வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)



பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


பிறைபேர்க் மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர் நியமனம்

2 மில்லியன் கத்தோலிக்கர்கள் வாழும் யேர்மன் பிறைபேர்க் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக கடந்த 29.06.2014 அன்று 52 வயதான ஸ்ரெபான் பேர்கர் (Stephan Burger) ஓய்வுபெற்ற பிறைபேர்க் பேராயர் சொலிற்ச் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார். இத் திருப்பலியில் யேர்மன் ஆயர் மன்றத் தலைவர் கருதினால் றைன்கார்ட் மக்ஸ், திருத்தந்தையின் யேர்மன் பிரதிநிதி நிக்கொலா எற்றறோவிச் மற்றும் அயல் மறைமாவட்டங்களான மைன்ஸ், றொட்டென்பேர்க், பார்செல் ஆயர்கள் பங்கேற்றிருந்தனர். புதிய பேராயர் தமது ஆயருக்குரிய திருவாக்காக „கிறிஸ்து இதயத்திலே“ என்பதை தெரிந்திருந்தார். இத் திருநிலைப்படுத்தல் விழாத்திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததுடன் பிறைபேர்க் பேராலயத்தின் வெளியே மக்கள் திருப்பலியைக் காண்பதற்கு வசதியாக பாரிய வீடியோ படத்திரை வைக்கப்பட்டிருந்தது. திருப்பலியின் நிறைவில் பேராயருக்கான வரவேற்பு வைபவம் சிறப்பாக நடைபெற்றது. [2014-07-04 01:00:00]