
![]() பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்தாண்டியடி சிலுவைமலை திருச் சிலுவைப்பாதை![]() மன்னார் மறைமாவட்ட குருக்கள், அருட்சகோதரர்கள், கன்னியர்கள், இறைமக்களுக்கு மன்னார் ஆயர் இல்லம் தரும் முக்கிய அறிவித்தல்![]() வழமையாக கத்தோலிக்க இறைமக்களாகிய நாம் ஆண்டவர் யேசுவின் பாடுகளை தியானிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இறைமக்கள் ஒன்று சேர்ந்து பாதையாத்திரையாக கோமரசன் குள திருத்தலத்திற்கு நடைபவனியாக சென்று திருசிலுவைப்பாதையும், அதனை தொடர்ந்து திருப்பலியிலும் கலந்து இறைவேண்டுதல் செய்வது வழக்கமாக காணப்பட்டது. அவசரகால சட்ட அமுலாக்கம் காரணமாக 07.03.2018 - 09.03.2018 வரை நடைபெறவிருந்த வவுவியா கோமராசன்குளம் பாதயாத்திரை மற்றும் 16.03.2018 அன்று நடைபெறவிருந்த ஒலைத்தொடுவாய் பாதயாத்திரை ஆகியன மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி. இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது என்பதனை பங்கு குருக்கள், இறைமக்களுக்கு அறியத்தருகின்றோம். இருப்பினும் பாதையாத்திரை நிறுத்தப்பட்டு 09.03.2018 அன்று காலை 10.00 மணிக்கு கோமரசன்குள கல்வாரித்திருத்தலத்தில் திருச்சிலுவைப்பாதையும், திருப்பலியும் மற்றும் 16.03.2018 அன்று காலை 8.30 மணிக்கு ஓலைத்தொடுவாய் கர்த்தர் திருத்தலத்தில் திருச்சிலுவைப்பாதையும் திருப்பலியும் இடம்பெறும் ஏன்பதனையும் அறியத்தருகின்றோம். எனவே இந்த கல்வாரி திருப்பலியின் போது இரு மதங்களுக்கும் இடையில் நடைபெறும் முருகல், கலவர நிலைகள் மாற வேண்டும், ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டி செபிக்கும்படியாக கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல் - மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் [2018-03-08 00:01:20] புனித அந்தோனியார் சிற்றாலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.![]() சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம்![]() இத் தியான வேளையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் வருகை தந்த சிரேஸ்ட பிரஜைகளை ஊக்கப் படுத்தி ஆசீர் வழங்கினார். பெருந்தொகையான மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் இத் தியானத்தில் பங்கேற்றனர். [2018-03-01 22:09:45] கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவில் சிங்கள மொழியில் திருப்பலி!!![]() எதிர்வரும் 23 ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 24 ஆம் திகதி பெருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இந்த திருவிழாவின் போது, முதன் முதலாக சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இம்முறை காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க கலந்துகொண்டு சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளார். இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்கொள்ளவுள்ளதுடன், சிங்கள மக்களும் அதிகமாக கலந்துகொள்ளும் காரணத்தினால், சிங்கள மொழியில் முதன் முதலாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன. [2018-02-23 12:59:32] மன்னாரில் ஆலய சிலைகள் உடைக்கப்படுவதை நிறுத்த நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் மன்னார் ஆயர் இம்மானுவேல் வேண்டுகோள்![]() மன்னாரில் இந்து ஆலய சிலைகள் உடைக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இன்று ஒரு மதத்துக்கு நடைபெற்றால் நாளை இன்னொரு மதத்துக்கு நடைபெறும். அகவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து