நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 3வது வாரம் திங்கள்கிழமை
2024-03-19



ஆண்டவரே இயேசுவே,
தெய்வங்களுக்கு எல்லாம் இறைவனே! உம்மைத் துதிக்கின்றேன். தூயவர் குழுவில் அஞ்சுதற்குரிய தெய்வமே! உம்மை வணங்குகின்றேன். தலைமுறை தலைமுறையாக உமது நீதியின் புயத்தால் தாங்கி வழிநடத்துபவரே! நன்றி கூறுகின்றேன். “என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!” என்று, இன்றைய இறைவார்த்தையின் மூலமாக மிகப்பெரிய ஆசீர்வாதத்தை வாக்குத் தந்ததற்காக நன்றி கூறுகின்றேன். நான் செய்த பாவங்களின் பொருட்டு துன்பங்கள் என்னை சூழ்ந்த வேளையில், நான் பாவத்தை உணராதவனாக, மன்னிப்புக் கேட்காதவனாக, உம்மை வெறுத்து மறுதலித்த சந்தர்ப்பங்களை நினைத்து மன்னிப்புக் கேட்கின்றேன். மன்னியும் தந்தையே. “நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்” என்றவரே! என் தந்தையாக, அன்னையாக இருந்து தவறு செய்யும்போது என்னைத் தண்டித்துத் திருத்தும். என் ஆன்மா என்றும் படுகுழியில் விழுந்து விடாமல் உமது வல்லமையான கரத்தால் தாங்கிடும். ஆண்டவரே இயேசுவே! இன்றைய நாளில் என்னை ஆசீர்வதியும். என் குடும்பத்தை ஆசீர்வதியும். புனித யோசேப்பு மரியாவின் கணவர் என்ற கடன்திருநாளை நினைவு கூரும் இவ்வேளையில், திருக்குடும்பத்தில் விளங்கிய நற்பண்புகளால் தங்கள் குடும்பங்களை உமக்குள்ளாக வளர்க்கும் ஆற்றல் அனைத்தையும் குடும்பத் தலைவர்களுக்குக் கொடுத்தருளும். ஆண்டவரே இயேசுவே! உமது முகத்தின் ஒளியில் நான் நடந்திடவும், உமது நாமத்தில் என் குடும்பம் களிகூரவும்; தீய கட்டுக்கள் உடைக்கப்பட்டு, நல்விடுதலையை என் வாழ்வில் கண்டிடவும் அருள் தர வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்

கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கொண்டவர்களுக்கு வாக்களியுங்கள்!



எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு வாக்களிக்க ஐரோப்பிய மக்கள் தயாராகி வரும் வேளை, கிறிஸ்தவ விழுமியங்களையும் ஐரோப்பியத் திட்டங்களையும் நிலைநிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு குடிமக்களுக்கு அறிக்கையொன்றில் அழைப்பு விடுத்துள்ளனர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர்கள்.
இன்று, ஐரோப்பாவும்... [2024-03-14 22:54:50]



கடந்த 5 ஆண்டுகளில் கிழக்கிற்கான ஆயுத ஏற்றுமதி அதிகரித்துள்ளது



கடந்த ஐந்தாண்டுகளில் உலகில் இடம்பெற்றுவரும் ஆயுத பரிமாற்றங்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ள ஸ்வீடனின் SIPRI அமைப்பு, ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது. ஆசியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கியதில் கடந்த 25 ஆண்டுகளிலேயே அமெரிக்க ஐக்கிய நாடு... [2024-03-14 22:49:27]



மலேசியாவில் திருமுழுக்குப் பெறும் 1,700 புகுநிலைக் கிறிஸ்தவர்கள்



மலேசியாவின் தலத்திருஅவைச் சமூகம் 1,700-க்கும் மேற்பட்ட புகுநிலைக் கிறித்தவர்களுக்குத் திருமுழுக்கு வழங்கத் தயாராகி வருவதாக Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அண்மைய ஆண்டுகளில், மலேசியாவில் உள்ள கத்தோலிக்கச் சமூகத்தில் திருமுழுக்குக் கோரும் வயதுவந்தோரின் (Adults) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும்,... [2024-03-13 23:00:26]

காவல்துறை அதிகாரி நியமனத்திற்கு கர்தினால் இரஞ்சித் எதிர்ப்பு!



இலங்கையில் 2019-ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ஒருவரை அந்நாட்டின் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக நியமித்ததற்கு எதிராகக் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக யூகான் செய்தி... [2024-03-14 22:51:51]



இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்



இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயர் கிளீட்டஸ் சந்திரசிரி பெரெரா அவர்கள் பணி ஓய்வு பெறுவதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை நியமித்துள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிவரும் 76 வயதான ஆயர் கிளீட்டஸ்... [2024-03-05 22:42:47]

தூய பேதுரு இறையியல் இணையவழிக்கல்வி பட்டமளிப்பு விழா



பொதுநிலையினர் மற்றும் துறவறத்தார், இறைநம்பிக்கையில் ஆழப்படும் விதமாகவும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும் ஸ்பாட் எனப்படும் தூய பேதுரு இணையவழி இறையியல் கல்வி திகழ்கின்றது என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் அருள்முனைவர் ஜெயபிரதீப். அண்மையில்... [2024-03-11 23:12:51]



பட்டினியால் வாடும் இந்திய பூர்வகுடி கிறிஸ்தவர்கள்!



இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பூர்வகுடி மக்களின் தலைவர்கள் ஏறத்தாழ 17,000 பேரை பட்டினியில் இருந்து காப்பாற்ற கூட்டாட்சி தலையீட்டை நாடியுள்ளனர் என்றும், இன வன்முறையால் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அரசின் நிவாரண முகாம்களுக்கு உணவு வழங்குவதை அதிகாரிகள்... [2024-02-29 23:26:20]

சந்திப்பின் காலம் - தவக்காலம்



இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG



எது திருவருகைக்கால பரிசு



திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]

எழுத்துருவாக்கம்:

ஞாயிறு வாசக விளக்கம் தவக்காலத்தின் 4ம் ஞாயிறு , டினாமேரி ஜேம்ஸ், அனிற்றா யூலியற் வரதராஜ்


2024-03-19

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

SOLOMON BIBLE STORY - TAMIL


2024-03-19

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.




பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2024-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! செபிப்பதுடன் நீங்கள் விதைத்த விதைகளால் நன்மைகள் நடக்க உங்கள் இதயத்தைப் புதிப்பித்துக் கொள்ளுங்கள், இது மகிழ்ச்சியின் கனிகளையும் கடவுளுடன் ஐக்கியத்தையும் உருவாக்குகின்றது. களைகள் பல இதயங்களை ஆட்கொண்டு அவர்களை கனி கொடுக்காமல் தடுத்துவிடுகின்றது, ஆகவே அன்பான பிள்ளைகளே, ஒளியாகிய நீங்கள், அன்புடன் இவ்வுலகில் எனது விரித்த கரங்களுக்குள் வாருங்கள். அதுவே இறைவனிடம் உங்களை அழைத்துச் செல்லும். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி.“




2024-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்த நேரம் செபிக்கும் நேரமாக இருக்கட்டும்"




2023-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்தக் காலத்தை செபத்துடன் அமைத்து, சமாதானம் மற்றும் நல்ல விடயங்கள் நடைபெற உதவுங்கள், இதன்மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் மகிழ்வு உங்கள் இதயத்தை, குடும்பத்தை மற்றும் உலகை நிரப்பட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."


திருவெளிப்பாட்டு ஆண்டு


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)