உயிர்ப்பின் காலம் 6 ஆம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (10-05-2015)

கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/>


திருப்பலி முன்னுரை - 1

இறைவனின் அன்பர்களே,
இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இறைவனின் அன்பில் நிலைத்திருக்க இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. இயேசு தந்தையின் அன்பில் நிலைத்திருப்பதுபோல, இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவில் இணைந்திருந்து, ஒருவர் மற்றவரை அன்புசெய்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

அன்புக்குரியவர்களே,
உயிர்ப்பின் காலம் ஆறாம் வாரத்தில் அன்புப் பலியில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். இன்று பாஸ்காக் காலம் ஆறாம் ஞாயிறு.

கடவுளுக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர் என்னும் செய்தியோடு இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்குள் நுழைய இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. அன்பு என்பது இறை – மனித உறவின் வல்லமை, அது மகிழ்சி அளிக்கும் ஆற்றல் என்பது இன்று நமக்கு வெளிப்படுத்தப்படும் மாபெரும் உண்மையாகும். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்: என்னும் இறைவனின் குரல், தூய அன்பு கொண்டு வாழ்வதால் நாம் மகிழ்ச்சி, நிறைவு, உடல் நலம், நல்லுறவு என்பவற்றைப் பெற்றுக் கொள்ளுகின்றோம் என்னும் நற்செய்தியை நமக்குத் தருகின்றது. இறைவனின் இந்த மாபெரும் அருள் ஆசீர்வாதத்திற்காக முழு உள்ளத்தோடு நன்றி கூறிக்கொண்டு, கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, இறையன்பில் நிலைத்திருந்து, நேர்மையாகச் செயற்பட்டு இறையரசின் மக்களாக வாழ நம்மை அர்ப்பணித்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

அன்பர்களே,

இன்றைய முதல் வாசகம், கொர்னேலியுவுக்கு பேதுரு திருமுழுக்கு வழங்கிய நிகழ்வினை எடுத்துரைக்கிறது. யூதர்கள் மட்டுமே கடவுளின் அன்புக்கு உரியவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகும் தகுதிபெற்றவர்கள் என்று எண்ணப்பட்டச் சூழ்நிலையில், யூதரல்லாத பிற இனத்தவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்ததைக் காண்கிறோம். இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அவரது அருள் வரங்களைப் பெற்று மகிழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 25-26, 34-35, 44-48

அக்காலத்தில் கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.பேதுரு, ;எழுந்திடும்: நானும் ஒரு மனிதன்தான் ; என்று கூறி அவரை எழுப்பினார். அப்போது பேதரு பேசத் தொடங்கி, ;கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்: ஏனென்றால் அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். பேதுரு, ;நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்? ; என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: பிற இனத்தார் முன் ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்.
திருப்பாடல் 98: 1. 2-3. 3-4

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உன உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அன்பர்களே,

இன்றைய இரண்டாம் வாசகம், கடவுளிடம் இருந்து வரும் அன்பை பிறரோடு பகிர்ந்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் வாழ்வு பெறும் பொருட்டு, தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பிய கடவுளின் செயலிலேயே அன்பின் தன்மை விளங்குகிறது என்று திருத்தூதர் யோவான் எடுத்துரைக்கிறார். இறைவனிடமும் பிறரிடமும் நாம் செலுத்தும் அன்பால், பாவங்களை வெல்லும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர்
1யோவான் 4:7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:"என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். ;நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்: ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை: நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

திருச்சபைக்காக:

ஆற்றலின் ஊற்றே என் இறைவா! இன்றைய சூழலில் சமய வேறுபாடுகள் வேரூன்றி இறைமக்களை சிதறடிக்கும் வேளையில் திரு அவையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர் என இவர்கள் அனைவரின் மீதும் உம் துணையாளாரின் ஆற்றலை பொழிந்து உம் பாறையாகிய திருச்சபையைக் காத்திட, அருள் வாழ்வில் சிறந்து பணியாற்றிட, வேண்டிய வரம் தர வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் ஊற்றே இறைவா,

உலகத்தின் கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வு தேடி அலையும் மக்கள் அனைவரும், உம் வழியாக அமைதி காணவும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணரவும், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்கருணையில் உம் திருமகனின் உடனிருப்பை உணரவும், பிற சமயத்தினர் முன்னிலையில் உமக்கு சான்று பகரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

பேரன்பையும் உறுதிமொழியையும் என்றும் நினைவுகூரும் தந்தையே இறைவா!