இதை தடைசெய்ய வேண்டும். இதற்கு மதத் தலைவர்கள் மாத்திரமல்ல இதில் தமது மதங்களைச் சார்ந்த ஒவ்வொருவரும் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால்தான் நாம் வெற்றியைக் காணலாம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மறைமாவட்டத்துக்கு மூன்றாவது மறைமாவட்ட ஆயராக தெரிவு செய்யப்பட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையை மன்னார் மாவட்ட பிரiஐகள் குழுவினர் தங்கள் அலுவலகத்தில் வரவேற்பு நிகழ்வை நடாத்தினர். மன்னார் பிரiஐகள் குழுத் தலைவர் அருட்பணி ஞாணப்பிரகாசம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட சர்வமதத் தலைவர்கள் மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இவ்வளவு காலமும் நீங்கள் உங்கள் உறவுகளை தேடித் திரிந்தாலும் நீங்கள் பலவிதமான முயற்சிகளை எடுத்தாலும் இன்னும் உங்கள் உறவுகளை கண்டுபிடிக்க இயலாமையைக் கண்டு நான் வருந்துகின்றேன். நானும் உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் வேண்டுகின்றேன். இப்படியாக கயவர்களினால் உங்களிடமிருந்து கொண்டு சென்ற உறவுகள் உயிர்கள் கிடைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்த பிரர்த்திபேன நான் மன்னாருக்கு ஆயராக பொறுப்பேற்ற பின் மன்னார் மாவட்டத்தில் ஒரு பிரiஐகள் குழு இயங்குவதாக அறிந்தபொழுது உங்களை சந்திக்க வேண்டும் என ஆவலாக இருந்தேன். நான் பிரிதொரு நாளில் இங்கு வந்து சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபொழுதும் நீங்கள் இன்று (நேற்று 15) என்னை இங்கு வரவழைத்து எல்லோரும் இன மத பேதமின்றி கலந்து கொண்டு என்னை கௌரவித்தமைக்கு நன்றியுள்ளவனாக இருக்கின்றேன். நீங்கள் இங்கு தெரிவித்தது போன்று முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமானால் இப்படியான ஒரு குழு அமைந்திருக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆற்றிய பணிகளை நான் நன்கு அறிவேன். ஆவரின் இச் செயலுக்காக நாம் இறைவனுக்கு நன்றியும் கூறியும் நிற்கின்றோம். அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பிரiஐகள் குழு இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் இங்கு உணரக்கூடியதாக இருக்கின்றது. நீங்கள் இங்கு ஆற்றிய உங்கள் பணித் தொகுப்பிலிருந்து மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு பலதரப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. உங்களில் பலர் பலவிதமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். மக்களுக்காக மக்களின் உரிமைகளுக்காக நீங்கள் எப்படி முன்வந்து செயல்பட்டிருக்கின்றீர்கள் என்பதையும் இங்கு பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆகையினால் உங்களின் செயல் திட்டங்களுக்கும் நீங்கள் ஆற்றிவந்த பணி அனைத்துக்கும் நான் உங்கள் அனைவரையும் பாராட்ட விரும்புகின்றேன். அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீங்கள் உங்களால் இயன்றதை செய்து வருகின்றீர்கள். அவர்களின் குடும்ப உறவுகளுக்காகவும், உங்களால் இயன்றதை செய்வதைக் காண்கின்றேன். அது காணாமல் ஆக்கப்பட்டோர், குடும்பங்களின் எத்தனையோர் மத்தியில் நிலவும் கண்ணீர், கலக்கம், பாடுகள் போன்ற அனுபவத்தில் இவர்கள் வாழ்கின்றார்கள். இதை நான் இன்று (நேற்று) உங்கள் மத்தியில் நிற்கின்றபோது உணர்கின்றேன். நான் மன்னார் மறைமாவட்ட ஆயர் என்ற வகையில் என்னால் இயன்ற உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்பதை உங்களுக்கு இங்கு வாக்குறுதி தருகின்றேன். இவ்வளவு