திருவழிப்பாட்டு ஆண்டு A (08-06-2014)

தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்/> தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்/> தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்/> தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்/> தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்/> தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்/> தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்/>


திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே! சிறார்களே! இளைய உள்ளங்களே! சகோதர சகோதரியரே! நம்மை தாங்கியிருக்கின்ற திருச்சபையின் பிறப்பு விழாவை கொண்டாட ஒரே சமூகமாக நாம் கூடி வந்திருக்கின்றோம். உயிரற்ற மனநிலையோடு உடைந்துபோன கனவுகளோடு இருந்த அன்பு திருத்தூதர்கள் தூய ஆவியினால் உறுதிபடுத்தப்பட்டு புதிய திருச்சபையின் புதிய பாதையில் தைரியத்தோடு நம்பிக்கையோடு சென்றதுபோல நம்மில் இருக்கும் பல்வேறு உயிரற்ற நிலைகளை இன்று தூய ஆவியானவர் நெருப்பினால் எரித்து நம்மை உறுதிபடுத்தி புதுப்பிப்பாராக.

இன்று தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாடுகின்றோம். இத்தினத்தில் நாம் தூய ஆவியாரின் வரங்கள், கனிகள், கொடைகள் ஆகியவற்றைப் பெறவும், இறைவனுக்கு நன்றி செலுத்தவும் ஒன்று கூடியுள்ளோம். ஆண்டவரின் ஆவியார் உள்ள இடத்திலும், இதயத்திலும் விடுதலையும், மகிழ்ச்சியும் உண்டு. ஆண்டவரின் ஆவியாரை இதயத்தில் இருக்க வைத்து இயங்குபவர்களின் வாழ்வில் வல்லமை இருக்கும், அன்பு இருக்கும், அரும் பெரும் செயல்கள் நடைபெறும். ஏனெனில் தூய ஆவியார் நம்மையெல்லாம் நிறை உண்மையை நோக்கி வழி நடாத்துகின்றார். ஆகவே நாம் அனைவரும் தூய ஆவியாரின் அசைவுகளுக்கு இசைந்து கொடுப்போம், அவர் அருளும் புதியதும், புனிதமானதுமான இயல்புகளை அணிந்து கொள்வோம். இறைவனின் சாட்சிகளாய் வாழ இத் திருப்பலி வழியாக நம்மை அர்ப்பணிப்போம்.



முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11
நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லோரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி? " என வியந்தனர். பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேகியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! "என்றனர்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
திருப்பாடல்04: 1,24. 29-30. 31,34

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! 24யஉ ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி

29 நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.
திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3-7, 12-13

சகோதரர், சகோதரிகளே! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்: இவ்வுலகில் மட்டும் அல்ல: வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோயிருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-23

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! " என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் " என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்: நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: நிறை உண்மையை நோக்கி வழிநடாத்தும் தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, அவர்கள் ஆன்மிக வல்லமையும், ஆற்றலும் மிக்கவர்களாயும், மக்களை நிறை உண்மையை நோக்கி வழிநடாத்துபவர்களாகவும் செயற்பட வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

எங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருகின்றவரும்: நீர் கூறிய அனைத்தையும் எங்களுக்கு நினைவூட்டுகின்றவருமான தூய ஆவியாராம் துணையாரை எங்களுக்குத் தரும் நல்ல தந்தையே!

உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் நீர் கற்றுத் தரும் அனைத்தையும் முழுமையாகக் கடைப்பிடித்து, தூய ஆவியாரின் அசைவுகளுக்கு இசைந்து கொடுத்து, அவர் அருளும் புதியதும், புனிதமானதுமான இயல்புகளை அணிந்து கொண்டு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றா டுகின்றோம்.

உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா!

பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மனநலமும் பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர் மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆன்மாக்களின் ஆயரும், கண்காணிப்பாளருமான தந்தையே இறைவா!

எமது இளைஞர், இளம் பெண்களை நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் நெறிகெட்ட தலைமுறையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொண்டு உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு பிளவுபட்டுக் கிடக்கும் அத்தனை சபைகளும் ஒன்று சேர்ந்து உமது சாட்சிகளாய் மாறும் ஒரு உன்னத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்".

நீங்கள் தூய ஆவியால் எப்பொழுதும் நிரப்பப்பட்டிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது மிக அவசியம். ஏனென்றால் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி மிக அவசியம். மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையை நீங்கள் விரும்பமாட்டிP;ர்கள். யார்தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறார்களோ அவர்களிடம் இந்த மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். இறைவனின் தூய ஆவி படைக்கும் ஆற்றலுடையது. நீர்த்திரள் மேல் அசைந்தாடிய கடவுளின் ஆவி உலகைப் படைத்ததைத் தொடக்க நூலில் படிக்கிறோம். மண்ணால் மனிதனை உருவாக்கி உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைத்ததும் ஆவியின் செயலே.பாவத்தில் வாழ்விழந்த மனிதனின் பாவங்களை மன்னித்து மகிழச்சி நிறைந்த மனித வாழ்வைக் கொடுப்பதும் ஒரு புது படைப்பு அல்லவா.

பாவமன்னிப்பு பெறும் மனிதர்கள் தூய ஆவியால் நிரப்பப்படுகிறார்கள். அவர்கள் புதுப்படைப்பாக மாறுகிறார்கள். பாவம் அவர்களிடம் இல்லை. எனவே மனதில் ஒரு தெய்வீக அமைதி குடிகொள்கிறது. இதயத்தில் இனம்புரியாத நிறை மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. பாவ மன்னிப்பு பெற்று தூய ஆவியால் நிறைந்திருப்போர் வாழ்வில் என்னதான் தடையிருந்தாலும் எப்படித்தான் நான்கு சுவர்களுக்கும் பூட்டி வைத்தாலும் கொடுக்கும் உங்கள் தெய்வம் கூரையை கிழித்து உங்களுக்கு தன் கொடையாம் மகிழ்ச்சியை, அமைதியை, செல்வத்தை குறையின்றி வழங்குவார்.

உயிர்த்த இயேசு இதையே இன்றைய வாசகத்தில் தன் சீடர்கள்மேல் ஊதி, தூய ஆவியை வழங்கி, பாவமன்னிப்பைக் கொடுத்து அமைதியும் மகிழ்ச்சியும் வாக்களிக்கிறார். நீங்களும் பெற்று மகிழுங்கள். இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் நீர் கற்றுத்தரும் அனைத்தையும் முழுமையாகக் கடைப்பிடித்து, தூய ஆவியாரின் அசைவுகளுக்கு இசைந்து கொடுத்து, அவர் அருளும் புதியதும், புனிதமானதுமான இயல்புகளை அணிந்து கொண்டு வாழ அருள்தாரும்.