இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

  சின்னக் குறிப்பிடம்



முதல் பிரிவு : ஏக சர்வேசுரன் பேரில்

1. அனைத்திற்கும் ஆண்டவர் யார்?
சர்வேசுரன்

2. எத்தனை சர்வேசுரன்?
ஒரே சர்வேசுரன். (எல்லாவற்றையும் படைத்து காப்பாற்றும் எல்லா நற்குணங்களும் நிறைந்த சுத்த அரூயஅp;பியே சர்வேசுரனாகும்)

3. அவர் தேவ சுபாவத்தில் ஒருவராய் இருந்தாலும் ஆள் வகையில் எப்படி இருக்கிறார்?
திhத்துவமாயிருக்கிறார்

4. திரித்துவமாயிருக்கிறார் என்பதற்கு அர்த்தமென்ன?
ஆள் வகையிலே மூவராயிருக்கிறாரென்று அர்த்தமாகும்.

5. இந்த மூன்றாட்களுக்கும் பெயரென்ன?
பிதா, சுதன், பரிசுத்த ஆவி

6. பிதா சர்வேசுரனா ?
சர்வேசுரன்

7. சுதன் சர்வேசுரனா ?
சர்வேசுரன்

8. பரிசுத்த ஆவி சர்வேசுரனா ?
சர்வேசுரன்

9. மூவரும் மூன்று சர்வேசுரனா?
இல்லை - ஒரே சர்வேசுரன்

10. எப்படி ஒரே சர்வேசுரன்?
இந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம் ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருப்பதால் மூவரும் ஒரே சர்வேசுரன் தான்.

11. இவர்களுக்குள்ளே வல்லபம், மகிமை, முதலான குணங்களில் வித்தியாசமுண்டோ?
இல்லை - மூவரும் எல்லாவற்றிலும் சரி சமானமாயிருக்கிறார்கள்.

12 இப்படி ஏகமும் திரித்துவமுமாகிய சர்வேசுரனுக்கு பிரதான குணங்கள் எத்தனை?
ஆறு

13 ஆறுஞ் சொல்லு.
1. சர்வேசுரன் தாமாயிருக்கிறார்
2. துவக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்
3. சரீரமில்லாமல் இருக்கிறார்
4. அளவில்லாத சகல நன்மையும் சுரூயஅp;பியாயிருக்கிறார்
5. எங்கும் வியாபித்திருக்கிறார்
6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்

2-ம் பிரிவு : உலக சிருஷ்டிப்பின் பேரிலும் மனிதனுடைய கேட்டின் பேரிலும்

14. சர்வேசுரன் எல்லாவற்றுக்கும் ஆதிகாரணமாயிருக்கிறதெப்படி?
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்து காப்பாற்றுகிறதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்.

15. சர்வேசுரன் படைத்தவைகளில் பிரதான வஸ்துக்கள் என்ன? முக்கியமானவை எவை?
சரீரமில்லாத சம்மனசுகளும், ஆத்துமமும் சரீரமும் உள்ள மனிதர்களும் தான்.

16. சம்மனசுகள் எல்லாரும் தாங்கள் மேன்மையான நிலையில் நிலை கொண்டார்களோ?
இல்லை - சிலர் ஆங்காரத்தினாலே மோட்சத்தை இழந்து நரக தண்டனைக்கு உள்ளானார்கள்.

17. இப்படி கெட்டுப்போன சம்மனசுகளின் பெயரென்ன?
பிசாசுக்கள்.

18. சர்வேசுரன் மனிதர்களை எதற்காகப் படைத்தார்?
தம்மை அறியவும், நேசிக்கவும், சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவும் உண்டாக்கினார்.

19. அவர் எந்த நிலையில் ஆதித் தாய் ஆதித்தகப்பனை உண்டாக்கினார்?
பரிசுத்தமும் பாக்கியமுமான நிலையில் உண்டாக்கினார்.

20. அவர்கள் அதை இழந்தது எப்படி?
பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியைத் தின்றதினாலே இழந்தார்கள்.

21. அதனால் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியாருக்கும் வந்த தேடென்ன?
பசாசுக்கு அடிமையாகி சாவு, நரகம், முதலிய தண்டனைகளுக்கு ஆளானார்கள்.

