மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 83
வேதாகமப் பகுதி : மாற்கு நற்செய்தி 11
முடிவுத் திகதி : 2020-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள எந்த ஊர்களுக்கு வந்தார்?

பெத்பகு
நாசரேத்து
பெத்தானியா
எரிக்கோ
பெத்லகேம்

2. இயேசு இரு சீடர்களை அனுப்பி என்ன கூறினார்?

உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்.
அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.
அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
யாராவது உங்களிடம் „ஏன் இப்படி செய்கிறீர்கள்?“ என்று கேட்டால் „இது ஆண்டவருக்குத் தேவை. இதை அவர் உடனே திருப்பி அனுப்பிவிடுவார் எனச் சொல்லுங்கள்“ என்றார்.
கழுதைக்குட்டி வேண்டாம் என்று சொல்லுங்கள்.

3. நின்று கொண்டிருந்தவர்கள் சீடர்களிடம் கூறியதும், பிறகு நடந்ததும் என்ன?

கழுதை வீட்டு வாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருந்தனர்.
அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், „என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?“ என்று கேட்டனர்.
அவர்கள் இயேசு தங்களுக்கு கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர்.
பிறகு அக்கழுதையைக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.
பலர் தங்கள் மேலுடைகளையும் வேறு சிலர் வயல்வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர்.

4. கோடிட்ட இடத்தை நிரப்புக:

இதுவரை யாரும் அமராத ஒரு ----------------- கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்

ஆட்டுக்கட்டி
மாடு
கழுதைக்குட்டி
கட்டிடம்
யானை

5. இலைதழைகளை வழியில் பரப்பி எவ்வாறு ஆர்ப்பரித்தனர்?

ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக
வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!
இயேசு கிறிஸ்து "வாழ்க"
கடவுளின் மைந்தன் "வாழ்க"
"உன்னதத்தில் ஓசன்னா" என்று ஆர்ப்பரித்தனர்.

6. பன்னிருவருடன் பெத்தானியாவுக்கு புறப்படுவதற்கு முன் இயேசு எந்த ஊர் கோவிலில் நுழைந்தார்?

பெத்லகேம்
நாசரேத்து
பெத்பகு
எருசலேம்
எரிக்கோ

7. பெத்தானியாவை விட்டு இயேசு திரும்பியபொழுது நடந்தது என்ன?

இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று
இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார்.
சென்றபோது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை.
ஏனெனில் அது அத்திப்பழக் காலம் அல்ல.
அவர் அதைப் பார்த்து, "இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது" என்றார்.


8. இயேசு எருசலேம் கோவிலில் சென்றதும் நடந்தது என்ன?

கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்.
நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.
கோவில் வழியாக எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.
என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது என்று அவர்களுக்கு கற்பித்தார்
ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள் என்றார்

9. இயேசுவை ஒழித்துவிடலாம் என்று வழிதேடியோர் யார்?

பரிசேயர்கள்
சதுசேயர்கள்
தலைமைக்குருக்கள்
மக்கள்
மறைநூல் அறிஞர்கள்

10. "ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று" என்று யார் யாரிடம் கூறினார்?

யோவான்
பேதுரு
சீடர்கள்
சீடர்களிடம்
இயேசுவிடம்

11. பட்டுப்போன அத்திமரம் தரும் பாடம் பற்றி இயேசு கூறியது என்ன?

கடவுள் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். எவராவது இந்த மலையைப் பார்த்து, "பெயர்ந்து கடலில் விழு" எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால் அவர் சொன்னவாறே நடக்கும்.
ஆகவே உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். நீங்கள் கேட்டபடியே நடக்கும்.
நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால் மன்னித்துவிடுங்கள்.
அப்போது உங்கள் விண்ணகத்தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார் என்று கூறினார்.

12. எந்த அதிகாரத்தில் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றை செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?

தலைமைக் குருக்கள்
சதுசேயர்
மறைநூல் அறிஞர்கள்
பரிசேயர்
மூப்பர்கள்

13. கோடிட்ட இடத்தை நிரப்புக:

திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் --------------------க்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?

பேதுரு
யோவான்
கடவுள்
மத்தேயு
இயேசு

14. மக்கள் அனைவரும் யாரை ஓர் இறைவாக்கினராக கருதினர்?

இயேசுவை
பேதுருவை
யோவானை
எசாயா
எரேமியா

15. தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் இயேசுவின் கேள்விக்கு பதில் கூறியதும் இயேசுவின் மறுமொழியும் என்ன?

அவர்கள் இயேசுவிடம் "எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்
இயேசுவும் அவர்களிடம் எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன் என்றார்.
கடவுளின் பெயரால் இவற்றைச் செய்கிறேன்
நான் ஒன்றும் செய்யவில்லையே? என்றார்
மௌனமாய் இருந்தார்.