இன்று பாஸ்காக் காலம் மூன்றாம் வாரம்

திருவழிப்பாட்டு ஆண்டு B (19-04-2015)

இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./> இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./> இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./> இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./> இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./> இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./> இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./> இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./> இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./> இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார்./>


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பிற்கினியவர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைப் பணிவோடு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கிறேன். உயிற்பின் காலத்தில் இந்த மூன்றாம் வாரத்தில் இறைப்பணியாற்ற அன்போடு தூண்டப் பெறுகிறோம். அதன் ஒருசில கூறுகளை இன்றைய திருப்பலி வாசகங்கள் நம்முன் வைக்கின்றன.

மிகச் சாமானிய மக்களாயிருந்த இயேசுவின் சீடர்கள் எளிய மனத்தினர். பாமரர்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவில் பற்றுக் கொண்டவர்கள். இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் எனும் உறுதியைப் பெற்றபின் மகிழ்வுற்றவர்களானார்கள். மீட்பராம் இயேசு பாவம் போக்கும் பலியாகி மனிதருடைய பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்று பாவத்தின் பலனாகிய சாவை வென்று உயிர்த்தெழுந்தார் எனும் உண்மையை உணர்ந்துகொள்ளப் பெறார்கள். அதை உலகோர்க்கு அறிவித்து அந்த மீட்பின் நிலையை அடைய விரும்புவோர் இயேசுவில் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பதை உலகோர்க்கு அறிவிக்க இயேசுவால் உணர்த்தப்பட்டார்கள். தூய ஆவியால் உறுதியூட்டப்பட்டபின் இயேசு தங்களுக்குப் பணித்த பணியைத் துணிவோடு செயல்படுத்தத் தொடங்கினர். நாமும் இப்பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் எனும் உணர்வு பெற்றவர்களாக வாழ, செயல்பட வரம்வேண்டி இன்று இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

நம்பிக்கை கொண்டோரே,

இன்றைய முதல் வாசகம், நமது பாவங்களைப் போக்குவதற்காக கடவுளின் திட்டப் படியே மெசியாவாகிய இயேசு துன்புற்றார் என்பதை எடுத்துரைக்கிறது. இயேசு மக்களால் தீர்ப்பிடப்பட்டு கொல்லப்பட்டாலும், தந்தையாம் கடவுள் அவரை உயிரோடு எழுப்பியதற்கு தாங்களே சாட்சிகள் என்று திருத்தூதர் பேதுரு மக்கள் முன்பு சான்று பகர்கிறார். இயேசுவின் உயிர்ப்பை பிற சமயத்தினரும் ஏற்கும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 13-15, 17-19

அந்நாள்களில் பேதுரு மக்களை நோக்கிக் கூறியது: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: : உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே.
திருப்பாடல் 4: 1. 6. 8

எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

6 `நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?' எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். பல்லவி

8 இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

இனியவர்களே,

இன்றைய இரண்டாம் வாசகம், அனைத்துலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக விளங்கி இறைத்தந்தையிடம் பரிந்துபேசுபவர் இயேசுவே என்று எடுத்து கூறுகிறது. இயேசுவின் கட்டளைகளை கடைபிடிப்போரிடமே கடவுளின் அன்பு நிறைவடைகிறது என திருத்தூதர் யோவான் நமக்கு தெளிவுபடுத்துகிறார். ஆண்டவர் இயேசு கற்பித்த இறையன்பையும், பிறரன்பையும் நமது வாழ்வில் கடைப்பிடித்து, இறைவனில் நிறைவு காண வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே. அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்துகொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். ``அவரை எனக்குத் தெரியும்'' எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம் பற்றி எரியச் செய்தருளும்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48

அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே'' என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ``உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?'' என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ``மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே'' என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், `மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ``பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

பாவத்தின்மீதும், சாவின்மீதும் கிறிஸ்து இயேசுவை வெற்றி கொள்ளச் செய்த தந்தையே இறைவா!

தூய ஆவியின் நிறை வல்லமையால் இன்றைய திருச்சபையில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் மீட்பின் பாதையில் மக்களை வெற்றியுடன் வழிநடாத்திச் செல்ல வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தந்தையே இறைவா!

