இன்று தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு.

திருவழிப்பாட்டு ஆண்டு B (22-03-2015)

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்./> கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்./> கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்./> கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்./> தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்./> கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்./> தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்./> தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்./> தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்./> தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்./> தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு 
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்./>


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புநிறை இறைமக்களே தவக்கால 5 ஆம் ஞயிற்றின் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் கனிவான வாழ்த்துக்களை உரியதாக்குகிறேன். தவக்காலத்தின் ஐந்தாம் வாரம் நமக்காகத் துன்பங்களை ஏற்ற திருமகன் இயேசு இறைத் தந்தையால் நமக்காக அனுப்பப்பட்ட துன்புறும் ஊழியன் ஆவார் என உணர்த்தப்பட்டு அவர்வழியில் சென்று இவ்வுலகத்திற்கு மரித்தவர்களாகவும், புதுவாழ்வுக்கு உயிர்த்தவர்களாகவும் வாழ முயல்வோம். இந்தப் புது வாழ்வு மதிப்பும் மாட்சிமையும் உள்ளது என்று கண்டுணர்ந்து இயேசுவோடு ஒன்றாவோம்.

ஆண்டவர் இயேசு துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, நாம் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார், என்னும் மறையுண்மைகள் நாம் எவ்வாறு நிறைவடையலாம், மற்றவர்களுடைய மகிழ்ச்சிக்கு வழி வகுக்கலாம் என்பதனை தெளிவான செய்தியாக வழங்குகின்றன. நாமும் இயேசு காட்டிய வழியைப் பின்பற்றி தாழ்ச்சியுளவர்களாகவும், இறைப்பற்று கலந்த அச்சமுடையவர்களாகவும், இறைவனையே நம்பி வாழும் மக்களாகவும் இருந்து செயற்பட வரம் கேட்டு நம்மை அர்ப்பணித்தவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

அன்புக்குரியவர்களே,

திருவிவிலியத்தின் அனைத்து புத்தகங்களிலும், அனைத்துப் பக்கங்களிலும், ஏன் அனைத்து எழுத்துக்களிலும் நாம் காணக்கூடிய ஒன்று இறைவனின் மாறாத அன்பு. இறைவன் தாம் தேர்ந்தெடுத்த மக்கள் மீது கொண்ட பேரன்பால், அவர்கள் மீண்டும் மீண்டும் பாவத்தில் வீழ்ந்தாலும் அவர்கள்மேல் பரிவிரக்கம் காட்டி அவர்களின் தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன், அவர்களின் பாவங்களை நான் நினைவுகூறமாட்டேன்  என்பதை இறைவாக்கினர் எரேமியா மூலம் கூறுகின்றார் நமக்கும் இதே உறுதியினை அளிக்கின்றார் என்ற உள்ளுணர்வுடன் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

புதிய உடன்படிக்கை செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34

இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் `ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தரமாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூரமாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
திருப்பாடல் 51: 1-2. 10-11. 12-13

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அன்புக்குரியவர்களே,

துன்பம் இறைவனிடம் வந்தடைவதற்கான, இறைவனிடம் நெருங்கி வருவதற்கான கருவி என்று அருளாளர் இரண்டாம் ஜான் பால் கூறியுள்ளார். நாமும் துன்பம் இறைவனிடம் வருவதற்கான கருவி என்பதை உணர்ந்து, இறைத்திட்டத்திற்கு கீழ்ப்படிந்து துன்பத்தை ஏற்று மீட்படைய அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்,' என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33

அக்காலத்தில் வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ``ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்'' என்றார். மேலும் இயேசு, ``இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? `தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்' என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்'' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ``மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்'' என்று ஒலித்தது. அங்குக் கூட்டமாய் நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ``அது இடிமுழக்கம்'' என்றனர். வேறு சிலர், ``அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு'' என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்'' என்றார். தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்: உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

பணியாளரைப் பலப்படுத்தம் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்கும் உமது வழிகளைக் கற்பித்து, தூயதோர் உள்ளத்தை அவர்களுக்குள்ளே படைத்து: உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை அவர்களிடம் உருவாக்கி, இயேசுவைப் போல் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, மகிழ்ச்சியூட்டும் இறையரசைக் கட்டியெழுப்ப வேண்டிய அருளை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாவங்களை நினைவு கூராத தந்தையே இறைவா!

நாங்கள் ஒவ்வொரும் இத் தவக்காலத்தில் இறைப்பற்றுக் கலந்த அச்சம் கொண்டவர்களாகவும், தாழ்ச்சியுள்ளவர்களாளவும், உமக்குத் தொண்டு செய்வதில் ஆர்வமுள்ளவர்களாகவும் வாழவும், நாங்கள் ஒவ்வொரும் இத் தவக்காலத்தில் உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டு, அடுத்தவரின் நல் வாழ்விற்காக எம்மையே அர்ப்பணித்து, உமக்கேற்ற அர்த்தமுள்ள வாழ்வு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைககைக் கொண்டுள்ள தந்தையே இறைவா!