3-ம் பிரிவு : மனிதனுடைய இரட்சிப்பு

22. நம்மை இரட்சிப்பதற்காக மனிதானாய் பிறந்தது யார்?
தூய தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாயிருக்கிற சுதனாகிய சர்வேசுரன் தான்.

23. அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனாலே கர்ப்பமாய் உற்பவித்து அற்புதமாய் பிறந்தார்.

24. யாரிடத்தில் நின்று பிறந்தார்?
என்றும் கன்னிகையான தூய கன்னி மரியாளிடத்தில் நின்று பிறந்தார்.

25. அவர் பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?
'இயேசு' என்று பெயரிட்டார்கள்.

26. இயேசு என்ற பெயருக்கு அர்த்தமென்ன?
நம்மை இரட்சிக்கிறவர்.

27. ஆகையால் இயேசுக் கிறிஸ்துநாதர் யார்?
நம்மை இரட்சிப்பதற்காக மனிதராய்ப் பிறந்த சுதனாகிய சர்வேசுரன்.

28. இயேசு நாதர் இவ்வுலகத்திலே எத்தனை வருடகாலம் இருந்தார்?
முப்பத்து மூன்று வருடகாலம் இருந்தார்.

29. இவ்வுலகத்தில் என்ன செய்து கொண்டுவந்தார்?
எல்லா புண்ணியங்களையும், அற்புதங்களையும் செய்து தம்முடைய திவ்விய வேதத்தைப் போதித்து, அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.

30. இயேசுநாதருக்கு எத்தனை சுபாவம் உண்டு?
தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.

31. எந்த சுபாவத்தில் பாடுபட்டார்?
மனித சுபாவத்தில் பாடுபட்டார்.

32. யாருக்காகப் பாடுபட்டார்?
நமக்காகப் பாடுபட்டார்.

33. எப்படி பாடுபட்டார்?
போஞ்சுப்பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு கடினமான மரணத்தையடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

34. அப்போது அவருடைய திரு ஆத்துமம் எங்கே போனது?
பாதாளங்களில் இறங்கி அங்கேயிருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்சபாக்கியம் கொடுக்கப் போனது.

35. இயேசுநாதர் கல்லறையை விட்டு உயிர்த்து எழுந்தருளினாரோ?
ஆம். மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தருனார்.

36. உயிர்த்த பிற்பாடு பூலோகத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தார்?
நாற்பது நாள் தங்கியிருந்தார்

37. அந்த நாற்பது நாளும் என்ன செய்துகொண்டிருந்தார்?
அனேக தடவை தம்முடைய சீடர்களுக்குத் தம்மைக் காண்பித்து அவர்களை வேத சத்தியங்களில் திடப்படுத்திக் கொண்டு வந்தார்.

38. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்.

39. இப்போது இயேசுநாதர் எங்கே இருக்கிறார்?
எங்கும் இருக்கிறார். சர்வேசுரனும் மனிதனும் என்ற நிலையில் பரலேகத்திலும், திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.

4-ம் பிரிவு: பரிசுத்த ஆவியின் ஆகமனமும் திருச்சபையும்

40. இயேசுநாதர் பரலேகத்துக்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன செய்தார்?
தம்முடைய அப்போஸ்தலர்களுக்குத் திடனாக பரிசுத்த ஆவியை அனுப்பினார்.

41. பரிசுத்த ஆவியை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?
உலகத்தின் எத்திசையிலும் போதித்து திருச்சபையை பரப்பச் செய்தார்கள்

42. திருச்சபைக்கு தலைவராயிருக்கிறவர் யார்?
இயேசுநாதர் தான்

43. அவர் தமக்குப் பதிலாக காணக்கூடிய தலைவராக யாரை ஏற்படுத்தினார்?
புனித இராயப்பரை ஏற்படுத்தினார்

44. புனித இராயப்பருக்குப் பின் திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறவர் யார்?
பரிசுத்த பாப்பானவர்

45. மற்ற அப்போஸ்தலர்களுக்குப் பதிலாயிருக்கிறவர்கள் யார்?
ஆயர்கள்.

46. இயேசுநாதர் எத்தனை திருச்சபையை ஏற்படுத்தினார்?
கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஏற்படுத்தினார்

47. திருச்சபையின் சொற்படி கேளாதவர்களுக்கு மோட்சம் உண்டோ?
இல்லை.

