இன்று பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு.‏

திருவழிப்பாட்டு ஆண்டு B (19-07-2015)

சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்/> சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்./> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்./> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்/>


திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே அனைவருக்கும் இறைவனின் நாளின் வாழ்த்துக்களையும் ஆசீரையும் உரித்தாக்கிகொள்கிறேன். கவலை இல்லாமல், கஷ்டமில்லாமல், நோயில்லாமல், நோக்காடில்லாமல் வாழவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். இந்த ஞாயிறு இதற்கு என்ன வழி என்று இயேசுவின் போதனையை கேட்டுச் செயல்பட அழைக்கின்றது. பொதுக்காலத்தின் 16 வது ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இறைவனின் மந்தையாகிய மக்கள் முறையான வழிநடத்துதல் இன்றி சிதறிப்போகும்போது, ஆண்டவர் நமக்காக புதிய ஆயர்களை வழிகாட்டிகளாக அனுப்புகிறார் என்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. இறைவனின் பராமரிப்பை வழங்கும் திருச்சபையின் திருப்பணியாளர்களைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனால் நம்மிடம் அனுப்பப்பட்ட மேய்ப்பர்களாகிய அவர்களை ஏற்று வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

இறைவனுக்குரியவர்களே,

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் ஆடுகளை சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு எதிரான வார்த்தைகள் இறைவாக்கினர் எரேமியா வழியாக உரைக்கப்படுகின்றன. ஆண்டவர் தனது மந்தையாகிய இறைமக்கள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை நாம் இங்கு காண்கிறோம். தாவீதின் வழிமரபில் தோன்றும் கிறிஸ்து வழியாக, புதிய ஆயர்களை உருவாக்கும் கடவுளின் திட்டம் முன்னறிவிக்கப்படுகிறது. இறைத்திட்டத்துக்கு உகந்த ஆயர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கீழ்ப்படியும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர் " தோன்றச் செய்வேன்
இறைசாக்கினர் எரேமியா 23:1-6

ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு! தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்: அதனைத் துரத்தியடித்தீர்கள்: அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா: திகிலுறா: காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர். ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நாள்கள் வருகின்றன: அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர் " தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்: இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேனூ " என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திபா 23:1-3a, 3b-4, 5,6

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்(பல்லவி)

மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் ப+சுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.(பல்லவி)

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.(பல்லவி)

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவனுக்குரியவர்களே,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், யூதர்கள், பிறஇனத்தார் என்று பிரிந்திருந்த உலக மக்களை கிறிஸ்துவே ஒன்றிணைத்தார் என்று எடுத்துரைக்கிறார். அன்பின் வெளிப்பாடாக இயேசு நமக்காக ஏற்றுக்கொண்ட துன்பங்கள் வழியாக, நமது பகைமைச்சுவர் தகர்க்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்து அறிவித்த அமைதியின் நற்செய்தி நம்மை தந்தையாம் கடவுளிடம் கொண்டு சேர்க்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியரருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:13-18

ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அங்கிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலுயா, அல்லேலுயா! என் ஆடுகள் எனது குரலுக்கு செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பிந்தொடர்கின்றன. அல்லேலுயா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:30-34

திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் " என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

திருச்சபைக்காக:

தன் உடலையே மானிடருக்காக பகிர்ந்தளித்த இயேசுவே! உமது அருட்சாதனைங்களை நிறைவேற்ற உம்மால் அழைப்பு பெற்ற எம் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினல்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிரையினர் அனைவரும் உடன்படிக்கையின் படி வாழ்ந்தும் உமது மக்களை இறை மனித உறவில் நாளும் வழி நடத்த போதுமான ஆன்மா, உடல் நலன்களை வழங்கி அவர்களை வழி நடத்திட இயேசுவே உம்மை மன்றாடுகிறேம்.

நாட்டிற்காக:

எமை படைத்து ஆளும் இறைவா, எமது நாட்டை ஆளும் தலைவர்கள் உம் திருமகனின் மனநிலையில் மக்களை வழி நடத்தவும் சுயநலத்தையும் அதிகாரத்தின் சுயநலபிடியிலிருந்து தளர்ந்து சமத்துவ சமுதாயம் படைத்திட வேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திடவும், பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள், நாடுகள் மற்றும் இனங்களின் மக்கள் அனைவரும், ஏற்றுக்கொள்தல், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்தவர்களாய், பகைமையை விடுத்து ஒன்றிப்பில் புது வாழ்வு காண அகத்தூண்டுதல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மக்களுக்காக:

கருணை கடலே எம் இறைவா! உம் படைப்பின் மந்தையாகிய அனைவரும் சாதி சமயம் இனம் மொழி போன்ற பிளவுகளால் சிதறுண்டு தான் வணங்கும் தெய்வமே தெய்வம் என்று கடவுளையும் பிளவுபடுத்தும் நோக்கில் உள்ளம் சிதறுண்டு வேற்றுமை காணும் வேளையில் அவர்களுக்கு கடவுள் ஒருவரே. நாம் அனைவரும் ஒரே மேய்ப்பனின் ஆடுகள் என்ற மனநிலை மக்களிடையே மேலோங்கி நிற்கும் மனநிலை உருவாகிட வேண்டிய அருளை பொழிந்தருள இறைவா உமை மன்றாடுகிறோம்.

மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:

எமக்கு புத்துயிர் அளிக்கும் எம் அன்பு நேசரே! இறைவா! உமது நற்செய்தியின்படி இறையாட்சியை இம்மண்ணில் பரப்ப மனமாற்றத்தை ஏற்ப்படுத்த எங்களை உம் அன்பு சீடர்களாய் இவ்வுலகில் அனுப்பும். அதையே உம் அன்பு கட்டளையபாக ஏற்று அதன்படி இன்றைய சூழலில் வாழ்ந்திடவும், உம்மை தங்கள் சொந்த மீட்பராக ஏற்று வாழ்வோருக்கு ஏற்படும் இன்னல்களை நீர் அறிவீர். அவர்கள் வாழ்விடம் இழந்து சொந்தகளையும் இழந்து தவிக்கும் போது அவர்களின் ஆறுதலாகவும் அவற்றை வெற்றிக்கொள்ள துணையாகவும் இருந்திட வேண்டி, இறைவா உமை மன்றாடுகின்றோம்.

இளைய சமுதாயத்திற்காக :

கரிசனை அன்பு கொண்ட எம் இறைவா! உமது பிள்ளைகள் எழுந்து ஒளிவிசிட மது என்னும் தடை தமிழகம் எங்கும் நிறைந்து சிறுகுழந்தைகள் தொடங்கி சமுதாயத்தின் அனைத்து மக்களை ஆட்டிப்படைக்கும் வேளையில் தங்கள் வாழ்க்கையில் நிலை தடுமாறும் நிலை உள்ள இன்றைய இளைய சமுதாயம் காப்பாற்றப்படவும், அவர்கள் உமது நேரிய இறையரசு பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

முதியோர்களுக்காக :

அன்பின் இறைவா! உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி, முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும் வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்தும் நல் ஆயனாக இருந்து வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

உழைப்பும், ஓய்வும் !

உழைப்புதான் மானிடரின் இலக்கணம் ” என்று கூறினார் கார்ல் மார்க்ஸ். #8220;உழைக்காதவர் உண்ணலாகாது” என்றார் பவுலடியார். உழைப்புக்கு இலக்கணமாக யாவே இறைவனையே விவிலியம் எடுத்துக்காட்டாகத் தருகிறது. தொடக்க நுhலின் முதல் அதிகாரங்களில் இறைவன் ஆறு நாள்களில் இந்த உலகையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். ஓய்வின்றி உழைப்பதும் தவறு. உழைப்பின்றி ஓய்வெடுப்பதும் தவறு. நன்கு உழைக்க வேண்டும். உழைப்பிற்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளம். அந்தத் தந்தையின் திருவுளத்திற்கேற்பவே, திருமகன் இயேசுவும் செயல்பட்டார். அதிகாலை செபத்திலிருந்து, பகல் நேர நற்செய்தி அறிவிப்பு, மாலையில் நோயாளர்களைக் குணப்படுத்துதல், இரவில் வீடுகளில் உறவை வளர்த்தல் எனப் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார். தம் சீடர்களுக்கும் அந்தப் பயிற்சியை வழங்கினார். எனவேதான், சீடர்கள் திருத்துhதுப் பணியாற்றிவிட்டுத் திரும்பி வந்து, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்து #8220;நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ” என்று மொழிந்தார். சற்று ஓய்வெடுங்கள் என்னும் சொல்லாடல் நம் கவனத்தை ஈர்க்கிறது. தேவையான ஓய்வு. இறைவன் நம்மீது அக்கறை உள்ளவர், நம்மைப் புரிந்துகொள்பவர் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் அடையாளமாகத் திகழ்கிறதல்லவா?

மன்றாட்டு:

ஞானத்தின் ஊற்றே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்திலும், பேரன்பிலும் நாங்கள் உழைக்கவும், போதுமான உடல், உள்ள, ஆன்ம ஓய்வுபெறவும் வேண்டும் எனத் திருவுளம் கொண்டீரே. உமக்கு நன்றி. நீர் மட்டுமே தர முடிகின்ற அமைதியை, இளைப்பாறுதலை, ஓய்வை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வீராக. ஆமென்.