1. இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ அடைக்கப்பட்ட பிறகு, யோசுவாவிடம் கடவுள் கூறியது என்ன?
2. கோடிட்ட இடத்தை நிரப்புக: “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொள்ளுங்கள். --------- குருக்களும் -------- எக்காளங்களை ஆண்டவரது பேழைக்குமுன் ஏந்திக்கொண்டு போகட்டும்.”
3. யோசுவா மக்களுக்கு அறிவுறுத்தியவுடன், மக்கள் என்ன செய்தனர்?
4. ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம் கூறியது என்ன?
5. வீரர்கள் எத்தனை நாள்கள் எரிகோ நகரைச் சுற்றிவந்தார்கள்?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: „எல்லா ----------, --------------, ----------------- ஆண்டவருக்குப் புனிதமானவை. எனவே,ஆண்டவரின் கருவூலத்தைச் சேரும்.”
7. ஏழாம் நாள் எரிகோ நகருக்கு நடந்தது என்ன?
8. “விலைமாதின் வீட்டுக்குச் செல்லுங்கள். அவருக்கு வாக்களித்தபடி அங்கிருந்து அப்பெண்ணையும், அவருக்குரிய அனைத்தையும் வெளியே கொண்டுவாருங்கள்.” இது யார் கூற்று?
9. யோசுவா கட்டளையிட்டவுடன் நாட்டின் இரு உளவாளிகள் என்ன செய்தார்கள்?
10. ஆக்கான் – சிறு குறிப்பு வரைக.
11. ஆயி நகரை உளவு பார்க்கச் சென்ற உளவாளிகள் யோசுவாவிடம் வந்து சொன்னது என்ன?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக: "ஆயி நகரின் ஆள்கள் நகரின் வாயிலிலிருந்து செபாரிம் வரை அவர்களைத் துரத்திச்சென்று மலைச்சரிவில் அவர்களில் --------------- பேரைக் கொன்றார்கள்."
13. ஆயி நகரின் ஆள்களுக்கு முன் தோற்றப்பிறகு, யோசுவாவும், இஸ்ரயேல் மக்களும் செய்தது என்ன?
14. ஆயி நகரில் தோற்றப்பிறகு, யோசுவாவின் புலம்பல் என்ன?
15. புலம்பிய யோசுவாவிடம் ஆண்டவர் கூறியது என்ன?