1. இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள எந்த ஊர்களுக்கு வந்தார்?
2. இயேசு இரு சீடர்களை அனுப்பி என்ன கூறினார்?
3. நின்று கொண்டிருந்தவர்கள் சீடர்களிடம் கூறியதும், பிறகு நடந்ததும் என்ன?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக: இதுவரை யாரும் அமராத ஒரு ----------------- கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்
5. இலைதழைகளை வழியில் பரப்பி எவ்வாறு ஆர்ப்பரித்தனர்?
6. பன்னிருவருடன் பெத்தானியாவுக்கு புறப்படுவதற்கு முன் இயேசு எந்த ஊர் கோவிலில் நுழைந்தார்?
7. பெத்தானியாவை விட்டு இயேசு திரும்பியபொழுது நடந்தது என்ன?
8. இயேசு எருசலேம் கோவிலில் சென்றதும் நடந்தது என்ன?
9. இயேசுவை ஒழித்துவிடலாம் என்று வழிதேடியோர் யார்?
10. "ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று" என்று யார் யாரிடம் கூறினார்?
11. பட்டுப்போன அத்திமரம் தரும் பாடம் பற்றி இயேசு கூறியது என்ன?
12. எந்த அதிகாரத்தில் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றை செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?
13. கோடிட்ட இடத்தை நிரப்புக: திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் --------------------க்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?
14. மக்கள் அனைவரும் யாரை ஓர் இறைவாக்கினராக கருதினர்?
15. தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் இயேசுவின் கேள்விக்கு பதில் கூறியதும் இயேசுவின் மறுமொழியும் என்ன?