நாங்கள் ஒவ்வொரும் இத் தவக்காலத்தில் எம் கிறிஸ்தவ வாழ்வின் தன்மையை உணர்ந்து எந்நாளும் நிலைத்திருக்கும் உமது நெறிமுறைகளின் பொருளை சரியான முறையிலே விளங்கிக் கொண்டு, அவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து வாழும் வரத்தை அளித்திடவும், கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும், மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். மக்களை வாட்டி வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று, அவர்கள் சுகமடையவும், அவர்களுடைய வேதனைகளைத் தணித்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள் வாழ்வை அள்ளி வழங்கும் இறைவா!

இன்றைய நாளில் இறைவார்த்தை யூடாக எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும், விருப்பத்தையும் , சித்தத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு, உமது வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, தீமைகளை விட்டுவிட்டு மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு ஆதரவளிக்கும் இறைவா!

கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும், மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். மக்களை வாட்டி வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று, அவர்கள் சுகமடையவும், அவர்களுடைய வேதனைகளைத் தணித்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கை அருள்பவராம் இறைவா,

பாவத்தை வெறுத்து புண்ணிய வாழ்வைப்பற்றி சிந்திக்கும் இத்தவக்காலத்தில், புனிதம் நிறைந்த வாழ்வுக்கு எம்மை இட்டுச் செல்லக்கூடிய வழிகளை கண்டுபிடித்து, பாவச் சார்பினை எம்மிடமிருந்து அகற்ற வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (யோவான் 12:24)

மண்ணில் விழுந்து மடிந்து அதன் வழியாக மிகுந்த பலன் தருகின்ற கோதுமை பற்றிய குறிப்பு கிரேக்க சமய சிந்தனையிலும் காணக்கிடக்கிறது. தூய பவுல் பயன்படுத்துகின்ற ஓர் உவமையும் இவண் கருதத் தக்கது. ''நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது...அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்றெழுகிறது'' (1 கொரி 15:36,42) என்னும் பவுலின் கூற்றில் இவ்வுலகு சார்ந்தது மறைந்து, மறுவுலகு சார்ந்தது தோன்றும் என்னும் உண்மை வெளிப்படுகிறது. இம்மண்ணுலகு சார்ந்த நம் உயிர் ஒருநாள் மறைந்துபோகும்; ஆனால் ஒருநாளும் அழியாத வாழ்வு நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் உலகு சார்ந்த உயிரை விடாது பிடித்துக்கொள்ள நினைக்காமல், நிலைவாழ்வின் பொருட்டு அதை விட்டுவிடத் தயங்கலாகாது என இயேசு கற்பிக்கிறார் (யோவா 12:25). -- கிறிஸ்தவ மரபில் ஆழ வேரூயன்றிய உண்மை இது: ''தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்'' (மாற் 8:35). இவ்வாறு இயேசு கற்பித்த உண்மையை மத்தேயு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்களும் குறித்துள்ளனர் (காண்க: மத் 16:25; லூக் 9: 24; மேலும், மத் 10:39; லூக் 17:33). இயேசு வழங்குகின்ற இப்போதனை நமக்கு ஒரு முரண்பாடாகப் படலாம். ஆனால் அவர் இரண்டு வேறுபட்ட நிலைகள் பற்றிப் பேசுகிறார். முதல் நிலை உலகு சார்ந்தது; இரண்டாம் நிலை விண்ணகம் சார்ந்தது. கடவுள் நமக்கு வழங்கியுள்ள உயிரைப் பேணி, பாதுகாப்பது நம் பொறுப்பு; இயல்பாகவே நாம் நம் உயிரைக் காத்திட முனைகிறோம். இவ்வாறு செய்யும்போது அதற்கு நேர் எதிரான விளைவுதான் ஏற்படுகிறது என இயேசு கூறுகிறார். இதற்கு மாறாக, யார் தம் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல் அதை ''இழப்பதற்கும்'' தயங்காதிருக்கிறார்களோ அவர்கள் உண்மையிலேயே வாழ்வின் பொருளைக் கண்டுகொள்கிறார்கள். இது நம் அறிவுக்கு முற்றிலும் எட்டாத ஓர் உண்மையாகவே இருக்கிறது. ஆனால் இயேசுவின் சீடராக வாழ விரும்புவோர் இயேசுவின் வாழ்விலிருந்து இந்த உண்மையின் பொருளைக் கற்றுக் கொள்கிறார்கள். இயேசு எருசலேமை நோக்கிச் செல்கிறார். அங்கே அவர் தம் உயிரைக் கையளிப்பார். அவ்வாறு அவர் தம் உயிரை ''இழக்கும்'' போது நமக்கு அவர் ''வாழ்வு தருகிறார்''. இயேசுவின் சீடரும் அவர் காட்டிய வழியில் நடந்து நிலைவாழ்வைப் பெற்றிட அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, நிலை வாழ்வைப் பெற்றிட அனைத்தையும் இழக்கவும் நாங்கள் முன்வர அருள்தாரும்.