மறைபரப்புக்கான நற்கருணை செப ஆராதனை



திருச்சபையானது October மாதத்தினை மறைபரப்பு மாதமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றது. எனவே நமது கத்தோலிக்க திருச்சபை இந்த மாதத்தை மறைபரப்பு மாதமாக எமது பங்குளிலும் கொண்டாட நம்மை அழைக்கிறது. இவ்வருட உலக மறைபரப்பு தின கருப்பொருள் "திருமுழுக்குகொடுத்து அனுப்பபட்டனர் (Baptized and Sent)" என்பதாகும். திருச்சபையின் மறைபரப்பு பணிக்காக செபிக்க வேண்டியது நமது கடமையாகும்.

எனவே திருச்சபையின் மறைபரப்பு பணிக்ககாக கூடி செபிப்பதற்காக; வரும் 02-11-2019 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 17:00 மணி வரை Essen மாநகரில் நற்கருணை செப ஆராதனை வழிபாட்டினை நமது பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. இவ்வழிபாட்டில் கலந்து மறைபரப்புக்காக செபிக்கவும் ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளவும் அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் St.Bonifatius Halle,
Moltke Str-160,
45138 Essen
காலம் 02-11-2019 சனிக்கிழமை
நேரம் 10:00மணிமுதல் 17:00மணிவரை