மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 91
வேதாகமப் பகுதி : யோசுவா 10, 11
முடிவுத் திகதி : 2021-07-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„எபிரோன் மன்னன் ----------, யார்முத்து மன்னன் ----------, இலாக்கிசு மன்னன் ---------, எக்லோன் மன்னன் -----------“

ஓகாம்
பிராம்
யாப்பியா
தெபீர்
யோசுவா

2. எருசலேம் மன்னன் அதோனிசெதக்கு யார் யாரை உதவிக்கு அழைத்தான்?

ஏபிரோன்
யார்முத்து
இலாக்கீசு
எருசலேம்
எக்லோன்

3. கிபயோன் மக்கள் யோசுவாவுக்குச் சொல்லி அனுப்பியது என்ன?

இங்கே வாருங்கள்
உம் பணியாளர்களைக் கைவிடாதீர்
விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றும்
எங்களுக்கு உதவி செய்யும்
ஏனெனில், மலைப்பகுதியில் வாழும் எல்லா எமோரிய மன்னர்களும் எங்களை எதிர்க்க ஒன்று கூடியுள்ளனர்

4. ஆண்டவர் கில்காலில் இருந்த யோசுவாவிடம் சொல்லியது என்ன?

அவர்கள் முன் அஞ்சாதே
ஏனெனில், அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன்
அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்
விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றும்
எங்களுக்கு உதவி செய்யும்

5. “கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்” இது யார் கூற்று?

ஆண்டவர்
யோசுவா
மோசே
இஸ்ரயேல்
போர்வீர்ர்கள்

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"அந்த ஐந்து எமோரிய மன்னர்களும் தப்பி ஓடி, --------------- ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்கள்."

இஸ்ரயேலில்
எரிக்கோவில்
மக்கேதாவில்
கில்காலில்
எருசலேமில்

7. எமோரிய மன்னர்கள் மக்கேதாக் குகையில் ஒளிந்திருப்பதை அறிந்த யோசுவா கூறியது என்ன?

குகையின் வாயிலில் பெருங்கற்களை வையுங்கள்
அவர்களைக் காவல் காக்க அதற்கருகில் ஆள்களை நிறுத்துங்கள்
நீங்கள் நிற்காதீர்கள். உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள்
அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள். அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள்
ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்


8. மக்கேதாக் குகையில் எத்தனை எமோரிய மன்னர்கள் ஒளிந்துகொண்டனர்?

இரண்டு பேர்
மூன்று பேர்
நான்கு பேர்
ஐந்து பேர்
ஆறு பேர்

9. எமோரிய மன்னர்கள் எப்படி கொல்லப்பட்டனர்?

யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், “அருகில் சென்று உங்கள் பாதங்களை இம்மன்னர்களின் கழுத்தின்மீது வையுங்கள்” என்றார்
அவர்கள் நெருங்கி வந்து தங்கள் பாதங்களை அவர்கள் கழுத்தின்மீது வைத்தனர்
யோசுவா அந்த ஐந்து மன்னர்களை வாளால் வெட்டிக் கொன்றார். அவர்களின் சடலங்களை ஐந்து மரங்களில் மாலைவரை தொங்கவிட்டார்
கதிரவன் மறையும் நேரத்தில் யோசுவா அச்சடலங்களை இறக்கிவிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்
அவற்றை அவர்கள் முன்பு ஒளிந்திருந்த குகைக்குள் எறிந்தார்கள். குகையின் வாயிலில் பெருங்கற்களை வைத்தார்கள். அவை இந்நாள்வரை உள்ளன

10. யோசுவா எப்படி மக்கேதாவைக் கைப்பற்றினார்?

யோசுவா அன்று மக்கேதாவைப் கைப்பற்றினார்
அதையும் அதன் மன்னனையும் வாள்முனையில் கொன்றார்
அவர்களைக் கொன்று அழித்தார்
அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை
எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், மக்கேதா மன்னனுக்கும் செய்தார்

11. யோசுவா லிப்னாவை எப்படி கைப்பற்றினார்?

யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மக்கேதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதனுடன் போர் தொடுத்தனர்
ஆண்டவர் லிப்னா மக்களையும் மன்னனையும் இஸ்ரயேல் மக்கள் கையில் ஒப்படைத்தார்.
அதை அவர் வாள்முனையில் அழித்தார்
அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை
எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், அதன் மன்னனுக்கும் செய்தார்

12. ஆட்சோர் மன்னன் யாபின் மற்றும் மற்ற மன்னர்களும் ஒன்று சேர்ந்து யோசுவாவுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில் ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது என்ன?

அவர்கள் முன் அஞ்சாதே,
ஏனெனில், நாளை இந்நேரம் நான் அவர்கள் அனைவரையும் கொலையுண்டவர்களாய் இஸ்ரயேல்முன் ஒப்படைப்பேன்
அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை நீ வெட்டுவாய்
அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்குவாய்
அவர்களுக்கு எதிராக நிற்காதே

13. ஆட்சோர் நகர் எவ்வாறு அழிக்கப்பட்டது?

யோசுவா திரும்பி வந்து ஆட்சோரைக் கைப்பற்றினார்
அதன் மன்னனை வாளால் தாக்கினார்
ஏனெனில், ஆட்சோர் அந்த அரசுகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்தது
இஸ்ரயேலர் அந்நகரில் இருந்த உயிர்கள் அனைத்தையும் வாள் முனையில் கொன்று அடியோடு அழித்தனர்
ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை; ஆட்சோரைத் தீக்கிரையாக்கினர்

14. யோசுவா கைப்பற்றிய நிலப்பகுதிகள் யாவை?

கோசேன் நாடு
அராபா
எபிரோன்
தெபீர்
அனாபு

15. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"இஸ்ரயேல் நாட்டில் அனாக்கியர் பெருமளவில் எஞ்சி இருக்கவில்லை. ----------, ---------, ---------- ஆகிய இடங்களில் மட்டும் எஞ்சி இருந்தனர்."

காசா
காத்து
அஸ்தோது
எருசலேம்
யூதா