காலமும் நீங்கள் உங்கள் உறவுகளை தேடித் திரிந்தாலும் நீங்கள் பலவிதமான முயற்சிகளை எடுத்தாலும் இன்னும் உங்கள் உறவுகளை கண்டுபிடிக்க இயலாமையைக் கண்டு நான் வருந்துகின்றேன். நானும் உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் வேண்டுகின்றேன். இப்படியாக கயவர்களினால் உங்களிடமிருந்து கொண்டு சென்ற உறவுகள் உயிர்கள் கிடைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்த பிரர்த்திபேன். இன்றைய தினத்தில் வௌ;வேறு மதத் தலைவர்கள் இங்கு உரையாற்றினார்கள். இவ்வாறாக அனைத்து தலைவர்களுடன் சேர்ந்து செயல்படும்போது அதில் ஒரு சிறப்பு உண்டு. நாம் பிரiஐகளின் பொது விடயங்களுக்காக உரிமைகளுக்காக செயல்படும்போது ஒற்றுமை அவசியமாக இருக்க வேண்டும். ஆகவே பிரiஐகள் குழு என்கின்றபோது எல்லா மதத் தலைவர்களும் இணைந்து செயல்படுவது அவசியமானது. ஒரிரு தினங்களுக்கு முன் மன்னாரில் இந்து சமயத்தின் சிலைகள் உடைக்கப்பட்டன. இதற்காக பலர் ஒன்றுகூடி பொலிசாருடன் சேர்ந்து இது தொடர்ந்து நடைபெறாவண்ணம் இருக்க ஆலோசனை மேற்கொண்டதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நாம் இந்த மாவட்டத்தை நோக்கம்போது இன்று ஒரு மதத்துக்கு நடைபெற்றால் நாளை இன்னொரு மதத்துக்கு நடைபெறும். அகவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து இதை தடைசெய்ய வேண்டும். இதற்கு மதத் தலைவர்கள் மாத்திரமல்ல இதில் தமது மதங்களைச் சார்ந்த ஒவ்வொருவரும் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால்தான் நாம் வெற்றியைக் காணலாம். நானும் இந்த பிரiஐகள் குழுவுடன் இணைந்து இவ் வாழ் மக்களின் நலனுக்காக நல்ல செயல்களை செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இதற்கு இறை ஆசீரை நாம் வேண்டி நிற்போம். இறைவனின் துணையினால் நாம் பல வெற்றிகளைக் காணலாம். ஆத்துடன் இறையாசீர் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டி நிற்கின்றேன் என்றார். (வாஸ் கூஞ்ஞ) [2018-02-23 12:58:43] தவக்கால சுற்றுமடலில் யாழ் ஆயர்![]() நாட்டில் அரசியல் சூழலில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அடுத்து வரும் மாதங்களும் வருடங்களும் எப்படி அமையுமோ என்ற அங்கலாய்ப்பு பலரிடம் தோன்றியுள்ளது. குறிப்பாக ஒரு வருடத்தை எட்டியதாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டமும் சொந்த மண்ணுக்கு திரும்ப வேண்டித் தொடரும் இடம்பெயர்ந்தோரின் போராட்டமும் அரை வேக்காடாக இருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளும் தமிழ் மக்களைப் பெரும் நம்பிக்கையீனத்துள் தள்ளியுள்ளன. மனிதனின் முயற்சிகளும், வல்லமையும் அவனது இயலுமையின் எல்லைகளைக் கடக்கும் போது இறைவேண்டல் ஒன்றே உகந்த வழியாகிறது. செபத்தினால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நம்பும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இக்காலத்தில் எமது மக்களின் பல்வேறு தேவைகளுக்கான செபங்களை உறுதியான வகையில் இணைந்து முன்னெடுப்போம். எல்லா வழிகளும் மூடியிருப்பதாக தோன்றும் இவ்வேளையில் இறைவனின் கதவை செபம் என்னும் ஆயுதத்தால் தட்டுவதே சிறந்த வழியாகும் என்ற நம்மிக்கையோடு உறுதியாக தட்டுவோம். எக் காலத்தையும் விட இக்காலத்தில் இளையோர்கள் தமது சீரான வாழ்வுக்கு பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர். அதிகரித்த தகவல் பரிமாற்றம் - சமூக வலைத்தளங்களின் பாவனை - போதைப்பொருட்களின் பரவல் - பாரம்பரிய சமூக கட்டுமானங்களின் தளர்வு - விழுமிய வீழ்ச்சி போன்ற பல்வேறு நவீன சவால்களை ஒருங்கே எதிர்கொள்வதோடு வேலைவாய்ப்பின்மை - தொழில்சார் கல்வி முறையின்மை - தகுந்த வழிகாட்டல் இன்மை போன்ற குறைபாடுகளாலும் அவர்கள் துன்புறுகின்றனர். இந்நிலையில் போக்கிடம் தெரியாது அலையும் இத் தலைமுறை இளையோரை இறைதிட்டத்தை உய்த்துணரவும் அதன்படி தமது வாழ்வை வடிவமைத்துக் கொள்ளவும் வழிகாட்ட வேண்டிய பெரும் பொறுப்பில் சமூகத்தலைவர்களும் திருச்சபைத்தலைவர்களும் பெற்றோரும் உள்ளனர். பெற்றோர் ஆசிரியர் போன்ற வழிகாட்டிகள் மந்தையை சரியான மேய்ச்சல் நிலத்துக்கு அழைத்துச் செல்லும் நல்லாயனைப்போல பணியாற்ற அவர்களை உருவாக்கும் பொறுப்பு குருக்கள் துறவிகள் மற்றும் ஏனைய பொது நிலைத் தலைவர்களைச் சார்ந்தது. செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை இயக்குநர் - பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மற்றும் ரீ.சி.என்.எல். ரீவி - ஆசிரியர் (ரீ.சி.என்.எல்.) தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளம் ஊடக வருகை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம் ஊடக வருகை விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் [2018-02-20 10:58:29] "தவக்காலத்தின் வாசலில்" மட்டக்களப்பு மறைமாவட்ட அருங்கொடை....![]() நானாட்டான் மண்ணில் தங்களது மூன்றாவது இல்லத்தை![]() ஆனால் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்ட இவர்கள் 1999ம் ஆண்டு அடம்பனில் தங்களது பணியை விசாலப்படுத்திக் கொண்டனர். தொடந்து இன்றைய நாளில் (12.02.2018) நானாட்டான் மண்ணில் தங்களது மூன்றாவது இல்லத்தை ஆரம்பித்ததன் வழியாக மன்னார் மறைமாவட்டத்திற்கள் தங்களது பரப்பெல்லையை விசாலப்படுத்திக் கொண்டுள்ளனர். இன்று 12.02.2018 திங்கட்கிழமை நானாட்டானில் டிலாசால் அருட்சகோதரர்களின் புதிய இல்லம் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது. ஆயர் அவர்கள் நமது தமிழ் பண்பாட்டு இசை முழக்கத்தோடும், சாரணர்களின் அணிவகுப்போடும் வரவேற்கப்பட்டார். இந் நிகழ்வில் டிலாசால் அருட்சகோதரர்களின் இலங்கைக்கான சபை முதல்வர் அருட்பணி கிறிஸ்ரி குரூஸ் அவர்களும், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அவர்களும், மன்னாரில் இவ் அருட்சகோதரர்களின் நிர்வாகத்தில் இயங்கும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவர் மேதகு நீதிபதி திருவாளர் பிரபாகரன் அவர்கள், கொழும்பு தூய பெனடிக்ற் கல்லூரியின் பழைய மாணவரும் தற்போதைய மன்னார் இராணுவ 51வது படைப்பிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஜே.ஏ.டபிள்யு.கலகமகே, மன்னார் பிரதேசச் செயலர் திரு.ம.பரமதாசன், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்ரியன், ஓய்வு பெற்ற பிரதேசச் செயலர் திரு.கஸ்மிர் சந்திரையா மற்றும் பெருந்தொகையான குருக்கள் துறவிகள், துறைசார் வல்லுனர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் [2018-02-13 22:46:38] மாந்தை மாதா திருவிழா *மன்னார் மறைசாட்சிகளின் மண்ணில்*![]() இம்மாதம் 17ந் திகதி திருவிழாத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும். வரலாற்றச் சிறப்புமிக்க இந்தத் திருத்தலத்தலம் மருதமடுத் திருத்தாயாரின் தொடக்ககால இருப்பிடம் என்பதும், கத்தோலிக்க சமயத்திற்கெதிரான வன்முறையின்போது மடுமாதாவின் அற்புதத் திருவுருவம் மடுத்திருப்பதிக்கு சென்றதென்றும் நமக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. தற்பொழுது இத் திருத் தலத்திலே ஆயத்த வழிபாடுகள் தினமும் மாலை வேளையில் நடைபெற்று வருகின்றன. [2018-02-10 16:22:42] பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும் |