48. இல்லை என்பதற்கு சான்று என்ன?
திருச்சபையின் சொற்படி கேளாதவன் அஞ்ஞானியைப்போல்; உனக்கு ஆகக்கடவன் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.

5-ம் பிரிவு: மனிதனுடைய இறப்பு

49. பாவத்தினிமித்தம் சகல மனிதர்களுக்கும் வருகிற கேடு என்ன?
சாவு

50. சாவுக்குப் பின் என்ன நடக்கும்
தனித்தீர்வை.

51. தனித்தீர்வைக்குப் பின் சாவான பாவமுள்ள ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?
நரகத்துக்குப் போகிறார்கள்

52. தங்கள் பாவங்களுக்கு முழுவதும் உத்தரியாத புண்ணிய ஆத்துமாக்கள் ஏங்கே போகிறார்கள்?
உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு போகிறார்கள்

53. உத்தரிக்கிற ஸ்தலத்திலே எப்படியிருக்கிறார்கள்?
தங்கள் பாவங்களுக்குத் தக்க வேதனைப்பட்டு உத்தரிக்கிறார்கள். முழுவதும் உத்தரித்த பிறகு மோட்சத்தை அடைவார்கள்.

54. தனித்தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?
பொதுத் தீர்வை உண்டு

55. பொதுத்தீர்வை எப்போது நடக்கும்?
உலக முடிவிலே நடக்கும்

56. உலகம் எப்படி முடியும்?
உலகமெல்லாம் நெருப்பினாலே வேக, மனிதர்கள் எல்லாரும் செத்துப்போவார்கள்

57. பிறகு என்ன நடக்கும்?
இயேசு நாதர் மனிதர் எல்லாரையும் ஆத்தும சரீரத்தோடுகூட எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு நடுத்தீர்க்க வருவார்.

58. எப்படி நடுத்தீர்ப்பார்?
அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கும் முன்பாக அறியப்பண்ணி பாவிகளைச் சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசீர்வதித்து மோட்சத்துக்கு கூட்டிச் கொண்டுபோவார்.

59. பாவிகள் நரகத்திலே படுகிற தண்டனை என்ன?
சர்வேசுரனை ஒருபோதும் காணாமல் எக்காலமும் பசாசுக்களோடே நெருப்பிலே வெந்து எல்லா தண்டனைகளையும் அனுபவிக்கிறார்கள்.

60. நல்லவர்கள் மோட்சத்தில் அனுபவிக்கிற பாக்கியம் என்ன?
சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து எப்போதைக்கும் எல்லா பேரின்பப் பாக்கியங்களையும் அனுபவிக்கிறார்கள்.

6-ம் பிரிவு : கட்டளைகளும், பாவமும், புண்ணியமும்

61. மோட்சத்தை அடைவதற்கு செய்யவேண்டியதென்ன?
மேற் சொன்ன வேத சத்தியங்களை விசுவசித்து சர்வேசுரனுடைய கற்பனைகளையும், திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்துப் பாவத்தை தள்ளி, புண்ணியத்தை செய்யவும் வேண்டியது.

62. சர்வேசுரனுடைய கற்கனைகள் எத்தனை?
பத்து.

63. பத்தும் சொல்லு.
சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து

1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக
2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக
3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக
5. கொலை செய்யாதிருப்பாயாக
6. மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக
7. களவு செய்யாதிருப்பாயாக
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்hயாக
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயக

இந்தப் பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்;

1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
2.தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

64. திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?
ஆறு.

65. ஆறுஞ்சொல்லு.

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுபூசை காண்கிறது
2. வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது
3. பாஸ்கா காலத்தில் பாவசங்கீர்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்கிறது.
4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.
5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கனமுள்ள உறவு முறையாரோடும் கலியாணம் செய்யாதிருக்கிறது
6 .நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.

66. பாவம் ஆகிறதென்ன?
தேவ கட்டளைகளை மீறுகிறது பாவம்.

67. எத்தனை வகைப் பாவங்கள் உண்டு?
ஜென்மப் பாவம், கர்மப் பாவம் ஆகிய இரண்டுவகைப் பாவங்கள் உண்டு

68. ஜென்பப் பாவம் ஆகிறதென்ன?
ஆதித்தாய் ஆதித் தகப்பனால் உண்டாகி நம்மோடு கூடப்பிறக்கிற பாவம்.

