பொதுக்காலத்தின் 27ஆம் ஞாயிறு


திருவழிப்பாட்டு ஆண்டு A (05-10-2014)

நிலக்கிழார் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்டத்தைக் 
குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்/> நிலக்கிழார் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்டத்தைக் 
குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்/> நிலக்கிழார் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்டத்தைக் 
குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்/> நிலக்கிழார் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்டத்தைக் 
குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்/> நிலக்கிழார் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்டத்தைக் 
குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்/>


திருப்பலி முன்னுரை

இறையேசுவில் பிரியமுள்ள இறைத்தந்தைக்கும், இறைச்சமுகத்திற்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்; இனிய வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருவழிபாட்டிற்கு அன்போடு அழைக்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் 27ஆம் ஞாயிறை நம் தாயாம் திருச்சபையோடு கொண்டாடுகின்றோம்.

இயேசு சொன்ன நிலக்கிழார் பற்றிய உவமையை இன்றைய நற்செய்தி வாசகமாகத் தியானிக்கிறோம். இந்த வாழ்வு கடவுள் கொடுத்தது. ஆனால், இந்த வாழ்வை எப்படி வாழ்வது? என்பது நம்மைப்பொறுத்தது. கடவுள் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக்கொடுக்கிறார். அந்த சுதந்திரத்தை பொறுப்போடு பயன்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். இன்றைய உலகில் கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை நாம் பலவழிகளில் தவறாக, முறைகேடாகப் பயன்படுத்துகிறோம். அதை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற முயற்சி எடுப்போம். ''உரிய காலத்தில்'' கனி வழங்கும் பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளதால் அப்பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினால் நாம் திராட்சைத் தோட்ட உரிமையாளராகிய கடவுளின் ஆட்சியில் பங்கேற்கும் அருளைக் கடவுளே நமக்குத் தருவார். வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் இணைவோம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

திராட்சைத் தோட்டத்தை நன்கு பராமரித்த உரிமையாளர், நல்ல திராட்சைக் கனிகள் கிட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்; ஆனால் சுவையான கனிகளைத் தருவதற்குப் பதிலாக அத்தோட்டம் கசப்பான காட்டுப் பழங்களையே ஈந்தது. எனவே, உடைமையாளர் தம் தோட்டத்தை அழித்துவிட முடிவுசெய்கிறார் என்று இன்றைய முதல் வாசத்தின் வழியாக நல்ல கனிதரும் திராட்சைக் கொடியாய் வாழ கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கிறார், கடவுளின் அழைப்பைக் கண்முன் நிறுத்தி நல்ல கனியினை தரவும், கனிவாய் வாழவும் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

(அல்லது)

நம்மை நன்கு பராமரித்து, பாதுகாக்கும் இறைவன் நம்மிடமிருந்து, அன்பு, இரக்கம், கீழ்ப்படிதல், சாந்தகுணம், பிறரை மன்னித்தல், நீதி செயல்களை செய்தல், தாழ்ச்சி போன்ற கனிகளையே எதிர்பார்க்கிறார். நமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளையும், வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி இறைவனுக்கு ஏற்ற இக்கனிகளை தர வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 5: 1-

என் நண்பரைக் குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன். செழுமைமிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக் கொத்திக் கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைக் கொடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்; மாறாக, காட்டுப் பழங்களையே அது தந்தது. இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன? என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்: ``நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும். நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப் படுவதுமில்லை; நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.'' படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே; அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.
திருப்பாடல் 80: 8,11. 12-13. 14-15. 18-19

எகிப்தினின்று திராட்சைக் கொடி ஒன்றைக் கொண்டு வந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர். 11 அதன் கொடிகள் கடல் வரையும் அதன் தளிர்கள் பேராறு வரையும் பரவின. பல்லவி

12 பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச் செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! 13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன. பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்ந்த மகவைக் காத்தருளும்! பல்லவி

18 இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். 19 படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் பெற்றுக் கொண்ட விசுவாசத்திற்கேற்ப கிறிஸ்துவுக்கு சாட்சி பகிர்கின்ற வாழ்க்கை வாழ, இறைவனின் திராட்சைக் கொடியாகிய நாம் மிகுந்த நல்ல கனிதந்து செழித்தோங்க, உண்மையானவற்றை, கண்ணியமானவற்றை, நேர்மையானவற்றை, தூய்மையானவற்றை, பாராட்டுதற்குரியவற்றை, நற்பண்புடையவற்றை, போற்றுதற்குரியவற்றை பற்றிப் பிடிக்க வேண்டும் என்று புனித பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுரைத்துவதை கேட்போம்

(அல்லது)

