மூன்றாம் ஆண்டு 01-01-2013
அன்னை கன்னிமரி - இறைவனின் தாய் - புத்தாண்டுப்பெருவிழா
இறைவன் நமக்குக் கொடுத்த இப்புதிய ஆண்டிற்காக நன்றி சொல்லுவோம்.
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
திருப்பலி முன்னுரை
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
இறைத் திருமகன் இயேசுவின் இனிய ப்ரியமுள்ள அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) மற்றும் இறைமக்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறி இன்று தொடங்கும் இந்தப் புதிய ஆண்டில் நலமும் வளமும் பெருகி இறை ஆசீரை நிறைவாகப் பெற்றுவாழ வாழ்த்துகிறேன்.
இன்று நாம் அனைவரும் பெரும் மகிழ்வோடும், புதிய எதிர்பார்ப்புக்களோடும் புதுவருடத் திருப்பலியில் பங்கேற்க ஒன்று கூடி நிற்கின்றோம்.
இன்று அன்னையாம் திருச்சபை அன்னை மரியாள் இவைனின் தாய் என்ற விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றது.
அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! பிறந்திருக்கும் இப்புத்தாண்லே அன்னை மரியாளின் தியாகத்தையும் அன்பையும் விசுவாச அர்ப்பணிப்பையும்
நம்முடைய இல்லத்தில் செயல்படுத்துகின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம்.
சிறப்பாக நிறைவான சமாதானமாகிய இயேசுவை நமக்குத் தந்த அன்னை மரியாளை நினைந்து:
அந்த அமைதியின் அன்னையின் பரிந்துரையை நாம் கேட்டுச் செபிக்கின்றோம்.
அமைதிக்காக ஏங்கித் தவிக்கும் இன்றைய உலகிற்கு அமைதியின் அரசியான அன்னை
முழுமையானதும், நிறைவானதுமான அமைதியை மரியாள் பெற்றுத்தருவாராக.
இறைவன் நமக்குக் கொடுத்த இப்புதிய ஆண்டிற்காக நன்றி சொல்லுவோம்.
நமது மண்ணிற்கும், மக்களுக்கும்: புதிய வாழ்வும், விடுதலையும் கிடைக்க அருள் வேண்டுவோம்.
புலர்ந்திருக்கும் இப்புதிய ஆண்டிலே நாம் புதிய இறைமக்கள் சமுதாயமாக மாற்றம் பெற்று நமது
குடும்பத்திலும், நாம் வாழுகின்ற சூழலிலும்: உப்பாகவும், ஒளியாகவும், புளிக்காரமாகவும் வாழ முற்படுவதோடு:
அயலவரோடு நம் உறவுகளையும் பசுமைப்படுத்திக்கொள்ள,
இப்புத்தாண்டு நம்மையும் அன்னை மரியாவைப் போலவே இறைத்திருவுளத்தை நிறைவேற்றி நம்
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் இறைமகனைப் பெற்றெடுக்கும் தாயாகவரம் கேட்டு திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27
22 ஆண்டவர் மோசேயிடம் கூறியது;
23 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை;
24 "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
25 ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
26 ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!"
27 இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
திபா 67: 1-2. 4. 5,7
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
பல்லவி
1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர்.
பல்லவி
4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.
பல்லவி
5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக.
பல்லவி
இரண்டாம் வாசகம்
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7
4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு
5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
6 நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்;
அந்த ஆவி "அப்பா, தந்தையே " எனக் கூப்பிடுகிறது.
7 ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக
நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நற்செய்திக்கு முன் வசனம்
விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21
16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள்.
17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.
18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.
19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இறைமக்களின் வேண்டல்கள்:
பரிசுத்த ஆவியினால் திருழுழுக்குப் பெற்ற ஒவ்வொரு மனிதரும் பெற்ற வாழ்வை பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உள்ளத்தில் அடைத்து வைப்பதற்காக தூய ஆவியானவர் தரப்படவில்லை. பிரபஞ்சம் ழுழவதும் நம்மை பகிர்ந்து கொடுப்பதற்காகவே அவர் தரப்பட்டிருக்கிறார்.
அசைந்தாடும் ஆவியானவர் பிறர் அன்புச் செயல்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
எல்லாம் வல்ல இறைவா,
எம்திருத்தந்தை 16 ஆம் ஆசிர்வாதப்பரையும், எம் ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். நற்செய்தியை அறிவிப்பதே எனது கடமை என்பதை உணர்ந்து செயல்பட
தேவையான தூய ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா,
உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.
இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். நாங்கள் தொடங்க விரும்பும் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க
உமது ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!
நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர்,
அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும்,
இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்புத் தந்தையே இறைவா!
நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும்,
உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும்,
கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை
ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!
பல்வேறு காரணங்களால் இன்றைய இத்திருப்பலியில் பங்குகொள்ள முடியாதிருப்போர்,
நோயுற்றிருப்போர், வேதனைகளுக்குள் வாழ்வோர், சிறையிலிருப்போர், பணயக் கைதிகளாயிருப்போர்
அனைவரும் நீர் கொடுக்கும் மகிழ்ச்சியைப் பெற்று மகிழ அருள் கூர்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!
எங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும். இந்த நவீன உலகில் எங்களது நம்பிக்கையானது குறைந்து கொண்டே செல்கிறது.
எங்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் நாங்கள் உம்மையே சார்ந்து,
உம்மேல் முழுநம்பிக்கையுடன் வாழ நீர் தான் உறுதணையாய் இருக்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆற்றலின் அன்பு தகப்பனே இறைவா!
எங்கள் உள்ளத்தைப் புதுப்பித்து உம் வழியில் எங்களை நடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
சிந்தனை
அன்னையின் ஆசியோடு! - புதிய ஆண்டில் புதிய நம்பிக்கைகள் !
இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா.
நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு.
எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!
இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம் மேற்கொண்டால் என்ன?
குறிப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும் பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது.
எடுத்துக்காட்டாக, நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3 திருப்பாடல்களை செபிப்பது,
அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது, அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல் இருப்பது
என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்து தொடங்கினால் என்ன?
நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன.
உளவியலாளர்கள் சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால்
அது பழக்கமாக மாறிவிடும் என்று.
ஆம், 21 நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ தேவைப்படும் நாள்கள்.
இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள் தொடர்ந்து கடைப்பிடித்து,
நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு வழங்குவார்.
மன்றாடுவோம்:
அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.
இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். நாங்கள் தொடங்க விரும்பும் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க
உமது ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
|