69. கர்மப் பாவம் ஆகிறதென்ன?
அவரவர் புத்தி விபரம் அறிந்த பிற்பாடு மனம் பொருந்தி செய்கின்ற பாவம்.

70. கர்மப் பாவம் எத்தனை வகையுண்டு?
சாவான பாவம், அற்பப் பாவம் ஆகிய இரண்டு வகையுண்டு.

71.சாவான பாவம் ஆவதென்ன?
வேத இஷ்டப்பிரசாதத்ததைப் போக்கடித்து நம்மை நரகத்துக்குப் பாத்திரவான்கள் ஆக்குகிற பாவம்.

72. அற்பப் பாவம் ஆவதென்ன?
நம்மில் தேவ சிநேகத்தைக் குறைத்து சாவான பாவத்திற்கு வழியுமாகி நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் பாத்திரவான்கள் ஆக்குகின்ற பாவம்.

73. தலையான பாவங்கள் எத்தனை?
ஏழு.

74. ஏழுஞ் சொல்லு.
1. அகங்காரம், 2.கோபம், 3.மோகம், 4.லோபித்தனம், 5.போசனப்பிரியம், 6.காய்மகாரம், 7.சோம்பல்

75. மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்கள் எவை?
விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகியவைகளாகும்.

76. தலையான பாவங்களுக்கு எதிரிடையான புண்ணியங்கள் எவை?
1. தாழ்ச்சி, 2.பொறுமை, 3.கற்பு, 4.உதாரம், 5.மட்டசனம் 6.பிறர் சிநேகம், 7.சுருசுறுப்பு

7-ம் பிரிவு: தேவ வரப்பிரசாதமும், செபமும், தேவ திரவிய அனுமானங்களும்:

77. பாவத்தை விலக்கி மோட்சத்தை அடைவதற்கு நம்முடைய சொந்த பலன் போதுமா?
போதாது. நமக்கு தேவ வரப்பிரசாதத்தின் உதவி வேண்டியது

78. தேவ வரப்பிரசாதம் எத்தனை வகை உண்டு?
தேவ இஷ்டப்பிரசாதம், உதவி வரப்பிரசாதம் ஆகிய இரண்டு வகை உண்டு.

79. தேவ வரப்பிரசாதங்களை அடைவதெப்படி?
செபத்தினாலும், தேவ திரவிய அனுமானங்களாலும் அடையலாம்.

80. அடிக்கடி செபம் செய்ய வேண்டுமா?
வேண்டுமென்று கர்த்தர் கற்பித்தார்.

81. தேவ திரவிய அனுமானங்கள் எத்தனை?
ஏழு.
82. ஏழுஞ் சொல்லு.

1. ஞானஸ்நானம்
2. உறுதிப் பூசுதல்
3. நற்கருணை
4. பச்சாத்தாபம் (பாவ சங்கீர்த்தனம்)
5. மெய்விவாகம்
6. குருத்துவம்
7. அவஸ்தைப் பூசுதல்

83. ஞானஸ்நானம் ஆவதென்ன?
சென்மப் பாவத்தையும் கர்மப் பாவத்தையும் போக்கி, நம்மை சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற தேவதிரவிய அனுமானம்.

84. உறுதிப் பூசுதல் ஆவதென்ன?
நம்மை சத்திய வேதத்தில் திடப்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியையும் அவருடைய வரப்பிரசாதங்களையும் நமக்குக் கொடுக்கிற தேவதிரவிய அனுமானம்.

85. நற்கருணை ஆவதென்ன?
கோதுமை அப்பத்தின் குணங்களிலும், திராட்சை பழஇரசத்தின் குணங்களிலும் இயேசுநாதருடைய திருச்சரீரமும், திரு இரத்தமும், திரு ஆத்துமமும் தேவசுபாவமும் அடங்கியிருக்கிற தேவதிரவிய அனுமானம்.

86. பத்சாத்தாபம் ஆவதென்ன?
ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு செய்த பாவங்களையெல்லாம் போக்குகிற தேவதிரவிய அனுமானம்.

