யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)
பொதுக்காலம் இருபத்திநான்றாம் ஞாயிறுதிருவழிப்பாட்டு ஆண்டு A (14-09-2014)திருப்பலி முன்னுரை
இறையேசுவில் பிரியமுள்ள இறைத்தந்தைக்கும்,
இறைச்சமுகத்திற்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்; இனிய வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருவழிபாட்டிற்கு அன்போடு அழைக்கிறோம்.
இன்று நாம் பொதுக்காலத்தின் இருபத்திநான்காம் ஞாயிறை நம் தாயாம் திருச்சபையோடு கொண்டாடுகின்றோம். அத்தோடு,
நம் ஆண்டவரின் திருச் சிலுவையின் மகிமை விழாத் திருப்பலியையும் கொண்டாடுகின்றோம். முதல் வாசகம்கொள்ளிவாய்ப் பாம்பைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்.எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9 அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேல் மக்கள் `செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: ``இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது'' என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, ``நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்'' என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், ``கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்'' என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.திருப்பாடல் 78: 1-2. 34-35. 36-37. 38 (
என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். 2 நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். பல்லவி
இரண்டாம் வாசகம்இயேசு தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11 சகோதரர் சகோதரிகளே, கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலிஅல்லேலூயா, அல்லேலூயா!கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரேஅல்லேலூயாநற்செய்தி வாசகம்யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.'' - இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர்| என எல்லா நாவுமே அறிக்கையிடும். பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும். பணியாளருக்குத் துணையாய் இருக்கும் தந்தையே இறைவா!எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள்,அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: இயேசு கொண்டிருந்த மன நிலையை அவர்களும் கொண்டிருந்து மக்கள் மேல் அன்பும், கரிசனையும் கொண்டவர்களாக, இக்காலத்தில் தங்களின் சேவை எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டு வாழ அவர்களுக்கு தேவையான ஞான வெளிச்சத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.உமது கீழ்ப்படிதலால் சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்ட இறைவா,உம்மைப் போற்றுகிறோம். உமது சிலுவையால் எங்களை மீட்டுக்கொண்டதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் வாழ்வின் சிலுவைகளை உற்றுப்பார்த்து, அவற்றில் இறைத்திருவுளத்திற்குப் பணிந்து வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.இரக்கத்தின் ஊற்றே இறைவா!எம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உலகத்தின் மாயக் கவர்ச்சிகளில் தங்கள் உள்ளத்தையும், உடலையும் பறிகொடுக்காது, தமது இதயத்தை உமக்காக மாத்திரமே கொடுத்து, உம்முடைய வாழ்வுதரும் வார்த்தைகளை தம் இதயத்தில் சுமந்து உம்மைப் பின் பற்றி நிறைவடையும் நல்லுள்ளத்தை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.எங்கள் தந்தையாகிய தந்தையே!துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.உன்னதரான தந்தையே இறைவா!மக்கள் அனைவரும் தீமைக்கும், தீயவர்களுக்கும், அநீதிக்கும், வன்முறைக்கும் துணைபோகின்ற மனநிலையை விட்டொழித்து: உமது குரலுக்குச் செவிசாய்த்து நீர் காட்டும் வழியைப் பின்பற்றி உலக அமைதிக்காக உழைக்கின்ற மன நிலையை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.சிலுவை வழியாக மீட்பு தந்த இயேசுவே,உம்மைப் போற்றுகிறேன். துன்பத்தின், அவமானத்தின் சின்னமான சிலுவையை, மீட்பின், மாட்சியின் அடையாளமாக மாற்றினீரே. இந்த சிலுவைக்காக உமக்கு நன்றி. எனது வாழ்விலும் சிலுவை என நான் கருதும் அனைத்தையும், உம்மோடு சுமந்து, உமது வெற்றியிலும், மாட்சியிலும் நானும் பங்கு பெற ஆற்றல் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். |
இன்றைய சிந்தனை
''பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்.
அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்'' (யோவான் 3:14)
மன்றாட்டு:இறைவா, உயர்நிலையை அடைய வேண்டும் என்றால் நாங்களும் சிலுவையில் உயர்த்தப்பட வேண்டும் என உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும். |