1. “இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும்“ இயேசு இங்கு எதை குறிப்பிடுகிறார்?
2. கோடிட்ட இடங்களை நிரப்புக: இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது -----------, -----------, -----------, ----------ஆகியோர் அவரிடம் தனியாக வந்து பேசினர்.
3. “நீர் கூறியவை எப்போது நிகழும்? “சீடர்களின் இந்த கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?
4. இயேசு சீடர்களிடம் எச்சரித்தது என்ன?
5. வரப்போகும் கொடும் வேதனை குறித்து இயேசு கூறியது என்ன?
6. போலி இறைவாக்கினர்களை குறித்து இயேசு கூறியது என்ன?
7. மானிடமகன் வருகை எப்படி இருக்கும்?
8. கோடிட்ட இடங்களை நிரப்புக: விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் ---------ஒழியவேமாட்டா.
9. இயேசு மானிட மகன் வருகையை எந்த உவமையுடன் ஒப்பிடுகிறார்?
10. கோடிட்ட இடங்களை நிரப்புக: அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்------,------ ,------- ,----- எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.
11. பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இயேசு இருந்த போது அங்கு வந்த பெண் செய்தது என்ன?
12. இந்த பெண்ணின் செயலை எதிர்த்தவர்களுக்கு இயேசு கூறியது என்ன?
13. இயேசுவை காட்டிக் கொடுக்க வாய்ப்பு தேடி கொண்டிருந்தவர் யார்?
14. தன்னை காட்டி கொடுப்பவனை பற்றி இயேசு கூறியது என்ன?
15. ஆண்டவர் திருவிருந்தை ஏற்படுத்துதல் எங்கே இடம் பெற்றுள்ளது?