உம்முடைய மக்களாகிய நாங்களும்: உமது கட்டளைகளைக் கடைப்பிடித்து, இறையன்பில் நிலைத்திருந்து, நேர்மையாகச் செயற்பட்டு இறையரசின் மக்களாக வாழ வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சிறார்களுக்காக:

“என் அன்பில் என்றென்றும் நிலைத்திருங்கள்" என்ற எம் இயேசுவே! உமது அன்பில் சிறார் அனைவரும் இன்றைய சூழலுக்கேற்ப தங்களை அன்பின் பாதையில் பயணிக்கவும், இறை – மனித – உறவில் அவர்கள் சங்கமித்து ஆசிரியர்கள் - ஆன்றோர்களின் சொல்லுக்கு கீழப்படிந்து இறைவார்த்தையின் ஒளியில் வாழ்ந்து வளர்ந்திடவும், வேலையின்றியும், வதிவிட அனுமதிக்காக வேதனையோடு காத்துக்கொண்டும், குடும்பப் பிரச்சனைகளால் அமைதியிழந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவர் மேலும் மனமிரங்கி அவர்களின் வேதனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும், உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்' என்றார்'' (யோவான் 15:9)

இயேசு வழங்கிய அன்புக் கட்டளையைச் சிலர் ஒரு சுமையாகப் பார்ப்பார்கள். ஆனால் அது நம்மீது சுமத்தப்பட்ட ஒரு பளு அல்ல. இயேசு தருகின்ற அன்புக் கட்டளை உண்மையிலேயே அவர் நமக்குத் தருகின்ற ஒரு ''கொடை''. இயேசுவுக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற அன்பை நாம் அனுபவிக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். அந்த அன்பை நன்றியோடு ஏற்று, நம் வாழ்வில் நாம் ஆழ உணரும்போது, கடவுள் தம் சாயலாக உருவாக்கிய மனிதரை அன்புசெய்வது போல நாமும் அன்பு செய்திட முன்வருவோம். இவ்வாறு கடவுளன்புக்கும் பிறரன்புக்கும் இடையே நிலவுகின்ற ஆழ்ந்த பிணைப்பை நாம் கண்டுகொள்வோம். பிறரை அன்புசெய்யும்போது நாம் கடவுளின் அன்புக்கு இவ்வுலகில் சான்று பகர்கின்றோம். கடவுள் நம்மை அன்பு செய்து, தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது போல நாமும் பிறர்மீது அன்பு கொண்டு அவர்களை நம் சகோதர, சகோதரிகளாக ஏற்க அழைக்கப்படுகிறோம்.

பிறரை அன்பு செய்ய நமக்குத் தரப்படுகின்ற கட்டளை ஒரு கொடை என்றால் அதை நாம் ஒருவர் ஒருவரோடு பகிர்ந்திட வேண்டும். இங்கே இயேசு நமக்கு ஒரு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் உள்ளார். இயேசு கடவுளின் அன்பை நம்மோடு பகிர்ந்துகொண்டு நமக்காகத் தம்மையே பலியாக்கியதால் நாமும் ஒருவர் ஒருவரை அன்புசெய்ய வேண்டும். அதே நேரத்தில் இயேசுவின் அன்பைப் போல நம் அன்பு அமைய வேண்டும். அதாவது, பிறர் வாழ்வு பெற வேண்டும், நிலைவாழ்வில் பங்கேற்க வேண்டும் என்னும் நோக்கோடு நாம் பிறரை அன்புசெய்திட வேண்டும். இந்த அன்பு தன்னலத்தைத் தேடாது; பிறர் நலனில் அக்கறை கொண்டிருக்கும். இந்த அன்பு பொறுமையானது; தீங்கு நினையாது; நன்மை செய்யும்; தற்புகழ்ச்சி கொள்ளாது (காண்க: 1 கொரி 13).

மன்றாட்டு:

இறைவா, இயேசு எங்களை அன்புசெய்ததுபோல நாங்கும் பிறரை அன்போடு அரவணைக்க அருள்தாரும்.