மனித உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் குடிகொண்டால் அவை நல்ல சொற்களாகவும் நலமான உணர்வுகளாகவும் பயன்தரும் செயல்களாகவும் வெளிப்படும் என்று இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. கடவுள் வழங்குகின்ற அமைதி நம் உள்ளத்தில் குடிகொள்ள வேண்டும் என்றால் நாம் இறை உறவில் இணைந்திருக்கவேண்டும்; இறைவேண்டல் வழியாக இந்த அன்புப் பிணைப்பு வலுவடையும்; கடவுளோடும் மனிதரோடும் நல்லுறவுகொண்டு வாழ வேண்டும் என்றால் நம்மிடம் உண்மை, கண்ணியம், நேர்மை, தூய்மை ஆகிய நற்பண்புகள் வேரூன்றி உறுதிப்பட வேண்டும் என்று அறிவுரைத்தும் இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-9

சகோதரர் சகோதரிகளே, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். இறுதியாக, சகோதரர் சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்கு உரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43

அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: ``மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவுக் குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேரவேண்டிய பழங்கiளைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களை விட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், `இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?'' என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், ``அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' என்றார்கள். இயேசு அவர்களிடம், `` `கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நல் வழியைக் கற்பித்து, நேரிய வழியில் நடாத்தும் அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையை அவர்களும் கொண்டு, தமது பணிப்பொறுப்புக்களில் பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கனிகளைத் தேடும் தலைவரான இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களிடம் எதிர்பார்க்கும் நற்செயல்கள் என்னும் கனிகளை நாள்தோறும் வழங்க எங்களுக்கு அருள்தாரும்! உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாகிய நாங்கள் உம்மைப் புறக்கணித்து, நன்றியற்ற வகையில் வாழ்வதற்காக வருந்துகிறோம். மன்னியும். அன்றாடம் நீர் தரும் செய்திகளை, அழைப்புகளை ஏற்று செவிசாய்த்து வாழ உமது ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தந்தையாகிய தந்தையே!

துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உன்னதரான தந்தையே இறைவா!

மக்கள் அனைவரும் தீமைக்கும், தீயவர்களுக்கும், அநீதிக்கும், வன்முறைக்கும் துணைபோகின்ற மனநிலையை விட்டொழித்து: உமது குரலுக்குச் செவிசாய்த்து நீர் காட்டும் வழியைப் பின்பற்றி உலக அமைதிக்காக உழைக்கின்ற மன நிலையை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம்மை நேரிய வழியில் நடாத்தும் தந்தையே!

எங்களுக்குக் கொடைகள் பல அளித்த உமக்கு நாங்கள் எப்போதும் நன்றியறிந்திருக்கச் செய்தருளும். நாங்கள் ஒவ்வொருவரும் இயேசுவைப் போல பெருமைக்குரிய அத்தனையும் துறந்து, எம்மையே தாழ்த்தி, தந்தைக்குப் பணிந்து பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

கொடிய தொழிலாளர்கள்!

கொடிய குத்தகைதாரர் உவமை என்று அழைக்கப்படும் இந்த உவமை வழியாக இயேசு தம்மை ஏற்க மறுத்த பரிசேயர்கள், குருக்கள் மற்றும் ய+தர்களின் நிலையை எடுத்துரைக்கிறார். உவமையில் வருகின்ற தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக வகையில் செயல்பட்டுள்ளனர் என்;பது கண்கூடு. அவர்களுடைய அறியாமை அவர்களை நிலக்கிழாருக்கெதிராக சதி செய்யத் துhண்டுகிறது. அவர்களின் நன்றியற்ற தன்மை நிலக்கிழாரின் மகனையே கொல்லத்துணிகிற அளவுக்கு அவர்களின் பார்வையைப் பறிக்கிறது. இறுதியில், அவர்கள் தண்டனை பெறுகிறார்கள்.

இந்த உவமையை நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் யார்? நாம்தான் அந்த கொடிய தொழிலாளர்கள். இறைவன் நமக்கு விடுக்கின்ற பல்வேறு செய்திகளையும், செய்தியாளர்களையும் நாம் புறக்கணிக்கிறோம். இறைத் திருவுளத்துக்கு எதிராக நடக்கிறோம். இறைவார்த்தையைப் புறக்கணிக்கிறோம். நன்றியற்ற முறையில் வாழ்கிறோம். இறைவனைப் புறக்கணிக்கிறோம். அதன் விளைவாக நிறைவாழ்வை இழக்கவிருக்கிறோம். இன்றே நாம் இதை உணர்ந்துகொள்வோமா?

மன்றாட்டு:

நிறைவின் நாயகனே இறைவா, உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாகிய நாங்கள் உம்மைப் புறக்கணித்து, நன்றியற்ற வகையில் வாழ்வதற்காக வருந்துகிறோம். மன்னியும். அன்றாடம் நீர் தரும் செய்திகளை, அழைப்புகளை ஏற்று செவிசாய்த்து வாழ உமது ஞானத்தைத் தாரும்.