தற்போது நிலவும் அசாதாரான நிலைமை காரணமாக கேவலார் திருயாத்திரை மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் அதிகமான மக்கள் பங்கெடுக்க கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் வெள்ளிக்கிழ்மை மாலை 06:00 மணிக்கு நற்கருணை ஆராதனையும், சனிக்கிழமை 09:00 மணி, 11:00 மணி, 13:00 மணி, 14:45 மணி, 16:30 மணி ஆகிய
நேரங்களில் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும். இவவழிபாடுகளில் ஏற்கனவே பதிவு செய்த மக்கள் மாத்திரமே நேரடியாக பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
எனினும் ஏனைய எல்லா மக்களும் விடுகளில் இருந்த படி இவ் வழிபாடுகளில் பங்கு பெறுவதற்கான ஒழுங்குகள் பணியகத்தினால் மேற்கொள்ள பட்டுள்ளது. இவ எல்லா வழிபாடுகளும் நமது பணியக You-Tube இல் நேரலையாக ஒளிபரப்பாகும்.
எனினும் நீங்கள் வீடுகளில் இருந்த படி முழுமையாக வழிபாடுகளில் பங்கெடுத்து, ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுமாறு வேண்ட்டப்படுகின்றீர்கள்.