87. அவஸ்தைப் பூசுதல் ஆவதென்ன?
வியாதிக்காரரிடத்தில் மிகுதியாகிய பாவங்களுக்கு பரிகாரமாகவும் அவர்களுடைய ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் ஆறுதலாகவும், உண்டாக்கப்பட்ட தேவதிரவிய அனுமானம்.

88. குருத்துவம் ஆவதென்ன?
திவ்விய பூசை செய்யவும், தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும், சுதந்திரம் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.

89. மெய் விவாகம் ஆவதென்ன?
சமுசாரி, ஆகிறவர்களுக்கு தேவ ஆசீர்வாதத்தையும், அவர்கள் தர்ம வழியாய் நடக்கவும், தங்கள் பிள்ளைகளைத் தக்க பிரகாரமாக நடப்பிக்கவும் வேண்டிய தேவ சகாயத்தையும் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.

ஞானஸ்நான விபரம்:

1வது: திருச்சபை ஞானஸ்நானம் கொடுக்கிற கருத்தோட நானும் கொடுக்கிறேனென்று மனதில் நினைத்துக் கொள்கிறது.
2வது: பிள்ளைக்கு இடவேண்டிய பெயரை உச்சரித்து அதன் தலையில் தண்ணீர் வார்க்கிறபோது தான்தானே சொல்ல வேண்டியது:
பிதாவுடையவும், சுதனுடையவும், பரிசுத்த ஆவியுடையவும் நாமத்தினாலே, நான் உன்னைக் கழுவுகிறேன்.
90. அவஸ்தை சமயத்தில் யாராகிலும் ஞானஸ்நானம் கொடுக்கலாமா?
அப்படிப்பட்ட சமயத்தில் யாராகிலும் கொடுக்க வேண்டியதுதான்.

91. உறுதிப் பூசுதலால் நாம் பெறும் பரிசுத்த ஆவியின் வரப்பிரசாதங்கள் எத்தனை?
ஏழு.
92. ஏழுஞ் சொல்லு.
1.ஞானம், 2.புத்தி, 3.அறிவு, 4.விமரிசை, 5.திடம், 6.பக்தி, 7.தெய்வபயம்

திவ்விய நற்கருணையின் விபரம்:

93. திவ்விய நற்கருணையிலே எழுந்தருளியிருக்கிறவர் யார்?
இயேசுநாதர்

94. அதிலே எப்படி எழுந்தருளியிருக்கிறார்?
தம்முடைய திருச்சரீரத்தோடும், இரத்தத்தோடும், ஆத்துமத்தோடும், தேவ சுபாவத்தோடும் மெய்யாகவே எழுந்தருளியிருக்கிறார்.

95. ஆகையால் நற்கருணை வாங்குறபோது என்ன வாங்குகிறோம்?
நம்முடைய திவ்விய கர்த்தராகிய இயேசுநாதருடைய திருச் சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தேவ சுபாவத்தையும்தானே வாங்குகிறோம்.

96. அதிலே அப்பம் கொஞ்சமாவது உண்டோ?
அப்பத்தின் உருவம், ருசி, நிறம் முதலான குணங்கள் இருந்தாலும், அப்பம் இல்லை.

97. அப்பம் என்னமாய் மாறிற்று?
இயேசுநாதருடைய திருச் சரீரமாக மாறிற்று.

98. தேவ நற்கருணை வாங்குவதற்கு எத்தனை வகை ஆயத்தம் வேண்டியது?
ஆத்தும ஆயத்தம், சரீர ஆயத்தம் ஆகிய இரண்டு வகை ஆயத்தம் வேண்டியது.

99. ஆத்தும ஆயத்தம் ஆவதென்ன?
ஆத்துமம் சாவான பாவமில்லாமல் பரிசுத்தமாய் இருக்க வேண்டியது.

100. சரீர ஆயத்தம் ஆவதென்ன?
திவ்விய நன்மை வாங்குவதற்கு முன் ஒருமணி நேரம் கடினமான பதார்த்தம் ஒன்றும் சாப்பிடாமலும், தண்ணீரைத் தவிர வேறு எந்த பானங்களையும் அருந்தாமலும் உபவாசமிருக்கவேண்டியது. (பாயும் படுக்கையுமில்லா நோயாளிகள் கூட போதையில்லா பானங்களையும், நீரான அல்லது கடினமாக உண்மை மருந்துகளையும் திவ்விய நன்மை வாங்குமுன் எவ்வித காலவரையில்லாமல் உட்கொள்ளளாம்).

