1. இயேசுவின் கொடிய குத்தகைக்காரர் உவமை எந்தெந்த நற்செய்தியில் இடம்பெற்றுள்ளது?
2. திராட்சைத் தோட்ட முதலாளி நெடும்பயணம் மேற்கொள்ளும் முன் என்ன செய்தார்?
3. கோடிட்ட இடத்தை நிரப்புக: அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான --------------- போட்டார்.
4. உரிமையாளர் பருவகாலம் வந்ததும் குத்தகைக்கு விட்ட தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு பணியாளர்களுக்கு கூறி அனுப்பியதும் நடந்தது என்ன?
5. இன்னும் எஞ்சியிருந்த அவருடைய அன்பு மகனுக்கு நடந்தது என்ன?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு ------------- ஆயிற்று. ---------------------நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று.
7. பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க என்ன செய்தனர்?
8. பரிசேயரின் வரி குறித்த கேள்விக்கு இயேசுவின் பதிலென்ன? ஏரோதியர் இயேசுவைக் குறித்து ஏன் வியப்படைந்தனர்?
9. கோடிட்ட இடத்தை நிரப்புக: “சீசருக்கு உரியவற்றைச் ------------- கடவுளுக்கு உரியவற்றைக் --------------- கொடுங்கள்”.
10. உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடையோர் யார்?
11. இறந்து உயிர்த்தெழும்போது எவ்வாறு மனிதர் இருப்பர் என இயேசு கூறுகிறார்?
12. அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்று கேட்டதற்கு இயேசுவின் பதில் எது?
13. மறைநூல் அறிஞரைக் குறித்து இயேசுவின் கருத்து என்ன?
14. ஏழைக்கைம்பெண்ணின் காணிக்கை நிகழ்வு எங்கே இடம்பெற்றுள்ளது?
15. கோயிலுக்கு வந்த ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கைப் பற்றி இயேசு கூறியது என்ன?