அருளின் விநாடிகள் - 2026-01-14
Downloadஇன்றைய இறைவாக்குத் துகள் – 2026-01-14
இன்றைய சிறிய வழிச் செபம் – மனமாற்றம்
மனமாற்றத்திற்கு அழைக்கும் இறைவா, இன்று மனமாற்றம் பெற தகுதியாக்கிடும் ஆமென்
இன்றைய துதி – 2026-01-14
இணைந்து செபிப்போம் – 2026-01-14
ஆண்டவரே இயேசுவே,
சீயோனில் குடியிருப்பவரே! உம்மை ஆராதிக்கின்றேன். உமது பெயரை அறிந்தோரைப் பாதுகாப்பவரே! உம்மைப் புகழ்கின்றேன். துன்ப நேரங்களில் என்னைக் கைவிடாத தெய்வமே! உமக்கு நன்றி கூறுகின்றேன். “சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை. சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டுவிட்டார்” என்று, இன்றைய இறைவார்தையில் நீர் சாமுவேலை அழைத்ததை வாசிக்கின்றேன். இயேசுவே! உமது குரலைக் கேட்க உம்மைக் கண்டுகொள்ள என் காதுகளையும், என் கண்களையும் திறந்தருளும். அப்பா தந்தையே! பல தடவைகளில் என் பிடிவாதங்களாலும், உலக காரியங்களாலும் உம்மை அறிய சந்தர்ப்பம் இருந்தும், உம்மை உணராத நிலைகளை எண்ணி மனம் வருந்துகின்றேன். “ஆண்டவர் அன்மையில் உள்ள போதே அவரை பற்றிக்கொள்” என்று கற்பித்தவரே! என் இளமையில் உம்மை அதிகமாய்த் தேடி உம்மில் என்றும் நிலைத்து பரிசுத்தமாய் வளரவும், என் குற்றங்களை என்னிடம் இருந்து அகற்றவும் வரம் தாரும். ஆண்டவரே இயேசுவே! இந்த நாளை ஆசிர்வதியும். உமது குரலைக் கேட்க கிருபை தாரும். “நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு” என்ற உமது திரு வார்தையின் படி வாழ அருள் தர வேண்டும் என்று இயேசுவின் பரிசுத்த நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்