101. திவ்விய பூசை ஒப்புக்கொடுப்பதற்கான பிரதான கருத்துக்கள் எபை?
1.தேவ ஆராதனை, 2.நன்றியறிந்த தோத்திரம், 3. பாவப் பரிகாரம், ஆகிய இவைகளாம்

102. பாவசங்கீர்த்தனம் பண்ண எத்தனை காரியம் செய்யவேண்டும்?
ஐந்து.

103. அந்த ஐந்து காரியமும் சொல்லு.
1-வது தான் செய்த பாவங்களை நினைத்துப்பார்க்கிறது.
2-வது தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவது.
3-வது இனிமேல் ஒருபொழுதும் ஒரு பாவத்தையும் செய்வதில்லையென்று உறுதியான மனதோடே பிரதிக்கினை பண்ணுகிறது.
4-வது தன் பாவங்களை ஒன்றும் ஒளியாமல் குருவுடனே சொல்லுகிறது.
5-வது குரு கட்டளையிட்ட அபராதத்தை தீர்க்கிறது

அவஸ்தை பூசுதலின் விபரம்:

104. அவஸ்தைப் பூசுதல் பெற வேண்டியது யார்?
கடின வியாதிக்காரர் பெறவேண்டும். ஆனால் மரண நேரம் மட்டும் காத்திருக்கலாகாது.

மெய் விவாதக்தின் விபரம்:

105. மெய் விவாகத்துக்கு பிரதான விக்கினங்கள் எவை?
நெருங்கிய இரத்த உறவு, இரண்டாங்கால் மட்டும் கலியாண சம்பந்தம், ஞான உறவு, குறைந்த வயது, இதர மதம் இவைகளாகும்

106. திருச்சபை உத்தரவில்லாமல் தாலிகட்டி கலியாணம் செய்தால் மெய்விவாகம் ஆகுமா?
இல்லை. இப்பேர்பட்ட கலியாணம் வெறும் தாறுமாறு ஆகுமே ஒழிய மெய்விவாகம் ஆகாது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மூவொரு கடவுள் புகழ் (தமத்திரித்துவத்தின் தோத்திரம்) :

பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்

சிலுவை அடையாளம்

பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்

புனித சிலுவை செபம்

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.

ஆறு இலட்சணங்கள்

1. சர்வேசுரன் தாமாயிருக்கிறார்
2. துவக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்
3. சரீரமில்லாமல் இருக்கிறார்
4. அளவில்லாத சகல நன்மையும் சுரூயஅp;பியாயிருக்கிறார்
5. எங்கும் வியாபித்திருக்கிறார்
6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்

கர்த்தர் கற்பித்த செபம் :

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தின்மை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.

மங்கள வார்த்தை செபம் :

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

திவ்ய நற்கருணை ஆராதனை :

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு, சதா காலமும், ஆராதனையும் ஸ்துதியும் தோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது.

பத்து கட்டளைகள்:

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து

1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக
2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக
3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக
5. கொலை செய்யாதிருப்பாயாக
6. மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக
7. களவு செய்யாதிருப்பாயாக
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்hயாக
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயக

இந்தப் பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்;
1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
2. தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

திருச்சபைக் கட்டளைகள் ஆறு

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுபூசை காண்கிறது
2. வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது
3. பாஸ்கா காலத்தில் பாவசங்கீர்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்கிறது.
4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.
5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கனமுள்ள உறவு முறையாரோடும் கலியாணம் செய்யாதிருக்கிறது
6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.

விசுவாச பிரமாணம்:

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார்.
போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
அர்ச்சியஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

உத்தம மனஸ்தாப செபம்:

சர்வேசுரா சுவாமி ! தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்கு பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறறேன். எனக்கிதுவே மனத்தாபமில்லாமல் வேறு மனத்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களை செய்வதில்லையென்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்கு பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திரு இரத்த பலன்களை பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன்
திருச்சபை விசுவசித்து கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினாலே நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். -ஆமென்.

