மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 88
வேதாகமப் பகுதி : யோசுவா 3, 4, 5
முடிவுத் திகதி : 2021-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு ----------------- வந்தடைந்தனர்."

கலிலேயா
யோர்தான்
எகிப்து
சீனாய்
பெத்லகேம்

2. "உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்” – இது யார் கூற்று?

மோசே
ஆபிரகாம்
இயேசு
யோசுவா
கடவுள்

3. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"------------------------- தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள்."

யோசுவா
பாறை
கரங்கள்
மக்கள்
உடன்படிக்கைப் பேழை

4. ஆண்டவர் யோசுவாவிடம் மொழிந்தது என்ன?

இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன்
அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு
ஆயினும், உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும்
யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும்

5. யாரிடமிருந்து இஸ்ரயேல் மக்களை ஆண்டவர் காப்பார் என்று யோசுவா சொல்கிறார்?

கானானியர், இத்தியர்
இவ்வியர், பெரிசியர்
கிர்காசியர்
எமோரியர்
எபூசியர்

6. யோசுவா இஸ்ரயேல் மக்களிடம் கூறியது என்ன?

இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள்
வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள்
இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது
இப்போது இஸ்ரயேலின் பன்னிரு குலங்களிலிருந்தும் குலத்திற்கு ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுங்கள்
உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்

7. பாலைநிலக் கடல் எது?

யோர்தான் நதி
கலிலேயா கடல்
சாக்கடல்
இந்திய பெருங்கடல்
கருங்கடல்

8. இஸ்ரயேல் மக்கள் யோர்தான் நதியை அடைந்தவுடன் நடந்தது என்ன?

உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர்
அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.
மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது.
கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல்** வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர்
இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்

9. பன்னிரு நினைவுக் கற்கள் எதை குறிக்கிறது?

பன்னிரு சீடர்கள்
பன்னிரு விலங்குகள்
பன்னிரு பொருட்கள்
பன்னிரு குலங்கள்
பன்னிரு வானதூதர்கள்

10. "உங்கள் கடவுளாகிய ஆண்டவரது பேழைக்கு முன்பாக யோர்தான் நடுவில் கடந்து செல்லுங்கள்." இது யார் கூற்று?

மோசே
கடவுள்
யோசுவா
ஆபிரகாம்
ஈசாக்

11. எத்தனை பேர் போருக்குத் தயாராக ஆண்டவரின் முன்னால் எரிகோ சமவெளிக்குச் சென்றனர்?

ஏறக்குறைய இருபதாயிரம் பேர்
ஏறக்குறைய முப்பதாயிரம் பேர்
ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர்
ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர்
ஏறக்குறைய அறுபதாயிரம் பேர்

12. யோர்தானிலிருந்து எடுத்து வந்த பன்னிரு கற்களையும் யோசுவா எங்கே நாட்டினார்?

கில்கால்
யெருசலேம்
எகிப்து
பெத்லகேம்
கலிலேயா

13. எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ‘ஏன் இந்தக் கற்கள்?’ என்று வினவினால், அவர்களுக்கு தெரிவிக்கவேண்டியது என்ன?

உலர்ந்த தரை வழியாக இஸ்ரயேலர் இந்த யோர்தானைக் கடந்தனர்
உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நாங்கள் கடக்கும் வரை செங்கடலின் நீரை எங்கள் கண்முன் வற்றச் செய்ததுபோல, நீங்கள் கடக்கும் வரையிலும் யோர்தான் நீரை உங்கள் கண்முன் வற்றச் செய்துள்ளார்”
அதனால் உலகின் எல்லா மக்களும் ஆண்டவரின் கை வலிமையுள்ளது என்று அறிவர்
நீங்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சுவீர்கள்
அமைதியாக இருங்கள்

14. யோசுவா இஸ்ரயேலருக்கு எங்கே விருத்தசேதனம் செய்தார்?

எருசலேம்
கிபயத்துகாரலோத்து
இஸ்ரயேல்
யோர்தான்
எகிப்து

15. ஆண்டவரின் படைத்தலைவன் யோசுவாவிடம் கூறியது என்ன?

நீர் எங்கள் பக்கமா? அல்லது எதிரிகள் பக்கமா?
நான் ஆண்டவரின் படைத்தலைவன் என்ற முறையில் இப்பொழுது வந்துள்ளேன்
என் ஆண்டவர் தம் அடியானுக்கு என்ன கூறியுள்ளார்?” என்று கேட்டார்
உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று
ஏனெனில், நீ நிற்கும் இடம் புனிதமானது