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் ஊற்றே இறைவா,

உலகத்தின் கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வு தேடி அலையும் மக்கள் அனைவரும், உம் வழியாக அமைதி காணவும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணரவும், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்கருணையில் உம் திருமகனின் உடனிருப்பை உணரவும், பிற சமயத்தினர் முன்னிலையில் உமக்கு சான்று பகரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் நிறைவே இறைவா,

உயிர்ப்பை கொண்டாடி மகிழுகின்ற நாங்கள் உயிர்ப்பு தரும் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பினை உணர்ந்திடவும், பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும், மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனைப் போல,புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரிய வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும், உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களைப் பார்த்து, 'நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் கால்களையும் பாருங்கள், நானே தான்' என்றார்'' (லூக்கா 24:38-39)

இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டது. இறந்த ஒருவர் மீண்டும் உயிர்பெற்று வந்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் இறப்பார். இயேசுவின் வல்லமையால் சாவிலிருந்து விடுவிக்கப்பட்ட இலாசர் இவ்வாறே மீண்டும் இறந்தார். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் அவ்வகையைச் சார்ந்ததல்ல. இயேசு சாவின்மீது வெற்றிகொண்டார். இறந்து உயிர்பெற்ற அவர் மீண்டும் இறக்கமாட்டார். மனித அறிவு இந்த உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. எனவேதான் நாம் இயேசுவின் உயிர்த்தெழுதல் வரலாறு கடந்த நிகழ்வு எனவும், நம் நம்பிக்கையின் மையம் எனவும் கூறுகிறோம். இறந்த இயேசு மீண்டும் தம் நடுவே தோன்றியதைக் கண்ட சீடர்கள் அச்சத்தால் நடுங்கினார்கள். இயேசு ஓர் ''ஆவி'' போல அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். எனவே அவர்கள் ''கலங்கினார்கள்''. அவர்களது உள்ளத்தில் ஐயம் மேலோங்கியது. அதைக் கண்ட இயேசு தாம் உண்மையிலேயே அவர்கள் நடுவே இருப்பதை எடுத்துக்காட்டுவதற்காக அவர்களைப் பார்த்து, ''என் கைகளையும் கால்களையும் பாருங்கள், நாம் தான்'' எனக் கூறினார். மேலும், அவர்களோடு அமர்ந்து உணவு உண்டார் (காண்க: லூக் 24:43).

இயேசு உடலற்ற ஆவியல்ல; அவர் உடலோடு உயிர்பெற்றெழுந்தார். ஆனால் உயிர்பெற்றெழுந்த இயேசுவின் உடல் பருப்பொருளாகிய நம் உடல் போலல்லாமல் ''மாட்சிமை பெற்ற உடலாக'' மாறியது என நாம் நம்புகிறோம். இதையே தூய பவுல் ''ஆவிக்குரிய உடல்'' என விளக்குகிறார் (காண்க: 1 கொரி 15:44). நாமும் சாவுக்குப் பின் கடவுளின் வல்லமையால் உடலோடு உயிர்பெற்றெழுவோம் என நம்புகிறோம். அதுபோலவே, அன்னை மரியா உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கை. இயேசு உண்மையிலேயே கடவுளும் மனிதருமாக இருந்தார். அவருடைய மனிதத் தன்மை அவருடைய சாவோடு மறைந்துவிடவில்லை, மாறாக, அவர் மாட்சிமைபெற்ற உடலோடு கடவுளின் இணைப்பில் உள்ளார் என நாம் நம்புகிறோம். அவர் நமக்காகப் பரிந்துபேசுகிறார் என்பதும் நம் நம்பிக்கை. ஆக, ''என் கைகளையும் கால்களையும் பாருங்கள்'' என இயேசு நம்மைப் பார்த்துக் கூறுவது நாம் அவருடைய கடவுள் தன்மையையும் மனிதத் தன்மையையும் இணைத்துப் பார்க்க நமக்கு விடுக்கப்படுகின்ற அழைப்பாக உள்ளது. நமக்காக மனிதரான இயேசு நாம் கடவுள் தன்மையில் பங்கேற்க வழிவகுத்தார். இயேசுவை நம் வழியாகக் கொண்டு நாம் பயணம் செய்தால் கடவுளின் வாழ்வில் பங்கேற்று, எந்நாளும் மகிழ்ந்திருப்போம்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் கலக்கமின்றி உம்மைப் பற்றிக்கொள்ள அருள்தாரும்.