சுருக்கமான உத்தம மனஸ்தாப செபம்:

என் சர்வேசுரா சுவாமி ! தேவரீர் அளவில்லாத நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் என் பாவங்களால் உமக்கு செய்த துரோகத்திற்காக உத்தம மனஸ்தாபப்படுகிறேன். இனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால் இப்பேர்ப்பட்ட பாவங்களை செய்வதில்லை என்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன். -ஆமென்

பாவ சங்கீர்த்தன செபம்

எல்லாம் வல்ல சர்வேசுரனிடமும் எப்பொழுதும்த கன்னியான பரிசுத்த மரியாயிடமும் அதிதூதரான புனித மிக்தேலிடமும் ஸ்னாபகரான புனித அருளப்பரிடமும் அப்போஸ்தலரான புனித இராயப்பர், சின்னப்பரிடமும், புனிதர் எல்லோரிடமு; தந்தையே, உங்களிடமுமு; நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன். எனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என்பாவமே என்பாவமே என் பெரும் பாவமே
ஆகையால் எப்பொழுதும் கன்னியான பரிசுத்த மரியாயையும் அதிதூதரான புனித மிக்கேலையும் ஸ்னாபகரான புனித அருளப்பரையும் அப்போஸ்தலரான புனித இராயப்பர், சின்பை;பரையும், புனிதர் எல்லோரையும், தந்தையே உங்களையும் நம் ஆண்டவராகிய சர்வேசுரனிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன். -ஆமென்

திரிகால செபம்: (மூவேளைச் செபம்)

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தாh;
அவள் பரிசுத்த ஆவியினால் கர்பமானார் - அருள் நிறைந்த...

இதோ ஆண்டவருடைய அடிமை
உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறைந்த...

வார்த்தை மனுவுருவானார்
நம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறைந்த...

இயேசுகிறிஸ்துநாதருடையதிருவாக்குத்தத்தங்களுக்குநாங்கள்பாத்திரவான்களாகும்படி
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக
இறைவா ! தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசுகிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் நாங்கள் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுகிறிஸ்துவழியாக மன்றாடுகிறோம் - ஆமென்.

பாஸ்கு காலத்தில் மூவேளை செபம்:

(உயிர்ப்பு நாளிலிருந்து அர்ச். தமத்திருத்துவத்தின் திருளாளுக்கு முந்தின நாள் வரை நின்று கொண்டு சொல்லவேண்டிய செபம்)
முதல்வர் : விண்ணக அரசியே ! மனங்களிகூறும், அல்லேலூயா
துணைவர் : அதேதெனில் பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தார், அல்லேலூயா

மு. தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா
து. எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும், அல்லேலுயா

மு. எப்பொழுது கன்னியான மரியாவே அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர், அல்லேலூயா
து. அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா
செபிப்போமாக இறைவா! உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பினாலே உலகம் மகிழ்திருக்க அருள்புரிந்தீரே! அவருடைய திருத்தாயாகிய கன்னிமரியாளின் துணையால் நாங்கள் என்றென்றும் நிலைத்த வாழ்வில் பேரின்பத்தைப் பெற, அருள்புரியுமாறு எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் -ஆமென்.

கிருபை தயாபத்து செபம்

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே!
- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
செபிப்போமாக சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

காணிக்கை செபம்:

இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி.
இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.

காவல் தூதரை நோக்கி செபம்:

எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.

அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:

தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு, ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.

இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உணவருந்துமுன் ஜெபம்:

சர்வேசுரா சுவாமி! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்

உணவருந்திய பின் ஜெபம்:

சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா! தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்; எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன்.
இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது. ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி! எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய ஜீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி -ஆமென்
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது -ஆமென்

வேலை துவங்குமுன் ஜெபம்:

தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.

ஜெபிப்போமாகக
சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்

வேலை முடிந்தபின் செபம்:

சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.

தேவன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் செபம்:

என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கதக்கதாக. இன்றைக்கு என் கண் காதுகளையும், வாய், இருதயத்தையும் என்னை முழுமையும் தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் நல்ல தாயாரே, நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிற படியினாலே, என்னை உம்முடைய உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும். - ஆமென்

புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்n;சரிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அச்சிஸ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (மூன்று முறை)


Imprimatur: Most Rev. Arockiasamy Bishop of Kottar Nagarcoil 30.05.1972