக்க வேண்டும். அதுபோலவே, இயேசுவைப் பின்செல்வோரும் தங்கள் வாழ்க்கை முறை பற்றி உறுதியான முடிவெடுக்க அழைக்கப்படுகிறார்கள். இயேசு தாமே வானிலிருந்து இறங்கிவந்த உணவு என்றும் தம்மில் நம்பிக்கை கொள்வோர் எந்நாளும் வாழ்வர் என்றும் அறிவித்தார். மக்கள் எந்நாளும் உயிர்வாழ்வதற்காக இயேசு தம் உடலையும் இரத்தத்தையும் உணவாக, பானமாக அளிப்பதாகக் கூறினார். இயேசுவின் இந்தப் போதனையைக் கேட்ட மனிதர்கள் இயேசுவை நம்பி அவர் வழியில் செல்வதற்காக அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இயேசுவை ஏற்பதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்தது. அப்போது பலர் இயேசுவை விட்டுச் சென்றுவிட்டார்கள். அவ்வாறு சென்றவர்களைக் கட்டாயப்படுத்தித் தம்மோடு இருக்க இயேசு அழைக்கவில்லை. மாறாக, தம்மோடு நெருங்கிப் பழகி, தம் போதனைகளின் உள்பொருளை அறியக் கொடுத்துவைத்த தம் ''பன்னிரு சீடரையும்'' நோக்கி இயேசு கேட்கிறார்: ''நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' (யோவா 6:67). அக்கேள்விக்கு எல்லார் பெயராலும் பதிலளிக்கிறார் பேதுரு. அவர் அளித்த பதில் இயேசுவில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. ''ஆண்டவரே, யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன'' என பேதுரு அளித்த பதில் நம் இதயத்திலிருந்தும் உதடுகளிலிருந்தும் எழ வேண்டும் (யோவா 6:68).

நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் இயேசுவிடம் இருப்பதால் அவருடைய போதனைக்கு நாம் எப்போதும் செவிமடுக்க வேண்டும். இயேசுவை நம்பி, அவரைப் பின்செல்வதாகக் கூறிய பன்னிரு சீடர்கள் தங்கள் உறுதிப்பாட்டிலிருந்து தடுமாறிய நேரங்கள் இருக்கத்தான் செய்தன. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தார்; பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தார்; எல்லாரும் இயேசுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்றறிந்ததும் அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். இவ்வாறு உறுதியற்ற நிலையில் இருந்த சீடரை இயேசு தூய ஆவியின் வல்லமையால் உறுதிப்படுத்தினார். அவர்களும் துணிந்து இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கலாயினர். இயேசுவுக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கவும் முன்வந்தார்கள். நாம் இயேசுவின் போதனையைக் கேட்டு அதன்படி நடக்கும்போது எதிர்ப்புகள் எழலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல் இயேசுவின்மீது கொண்ட உறுதியான நம்பிக்கையில் நிலைத்திருந்தால் ''நிலைவாழ்வை''க் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்று மகிழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, வாழ்வு தரும் வார்த்தைகளை உம் திருமகன் இயேசு வழியாக எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி!